tag:blogger.com,1999:blog-39378602917203854732024-03-13T22:28:28.864-07:00விண்ணோடும்...முகிலோடும்...!மனசாட்சியின் எழுத்தாணிSathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-30771832306777466852016-08-13T03:31:00.000-07:002016-08-13T20:37:57.004-07:00பாட்டி...!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரெங்கா பாட்டி என்று தான் அந்த தெரு முழுக்க பரிச்சயம். கோட்டோவியம் போல் மிக மெல்லிய உருவம், நைந்து போன நார் போன்ற அடர்த்தியற்ற முடியில் சின்னதாய் ஒரு கொண்டை, ஒரு கையளவுக்கும் சற்றே கூடுதலான நீள்வட்ட முகம், தெற்றுப்பல், ஒடுங்கிய கன்னம்...இது தான் ரெங்கா பாட்டி. எழுபதை கடந்த சோர்வு அவள் முகத்திலோ செயலலிலோ தென் படவே படாது. யார் பார்த்தாலும் முதலில் ஒரு பரிதாபமும், பின் வாரி அணைத்து கொள்ள வேண்டும் என்ற அன்பும் உடனே தோன்றும் ஒரு ஜீவன். பாட்டிக்கு பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், எதிரி என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது, எல்லோரும் ஒன்றே! யார் வந்து எது கேட்டாலும், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிடுவாள். அடுத்தவர் கஷ்டம், பசி பொறுக்க மாட்டாள்.<br />
<br />
ரோஷக்காரிதான்....என்றாலும் அவளை பிடிக்காதவரும் உண்டா என்ன...! அவள் தூங்கி பார்த்திருக்க மாட்டார் யாரும். ஒரு நிமிடம் ஓய்வென்று இருக்க மாட்டாள். கோழி கூவும் முன்பே விழித்துவிடும் அவள் கண்கள். அனைவரும் அடங்கியபின் தான் ஓரிடத்தில் நிலை கொள்ளும் அவள் கால்கள். இரு மகள்களை கட்டி கொடுத்து, மகன்களுக்கு மணமுடித்து மருமகள்கள் வீடடைந்த பின்னும் கூட கருக்கலில் குளித்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, பாத்திரம் துலக்கி, தண்ணீர் பிடித்து, மூன்று மகன் வயிற்று பேரன் பேத்திகளுக்கு தேநீர், சிற்றுண்டி தயாரித்து, தாத்தாவிற்கு வெந்நீர் வைத்து என்று நீளும் அவள் காலை பணிகள். அவள் தன சின்னஞ்சிறிய வயிற்றுக்கு சிறிது தீனி போட அது ஆகும் பகல் 11 அல்லது 12. துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாரேனும் வாடிய முகத்தில் வாசல் நின்றால் தன் ஒட்டிய வயிறை பாராமல் உணவை வந்தவர்க்கு ஈந்து விடுவாள் பாட்டி. மூன்று வேளையும் நிற்காமல் ஓடி கொண்டே இருப்பாள். தன்னை பற்றி கொஞ்சமும் நினைக்கமாட்டாள். ஆச்சரியம் என்னவென்றால்....இப்படி தன் வயிற்றை பார்க்காமலேயே வற்றலாகி வெறும் கூடாய் போன அவ்வுடம்பில் எங்கிருந்துதான் நாளெல்லாம் பாடுபட தெம்பு வருகிறதோ தெரியவில்லை.<br />
<br />
தாத்தாவும், மகன்களும், மருமகள்களும் சரி....இந்த ஜீவனின் நிலையை யாரும் உணர்ந்ததும் இல்லை, பொருட்படுத்தியதும் இல்லை. அவளும் அது வேண்டும், இது வேண்டும் என்றோ....,"எனக்கு யார் இருக்கா", என்று ஏக்கமோ அங்கலாய்ப்போ எதுவும் செய்வாள் இல்லை. பகல் உச்சிப்பொழுதில் நெல், கடலை, மிளகாய், உளுந்து என்று எதையாவது புடைத்து வாசலில் காயவைத்து கொண்டிருப்பாள். அவள் முறத்தில் தானியங்களை புடைக்கும் அழகே தனி. ஒவ்வொரு முறை தானியங்கள் முறத்தை விட்டு மேல் எழும்போது விரல்களால் முறத்தை தட்டி ஒரு ஓசை எழுப்புவாள். தானியங்கள் மேலெழும்போது அவளுடைய புருவங்களும் ஜோடியாக மேலெழும்பும். தானியங்கள் மீண்டும் முறத்தில் தங்கி பதறும், தோலும் தனியே பிரிந்து கீழே விழும்போது 'உச், என்று ஒரு ஓசை கொடுப்பாள். ஒவொவொரு புடைத்தலிலும் தன் விரல்கள், புருவங்கள், உதடுகள், கைகள் கொண்டு இப்படியொரு தேர்ந்த அபிநய கச்சேரியே நடத்திக் காட்டுவாள். பார்க்கவே அலாதியாய் இருக்கும்.<br />
