சனி, 27 நவம்பர், 2010

எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-2)



வேண்டும்! மீண்டும் ஒரு புரட்சி....!

உலகின் வேறெந்த மூலையிலும் நடக்காத அக்கிரமங்கள் ஜனநாயகம் என்னும் பெயரில் இங்கே அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது தேசம் இன்னும் ஜாதி, மதம், மொழி, மாநிலம், நதிநீர் என்று பல்வேறு பிரிவினையை தூண்டும் காரணிகளுக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளின் அலங்காரப்பேச்சிற்கும், அற்ப இலவசங்களுக்கும் அடிமைகளாய் வாழ்வதையே சிரமேற்கொண்டு செய்து வருகிறது. போர்க்குணம் இல்லாத ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட ஒரு மோசமான தன்மையும், ஊர் பற்றி எறியும்போது, 'நல்லவேளை என் வீட்டிற்கெந்த கேடுமில்லை' என்று நினைக்கும் சுயநலத்தன்மைக்கும், கடும் தண்டனை நம்மைப்போல பொது ஜனத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், நம் பாக்கெட்டிலிருந்து 100 ருபாய் திருடிய ஜேப்படி திருடனை கண்டிக்கும் போக்கில் கூட இந்த விஷயங்களை கருதாத இந்தியாவின் தற்போதைய அசட்டுத்தனத்தை என்னவென்றுறைப்பது. 

இந்நாட்டில் எல்லா வளங்களும், நலன்களுமிருந்தும் படித்த எம்மிளைஞர்கள் (தொழிலாளர்களாய்) நாட்டை விட்டும், குடும்பத்தை, சொந்தபந்தங்களை எல்லாம் விட்டும் பணம் சம்பாதிப்பதற்காக இன்றும் வெளிநாட்டிற்கு சென்று (என்னதான் உயரிய வாழ்க்கைமுறையை அனுபவித்தாலும்) இரண்டாந்தர குடிமக்களாக, நவீன உலகின் அனாதைகளாக அலைந்து கொண்டிருப்பதெல்லாம் இவர்களைப்போல ஆக்கச்சிந்தனையில்லாத  அரசியல்வாதிகளின் கைகளினால் எம்நாடு சீரழிக்கப்படுவதினால்தான். இவர்கள் தாங்கள் மனிதர்களாக கருதப்படுவதற்கான எஞ்சியிருந்த கடைசி காரணத்தையும் இழந்துவிட்டார்கள். பிரதமர் 'மன்மோகன் சிங்' ஒருமுறை கூறுகிறார், "யார் மந்திரி ஆகலாம் யார் ஆகா கூடாது என்று தீர்மானிக்க ஒரு சட்டம் வர வேண்டும்". இதுதான் இந்தியாவின் மோசமான தலையெழுத்தும், விதியும் ஆகும். யார் செய்ய வேண்டுமோ அவர்கள் பல காலங்களாக சொல்வதைத்தவிர வேறு எதையுமே செய்வதில்லை. 


இந்திய அரசியலமிப்பின் சில மிக இளகிய கோட்பாடுகளையும், அர்த்தமற்ற சில மரபுகளையும் செவிட்டிலரைந்தார்போல் மிக வன்மையாக உணர்த்திச்சென்ற படிப்பினைகளை பிட்டத்திர்கடியில் போட்டமர்ந்து, அதன் அவசியத்தை மறந்து ஒரு வித மயக்க நிலையிலேயே நாம் லயித்திருப்பதன் விளைவுகளே இந்த ஊழல் சங்கிலிதொடருக்கான மூலமாகும். தாய், தந்தை, மொழி, நிறம் என்று இன்னும் பலவற்றையும் நாம் நமது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கில்லை. ஆனால் நம்மையும் நம் நாட்டையும் வழி நடத்த போகும் நம்முடைய பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பெரிய கடமையும் பெருமையும் உரிமையாக நம் கைகளில் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தி இந்த மாதிரி கொள்ளை கும்பல்களிடமிருந்து நாட்டிற்கு மறு விடுதலை வாங்கித்தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆனால், இன்று பல படித்த இந்திய 'மேதைகள்' வாக்களிக்கும்உரிமையை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்க கொடுக்கப்படும் வாய்ப்பே கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் இடையேதானே, அதற்கு வாக்களிக்காமலேயே இருந்துவிடுவது எவ்வளவோ மேல் என்று. படிக்காத பாமரனோ ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு தனது தார்மீக உரிமைக்கு  அந்த ஐந்து,பத்து ரூபாய்க்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பதுவுமில்லை. இவர்களின் ஆழ்மனதில் படிந்திருக்கும் எண்ணங்கள் களையப்பட  வேண்டுமெனில் அவை தேர்தல் விதிமுறைகள், அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு முறைகளில் நாம் பழமையை உறுதியாக பற்றிகொண்டிருப்பதை விடுத்து, தற்கால நடைமுறைக்கு ஏற்ற வகையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து திருத்துவதன் மூலமே சாத்தியமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டங்களின் பல புனிதத்தன்மையான கொள்கைகளை யாரும் இங்கே குறை சொல்ல வரவில்லை. அந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் ஓரளவிற்காகவாவது  எதற்காகவும், யாருக்காகவும் உருவாக்கப்பட்டதோ அவர்களை சென்றடைய வேண்டுமென்பதே எமது ஏக்கமாகும். மேலும், யார் அதை பொறுப்புடன் கடைப்பிடித்து அதனுடைய உண்மைதன்மையையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்ட வேண்டுமோ அவர்களை மக்களுக்கு அடையாளம்  காட்டுவதிலேயும் அவர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்ற முறைகளிலேயும் சீர்திருத்தங்கள் மிக ஆழமாகவும் பலமிக்கதாகவும் உருவாக்கப்படவேண்டும் என்பதே இங்கு வாதம். அந்த சீர்திருத்தங்கள் மக்களின் மனதில் அரசியலின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பகத்தன்மையை அதிகரிக்கச்செய்யும் விதத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும்.அவைப்போன்ற சீர்த்திருத்தங்கள் மாத்திரமே சுரண்டப்பட்டு சுரண்டப்பட்டு, ஏமாற்றங்களே எஞ்சி நிற்க்கும், ஓய்ந்து சோர்ந்துபோன இந்தியாவையும், இந்திய மக்களையும் இந்த கண்ணியமற்ற  அரசியல் தலைவர்களிடமிருந்தும், அதிகரிகளிடமிருந்தும் காப்பாற்றும். அந்த நல்ல சீர்திருத்தங்கள் மலர வேண்டுமானால் அது ஒரு வீரியமிக்க படையின் தன்னலமற்ற, தளர்ச்சியற்ற தாகத்தினாலுண்டான ஒரு புரட்சியாலேயே ஏற்படுமென்பது திண்ணியம். வீதிக்கு வந்துதான் அதற்கு வித்திட வேண்டுமென்பதுமில்லை. கட்சி, மதம், மொழி, இனம் என்று எந்த பாகுபாடின்றி யார் இந்த மாற்றங்களை, சீர்திருத்தங்களை நமக்கு உறுதி செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நமது ஆதரவும், வாக்கும் என்று நாம் ஒரு கொள்கையுடன் நமது அரசியல்வாதிகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த தருணம் நாம் அவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தருணமாகும். 

காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு கொண்ட இருக்கும் நாம் ஒரு முறை ஒருங்கிணைந்து வீறு கொண்டு எழுந்ததினாலேயே 1947 ல் ஒரு மாபெரும் புரட்சியின் முடிவாய் விடுதலையடைந்தோம். அதன் பின் எமது தேசம் இதுவரை ஒரு தேசத்தின் ஓட்டு மொத்த எழுச்சியை பல தருணங்களில் பதிய தவறியதாலேயே இன்று நமக்குள்ளேயே ஒரு கூட்டம் நம்மை அடிமைகளாக்கி ஆண்டு வருகிறது. இதோ எனது இணைய நண்பர் ஒருவரின் ஒப்பற்ற வரிகளை உற்று கவனிப்போம்.  ஆம்.. அதற்க்கான தருணம் வந்துவிட்டது. 

புறப்படு...! புரட்சியை கையிலெடு...!
உன்னாலே ஒரு மாற்றம் உண்டாகட்டும்...!
இனி வரும் உன் இந்தியச்சந்ததிக்காக ...!


நண்பர்களே....! 
இதோ இந்த எனது கன்னிப்பதிவை கருவாக்கி வெளியிடும் வெறும் இரண்டு நாள் இடைவெளிக்குள்ளாகவே இந்தியாவில் இன்னும் ஒரு அதிர்ச்சி தரும் ஊழல் குற்றச்சாட்டு; அதுவும், தேசத்தின் ஏழை, எளிய, மத்தியதர மக்களின் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ளதும், நாடிதுடிப்பென்று கருதப்படுவதுமான  "Life Insurance Corporation of India" விலிருந்து.  

எம்முண்டாசு கவி பாடிச்சென்ற வரிகள் ஈட்டியாய் நம் மனதில் 
நெஞ்சு பொறுக்குதில்லையே..!
இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...!




(படம் தந்த கூகுள்'க்கு நன்றி) 
--விளையாடும் வெண்ணிலா....

7 கருத்துகள்:

pichaikaaran சொன்னது…

இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்

ஹரிஸ் Harish சொன்னது…

நண்பா..பாலோயர் விட்ஜட் எங்க?

ஹரிஸ் Harish சொன்னது…

word verfication ஐ எடுத்துவிடுங்கள்..

Sathish Kumar சொன்னது…

கருத்தையொத்த கருத்துரைக்கு மிக்க நன்றி, பார்வையாளரே...!

Sathish Kumar சொன்னது…

மாப்பு கேட்டுக்கறேன் "மாப்ள சார்...!"
உங்க ரெண்டு கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றியாச்சுங்கன்னோவ்...!
வருகைக்கு முதல் நன்றி...!
குறுகிய காலத்தில், உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை விட தொடர்வர்கள் அதிகம்ம்... வாழ்த்துக்கள் மாப்ள...!

ஹரிஸ் Harish சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி சதீஷ்

ஹரிஸ் Harish சொன்னது…

தொடர்ந்து எழுதுங்க..

கருத்துரையிடுக