<br />
ஓய்வென்று சிறிது நேரம் கிடைத்துவிட்டால், நாளிதழ்களை படிக்க தொடங்கிவிடுவாள். தேதியோ வருடமோ அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவளை பொறுத்த வரையில் வாசிக்க வேண்டும். அதற்குமேல் அருகில் சென்றால் நாளிதழ் கண்ணை குத்திவிடும் என்னும் அளவுக்கு கண்களுக்கு அருகில் நாளிதழை வைத்து தன் ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி கூட்டி ஒரு குழந்தையை போல் படிப்பாள். ஓய்வுபெற்ற அரசு பள்ளியின் ஆசிரியரான தாத்தா தன் கண்களையும், கண்ணாடியையும் பாதுகாத்து கொள்ளும் சிரத்தையில் கால் பங்கு கூட பாட்டியின் பார்வை குறைவில் காட்ட மாட்டார். அவள் சோர்வடையும் வரை தொடரும் இந்த வாசிப்பு. படித்த செய்தியை அருகில் யார் இருந்தாலும் சொல்லி நியாயம் பேசுவதும் உண்டு. பெரும்பாலும் அக்கம்பக்கத்தில் உள்ள அவள் வயதை ஒத்த நண்பர்களிடம் தான் இந்த பகிர்தல் இருக்கும். அவர்களும் அது எந்த காலத்து செய்தி, எப்போது நடந்தது என்ற விவரங்களை எல்லாம் பற்றி கவலைபடாதார் தாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-FOjtgqKQtRE/V671diUwuQI/AAAAAAAAA7E/22nC8o-cdP0amVoNjEl_sxncc2n1l6EpgCLcB/s1600/20160813_182112.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://2.bp.blogspot.com/-FOjtgqKQtRE/V671diUwuQI/AAAAAAAAA7E/22nC8o-cdP0amVoNjEl_sxncc2n1l6EpgCLcB/s320/20160813_182112.png" width="251" /></a></div>
<br />
மாமியார் மருமகள்கள் சண்டை அற்ற ஒரே குடும்பம் பாட்டியின் குடும்பமாக தானிருக்கும். பாட்டியை யாருக்கும் விரோதமாய் பாவிக்க மனம் வரவே வராது. 'அது ஒரு அப்பிராணி, ஒரு ஈ, எறும்புக்கு கூட கேடு நினைக்காத உசுரு' என்பார்கள் மருமகள்களும். பாட்டிக்கு பேரன் பேத்திகள் மேல் அளவுகடந்த பாசம். அவளுக்கு பேரப்பிள்ளைகளில் எல்லோருமே ஒன்றுதான். மாலை வேளைகளில் அனைவரும் பாட்டியை சூழ்ந்துகொண்டு பாடம் படித்து கொண்டும், கதைகள் கேட்டுக்கொண்டும், அவள் மடியில், தோளில் தொங்கிக்கொண்டும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். காக்கா கதை, குருவி கதை, சிங்கம் கதை, குதிரை கதை, ராஜா கதை என்று ஏகப்பட்ட கதை கூறுவாள். கதைகள் கேட்டுக்கொண்டே ஒவ்வொன்றாய் தூங்கிவிடும். ஒவ்வொரு கதையிலும், குழந்தைக்கான அம்சமும், நன்னெறிகளும் இருக்கும். சொர்க்கமாய் திகழும் அந்த மாலை வேளைகள்.<br />
<br />
பட்டணத்தில் வசிக்கும் மகள் மேல் தாத்தா, பாட்டி என்று அனைவரும் உயிராய் இருப்பார்கள். வாரிசுகள் தங்காமல் போன வேதனையால் வேண்டி, தழைத்த முதல் வாரிசு என்பதால் மிகுந்த பாசத்தோடு வளர்த்தார்கள். மருமகன் மேல் மிகுந்த மதிப்பும் பாசமும் கொண்டிருந்தார்கள். என்னவோ சில காரணங்களால் தாத்தவிற்கும் பட்டணத்து மகள் குடும்பத்திற்கும் சிறு உறவுச்சிக்கல். தவறென்னவோ தாத்தாவின் மேல்தான். ஆதலால் சிறிது காலம் பேச்சுவார்த்தையோ, போக்குவரத்தோ இன்றி இருந்த நேரம் அது. பாட்டிக்கு தன் மகளையோ, பேரப்பிள்ளைகளையோ பார்க்காமல் இருப்பு கொள்ளவில்லை, துடித்துதான் போனாள். ஒருநாள் நெய்முறுக்கு , அதிரசம், சத்துருண்டை, லட்டு என்று தன் கையாலே அனைத்தையும் செய்து, சோளம், கம்பு, கேழ்வரகு என்று நகரத்தில் கிடைக்காத தானியங்களையும் கட்டி எடுத்துக்கொண்டு தாத்தாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.<br />
<br />
மகளின் கோபமோ இத்தனை காலங்களில் தீரவேயில்லை, ஆதலால் இவர்களை ஏற்றுக்கொள்ளவே இல்லை. மனைவியின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து நல்லிதயம் கொண்ட மருமகனும் அவளை தடுக்கவும் இல்லை. மிகவும் அழுது கொண்டே , பேரப்பிள்ளைகளையாவது பார்த்து செல்கிறோமே....என்று கெஞ்சினர். அதெல்லாம் கூடாது அவர்கள் பள்ளி சென்றிருக்கிறார்கள் என்று கூறிவிட்டாள் மகள். பேரப்பிள்ளைகள் பச்சிளம் பாலகர்கள்; பள்ளி சென்றிருந்தனர். இந்த இரண்டு தொண்டு கிழமும், அக்கம்பக்கத்தில் பேரப்பிள்ளைகள் படிக்கும் பள்ளியை விசாரித்து, மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே அந்த உச்சி வெயிலில் பள்ளியை அடைந்தனர்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-6CIPp0p9ucQ/V67nfEZDUrI/AAAAAAAAA60/W3aON6FjzMArIKISFblVObRy5zWcXFcTACLcB/s1600/20_open_page_jpg_760315f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="296" src="https://1.bp.blogspot.com/-6CIPp0p9ucQ/V67nfEZDUrI/AAAAAAAAA60/W3aON6FjzMArIKISFblVObRy5zWcXFcTACLcB/s320/20_open_page_jpg_760315f.jpg" width="320" /></a></div>
<br />
வியர்க்க விறுவிறுக்க, இரண்டு முதியவர்களை மூட்டை முடிச்சுகளுடன் கண்டதும் ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் குழப்பமாய் இருந்தது. அப்பள்ளியின் தாளாளர், மகளின் சிறுவயது தோழி. இவர்களின் வியர்வை வடிந்து, சோர்வுற்று, வேதனையால் வாடிப்போயிருக்கும் முகத்தினை கண்டதும், தாங்கமாட்டாமல், உள்ளழைத்து தன் அறையில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தினாள். பேரக்குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டு கண்ணீர் விட்டு துடிக்கும் இரு வயதான தம்பதிகளை பார்த்து அருகில் இருந்த ஆசிரியர்கள் யாவரும் கலங்கி விட்டனர். ஒரு ஆசிரியர் சென்று குழந்தைகளை அழைத்து வந்தார். இத்தனை நாட்கள் கழித்து பேரப்பிள்ளைகளை கண்டதும், பாட்டி வாரி அணைத்துக்கொண்டு முத்தமிட்டு அழுததும், அவள் பாடிய பாட்டும், இப்போதும் அந்த பள்ளியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். தான் ஆசையாசையாய் செய்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து ஒவ்வொவொரு குழந்தைக்கும் அழுதுகொண்டே, பாடிக்கொண்டே, ஊட்டிக்கொண்டே இருந்தாள். குழந்தைகளும் பாட்டி அழுவதை பார்த்து தாங்களும் அழத்தொடங்கிவிட்டனர். கண்ணீர் தரை நனைத்தது. அந்த பாசப்போராட்டத்திலிருந்து மீள முடியாமல் ஊர் திரும்பினர் இருவரும்.<br />
<br />
இதோ காலங்கள் ஓடி விட்டது. ஓய்வன்றி உழைத்த தன்னிகரில்லா பாட்டி சில வருடங்களுக்கு முன்னர் மறைந்து விட்டாள். தாத்தா ஒரு இரும்பு மனிதர், அவர் அழுது மற்றவர் பார்த்தது அன்றுதான் முதலும், கடைசியும். "என் அம்மா என்னை விட்டு போயிடிச்சா",....என்று அவர் வெடித்து அழுத்தது, தன் ஆழ்மனதில் பொதிந்திருந்த இத்தனை ஆண்டுகால தங்களின் வாழ்க்கையின் பிரதிபலிப்பே. "இருக்கும் போது கிழவி அருமை தெரியலை, போனதுக்கப்புறம் அழுது துடித்தென்ன பயன்", என்ற வார்த்தைகளும் கேட்காமலில்லை. தாத்தாவிற்கு, பாட்டி இல்லாமல் நாட்கள் நகர்வது வெறுப்பாய் இருந்தது. இந்த துக்கத்திலேயே அவரும் அடுத்த சில வருடங்களில் போய் சேர்ந்துவிட்டார்.<br />
<br />
<br />
குடும்பம் விரிவடைந்துவிட்டது, பேரப்பிள்ளைகளே குழந்தை பெற்றுவிட்டனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக தொழில், உத்தியோகத்தின் காரணமாக நாலா திசைகளுக்கும் பறந்து போனாலும், முடிந்தவரை தாத்தா, பாட்டியின் நினைவு நாளுக்கு மட்டுமாவது அனைவரும் கிராமத்தில் ஒன்று கூட முயல்வர். இன்று பாட்டியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தனர். பூஜை முடித்து, குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி பற்றிய நினைவுகளை எடுத்து சொல்லி அவர்களை போல நாம் வாழ வேண்டும் என்று போதிப்பது வாடிக்கை. குழந்தைகளும் தங்களின் கொள்ளுத்தாத்தா, பாட்டி பற்றி ஆர்வமாய் கேட்பார்கள்.<br />
<br />
சின்னஞ்சிறிய மழலை ஒன்று தன் அம்மாவிடம் கேட்டது, "சாமின்னா என்னம்மா".<br />
சாமின்னா, எல்லாருக்கும் நல்லது செய்யும், யார் என்ன கேட்டாலும் கொடுக்கும், நல்ல அறிவை கொடுக்கும், எல்லாரையும் பத்திரமா பாத்துக்கும், அது தான்மா சாமி", என்றாள் அந்த வாண்டின் தாய்.<br />
<br />
"அப்போ பிள்ளையார் சாமியா?", என்றது அந்த பிஞ்சு.<br />
<br />
"ஆமாடா, முருகன், சிவன், பிள்ளையார், எல்லோரும் சாமி தாண்டா", என்றாள் தாய்.<br />
<br />
"அப்போ நம்ம பாட்டியும் பிள்ளயார் மாதிரி தானே.....!!".<br />
<br />
சில நொடிகள் அடர்ந்த அமைதி நிலவியது அங்கே. பாட்டியின் மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி மூன்று பெரும் ஒரே நேர்கோட்டில். பாட்டியின் மகளின் கண்களில் தரதரவென்று கண்ணீர். ஆத்தா, அம்மாவாகி இன்று மம்மி என்று உருமாற்றம் பெற்றிருப்பதில் தொடங்கி, பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை கண்டுவிட்ட மூன்று தலைமுறையும் ஒத்து நின்றார்கள் <span style="background-color: cyan;">"<b>ஆமாம்....பாட்டியும் சாமி தான்...!!!"</b></span><br />
<br />
<span style="background-color: white; font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 13px; line-height: 18px;">(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)</span><br />
<span style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com0Sarawak, Malaysia4.399493 113.991383199999972.3722684999999997 111.40959619999997 6.4267175 116.57317019999998tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-71485626268378916162011-10-01T01:23:00.000-07:002016-08-13T20:37:16.675-07:00மரணம் மரிப்பதில்லை இம்மண்ணில்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
சியோலிலிருந்து சிதம்பரம் நோக்கிய மற்றுமொரு விடுமுறைப்பயணம். கடந்த விடுமுறைப் பயணத்தில் பாதியிலே விட்ட அதே புத்தகத்தை இந்த பயணத்தில் கவனமாக எடுத்து வைத்தேன், படித்து முடித்துவிடலாம் என்று மிக நம்பிக்கையாக. ஆனால் நம்பிக்கை துரோகம் இழைத்து நீண்ட இப்பயணத்தை தூங்கியும், சில பாலிவுட் மசாலா படங்களைப் பார்த்தும் கடந்தேன். என்னவோ தெரியவில்லை புத்தகம் படிக்க அனேக நேரங்கள் கிடைத்தாலும், குரங்கு மனம் என்னவோ அம்மரத்தை பற்றிப் பிடிப்பதே இல்லை. விமானப் பயணங்களும் வர, வர வெறுப்பை கொடுக்கின்றன. ஆனால் பகிர்வதற்கு விதைகளாய் அற்புதமான அனுபவச் சம்பவங்கள் கிடைப்பது இந்த விமானப் பயணங்களில் தான். இம்முறை குறிப்பாக இரு நிகழ்வுகளும் அவை எனக்கு உணர்த்திச் சென்ற சில குறிப்புகளும் இங்கே.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
முதலானது, ப்ளாட்டிலிருந்து விமான நிலையம் வரையிலான டாக்சிப் பயணத்தில் கிடைத்த கொரிய ஓட்டுனரின் நட்பும், அவருடனான அரை மணி நேர உரையாடல்களும். அவர் பெயர் லீ. நாற்பதுகளின் மத்தியில் வயது. ஒரு கால் சற்றே ஊனம், தாங்கி தாங்கித்தான் நடக்கிறார். இரு பள்ளி செல் ஆண் குழந்தைகள். மனைவி வீட்டு வேலைகளை பார்த்து கொள்கிறார். மிகவும் சந்தோஷமான ஆச்சரியம்-அந்த அதிகாலை ஆளரவமற்ற வேளையில், ஆங்கிலத்தை புரிந்து கொண்டு சற்று தெளிவான பதிலையும் கொடுக்கக் கூடியவராய் அவர் இருந்தது தான். அகல சிரித்து எனது ஆச்சரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் அதிரச் சிரித்தார். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
லீ சியோல் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, சில காலம் தனியார் நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றியும் இருக்கிறார். பின்னர், கிடைக்கும் வருமானம் மிக சொற்பமாய் தோன்றவே அந்தப் பணியை உதறி விட்டு டாக்சி ஓட்டுனர் அவதாரம் எடுத்திருக்கிறார். பேச்சு அவருடைய தற்போதைய மாத வருமானம் பற்றி திரும்பியது. <b>"<i>கிடைக்கும் வருமானம் எனது மகன்களின் படிப்புச் செலவுக்கே சரியாக இருக்கிறது, என் நாட்டின் அரசியல்வாதிகள் போடும் திட்டங்களும், அதன் பயன்களும் லட்சாதிபதிகளை கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரம ஏழைகளாகவும் தான் ஆக்குகின்றன. அரசியல்வாதிகள் மிகப் பெரிய ஊழல்வாதிகளாய் இருக்கின்றார்கள்</i>", <i>என்று விரக்தியுடன் கூறினார் ஒரு சராசரி இந்திய டாக்சி ஓட்டுனர் தலைநகரான டில்லியில் ஈட்டும் மாத வருமானத்தைக் காட்டிலும் 15-20 மடங்கு அதிகம் ஈட்டும் இந்த கொரிய ஏழை டாக்சி ஓட்டுனர் :-)</i></b> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<b>தென் கொரியா</b><b>-<span style="font-size: small;">Samsung, Hyundai, LG, Lotte, </span></b><span style="font-size: small;"><b>Fila, GS</b> </span>என்று இன்று தனது நிறுவனங்களால் உலகை ஸ்திரமாக முற்றுகை இட்டிருக்கும் ஆசியப் புலிகளுள் ஒன்று. உலகத்தின் மிகச் சக்தி வாய்ந்த பொருளாதார மையமாய் கடின உழைப்பால் பலரையும் பின்னுக்கு தள்ளி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தேசம். ஒரு முனையிலிருந்து வெறும் நான்கே மணி நேரத்தில் தென் கொரிய நாட்டின் இன்னொரு முனைக்கு சாலை வழிச் சென்று விடலாம்; விமானப் பயணம் என்றால் வெறும் 55 நிமிடங்கள்தான். அவ்வளவு மிகச் சிறிய நாடு. இந்நாட்டின் முப்பதாண்டு கால எழுச்சியை "The Miracle of Han River" என்றே குறிப்பிடுகிறது வையம். அப்படிப்பட்ட தேசத்திலும் ஒரு பாட்டாளியின் வேதனையான வார்த்தைகள் "அரசியல்வாதிகள் எங்கும் அரசியல்வாதிகள் தான்" என்றே நினைக்கத் தோன்றியது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பின் சுதாரித்தவராய், "அனைவரும் ஊழல்வாதிகள் இல்லை, மிகச் சொற்பமானவர்களே, உங்களுக்கே தெரியும் இன்றைய கொரியாவின் ஏற்றமிகு பொருளாதார வளர்ச்சி..." என்று கூறி ஒரு டிபிகல் தேசபக்தி கொரியராய் மறுவிளக்கம் கொடுத்தார் லீ. ஏறக்குறைய உண்மையும் அதுதான். ஊழல் என்பது கண்ணுக்கே தெரியாத அளவு தான் அங்கே, தெரிந்து விட்டால் "பதவியைத் துற..." என்று யாரும் வாய்த் திறவும் முன்னரே உயிர் துறவும் விவரமற்ற (இந்திய பாஷையில்) ஆட்கள் தான் கொரிய அரசியல்வாதிகள். லீ கனிவான மற்றும் மிகப் பணிவான விடை கொடுத்தார். </div>
</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-vJMHHcbpCGg/TobKmcIEE1I/AAAAAAAAAg0/abx8G4AJaZw/s1600/bareilly_shop_fire_630.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://3.bp.blogspot.com/-vJMHHcbpCGg/TobKmcIEE1I/AAAAAAAAAg0/abx8G4AJaZw/s400/bareilly_shop_fire_630.jpg" width="400" /></a></div>
</div>
<div style="text-align: left;">
<br />
இரண்டாவது நிகழ்வு. வாயில் எண் ஒன்பது வழியாக "இஞ்சியான்" விமான நிலையத்திற்குள் நுழைந்தேன். போர்டிங் பாஸ் பெற கவுன்ட்டர் K'ஐ நெருங்க, எனது வலப் புறத்தில் யாரோ என்னைப் பார்த்து சிரிப்பது போன்றும், வரவேற்று தலையை அசைப்பது போன்றும் தெரிய, நிதானித்து அவர் நோக்கி பார்வையை திருப்பினேன். அவர் நன்கு சிரித்தார் இப்பொழுது, நானும் சிரிப்பை பகிர்ந்தேன். எழிலாய் உடையணிந்திருந்த, கருத்த மெல்லிய தேகம் கொண்டவராய் இருந்தார். பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் கொரியாவில் பணி செய்வதால், அவர் ஒரு பங்களாதேஷியாக இருப்பாரோ என்று எண்ணிக் கொண்டே அவர் இடம் அடைந்தேன். </div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<br />
<div style="text-align: left;">
அவர் என்னிடம் ஏதோ கேட்க, எனக்கு புரியாமல் மறுபடியும் விளிக்குமாறு கூறினேன். அவர் மறுபடியும் கூற, இப்போதும் எனக்கு விளங்கவில்லை. அது ஏதோ வேறு மொழியாய்த் தோன்றியது எனக்கு. ஆங்கிலமும் இல்லை ஹிந்தியும் இல்லை. ஓரளவு வங்காள மொழியும் எனக்கு தெரியும் ஆதலால், அவர் பேசியது வங்காளமும் இல்லை என்று உணர்ந்து கொண்டேன். ஆக, அவர் இந்தியரும் இல்லை, பங்களாதேஷியும் இல்லை. இங்கே கொரியாவில் பாகிஸ்தானியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாணிபம் செய்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு சராசரி வட இந்தியர் பேசும் ஹிந்தியை விட அற்புதமான, தூய்மையான ஹிந்தி பேசுபவர்களாக இருப்பார்கள். ஆக இவர் பாகிஸ்தானியும் இல்லை.<br />
<br />
இலங்கையை சேர்ந்தவராக இருப்பாரோ..?! ஏனெனில், இங்கே இலங்கையிலிருந்தும் கடின பணிகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். பின்னர் அபூர்வமாய் அவருடைய சம்பாஷணையில் இங்கும் அங்கும் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு அவர் பெயர் <i> சரத் ஏதோ ஒரு 'கா' , <b>(</b><b>ஆனால் 'பொன்சேகா' அல்ல)</b></i> என்பதும், சிங்களவர் என்பதும், பேசியது சிங்கள மொழி என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் சிங்களம் அறியேன் என்று அவரிடம் தெரிவித்தும், அவர் சிங்கள மொழியிலேயே வாசித்துக் கொண்டிருக்க, எனக்கு கிர்ரென்று இருந்தது. ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி அல்லது கொஞ்சம் கொஞ்சம் கொரிய மொழி என்று இவற்றில் ஏதாவது சம்பாஷிக்க வருமா என்று கேட்டதற்கு உதட்டை பிதுக்கினார். பின்னர் நடந்த சைகைச் சுற்றுகளில், அவர் நான்கு வருடங்களாக கொரியாவில் பணி செய்வதையும், இப்போது இலங்கைக்கே சென்று தனது குடும்பத் தொழிலை கவனிக்க போவதாகவும் தெரிந்தது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சிங்களம் தவிர வேறு மொழி அறியாமல் அவர் கொரியாவில் பணி செய்தது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது எனக்கு. அந்த மிகக் குறைந்த ஆங்கில அறிவை வைத்தே பிழைத்திருக்கிறார் மனுஷன். வெறும் "ரூபவாஹினியை" வைத்து கொண்டு எப்படி நான்கு வருடங்கள் இங்கே காலம் தள்ளினீர்கள்...என்று ஆங்கிலத்தில் நான் விசாரித்தால் ஏதோ 'கைமாத்தா ஐம்பது லட்சம் கொடுங்கள்' என்று கேட்டதைப் போல அவர் ஒரு அதிர்ச்சிப் பார்வை பார்க்க, எனக்கு எப்படா இந்த அறுவைகிட்டே இருந்து தப்பிப்போம் என்று ஆகிவிட்டது. எகிறி 'Internet Zone' சென்று அமர்ந்தேன். அவர் நிலை கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது. இருந்தாலும், நான் செல்லும் அதே விமானத்தில்தான் அவரும் பயணிக்கிறார் என்ற செய்தி வேறு என்னை உச்சத்திற்கு அச்சுறுத்தவே, அவரை மனதில் ஒரு மூலையில் வெறுத்து ஒதுக்கி இன்டர்நெட்டில் மூழ்கினேன். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
போர்டிங் செய்ய இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. Internet Zone'ஐ விட்டு வெளியேறி போர்டிங் கேட்டை அடைந்தேன். கூட்டமின்றி காணப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தூரத்தில் ஒருவர் என்னை பார்த்து கையசைத்தபடியே என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். "Oh My God...அதே சரத்' தான்...! கவனியாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டேன். வேகமாக வந்து, Gate....Change, Gate....Change....என்று பதட்டத்துடன் கூறினார். நான் பதறாமல், கேட் இதுதான் என்று கூற, Gate....Change, Gate....Change....என்று மறுபடியும் கூறி என் கைப் பற்றி இழுக்க நான் சற்று எரிச்சலடைந்தேன். பின்னர் தான் தெரிந்தது, நான் செல்ல வேண்டிய விமானத்தின் போர்டிங் கேட் எண் மாற்றப்பட்டு விட்டது என்று. கபடமில்லாமல் என் கைப்பற்றி இழுக்கும் அந்த கறுப்புத் தோழனின் சிரிப்பு என்னை சவுக்கால் அடிப்பதை போன்று இருந்தது. அவரை தவிர்த்த என் செய்கை என்னை வெட்கித் தலை குனியச் செய்தது. இன்று அவரின் நினைவாக என்னிடம் இருப்பது அவரின் அந்த சிரித்த முகமும், அவருடைய பெயரும் தான். </div>
<div style="text-align: left;">
<br /></div>
இவ்விரண்டு சம்பவமுமே ஒரு வெளிநாட்டவர், ஒரு இந்தியனிடம் நடந்து கொண்ட விதத்தை உரைப்பனவாய் இருக்கின்றன. உள்ளே...., நமது தேசத்தின் உள்ளே என்ன நடக்கிறது. நிலம், நீர், மொழி, மதம், சாதி என்று பிரிந்து பகைமை பாராட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டும், சுட்டுக் கொண்டும் சாகிறோம். இதன் விளைவுகளால் நாம் இழப்பது எத்தனை விலை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத உயிர்கள் என்பதை நாம் உணர்வதே இல்லை. <br />
<br />
"போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலி" என்ற செய்தி ஆறாத ஒரு ரணத்தை மறுபடியும் கூராயுதம் கொண்டு கீறி சென்றிருக்கிறது. கோபம், ஆற்றாமை, சலிப்பு, வேதனை, விரக்தி, குழப்பம் என்று ஒரு வித தவிப்பு கலந்த அதிர்வுகளால் மற்றொருமுறை இதயம் தனது துடிப்பை நிறுத்தி சென்றிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் கடந்த வாரத்தில் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரபப்பாகிய அந்த காட்சி <b><span style="background-color: #6fa8dc; font-size: small;"><span style="background-color: #6fa8dc;"></span>"</span><span class="Apple-style-span" style="background-color: white; font-family: sans-serif; font-size: small; line-height: 19px;"><span style="background-color: #6fa8dc;">Tamils have been referred to as the last surviving </span><u style="background-color: #6fa8dc; color: red;"><i><a class="mw-redirect" href="http://en.wikipedia.org/wiki/Tamil_people" style="background-image: none; text-decoration: none;" title="Classical civilization">Classical Civilisation</a></i></u><span style="background-color: #6fa8dc;"> on Earth"</span> (Citation: <i>Wikipedia</i>)</span></b> என்ற அந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மையை எள்ளி நகையாடிச் சென்றிருக்கிறது.</div>
</div>
<div style="text-align: left;">
<br />
இந்நூற்றாண்டிலும் மனிதர்கள் சாதி, மதம் என்று பிரிவினை பேசி வாழ்ந்து வருவதும், அதன் பெயரால் செத்து மடிவதும், இத்தேசத்தில் மனித உயிர்கள் தாம் மிக மலிந்த பொருட்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது நம் தமிழ் பூமி. <i><b>"செய்யும் தொழிலால் நீங்கள் சாதியை பிரித்தீர்களானால், ஒரு சராசரி இந்தியப் பொறியாளன் இங்கே வாழும் வாழ்க்கைமுறையையும், ஈட்டும் பொருளையும் விட மேம்பட்ட வாழ்வு வாழும் எனது கொரிய செருப்பு தைக்கும் தொழிலாளியையும், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியையும் எந்த வகையில் அடக்குவீர் நீங்கள்...?"</b></i>- எனது கொரிய சக பணியாளரின் இக்கேள்விக்கணை எனது இந்திய தேசத்தின் பொய்ப்பெருமையையும், எனது தமிழ் நாகரீகத்தின் சில போலித்தன்மையையும், டாம்பீகத்தையும் செருப்பால் அடித்து செல்கிறது. </div>
<br />
<div style="text-align: left;">
<i><b>சாதியை மனதில் இருந்து அகற்றி, மதத்தை பூஜை அறைக்குள் நிறுத்தி, மனிதனாய் தெருவீதிகளில் நடக்க பழகிடாத இத்தேசம் தான் எனது வேர் என்பதை நினைத்தால் விஷமருந்த எத்தனிக்கிறது நெஞ்சம். </b></i></div>
<div style="color: red; text-align: left;">
<b><br />
</b><br />
<div>
<br /></div>
<div style="color: black;">
(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)</div>
<b> --விளையாடும் வெண்ணிலா....</b></div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com24Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-24001118123531312022011-06-04T02:01:00.000-07:002016-08-13T20:38:24.711-07:00அப்புக்குட்டியும் ஆமைமுட்டையும்...!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-coIL564FrH4/TenqUv5lTbI/AAAAAAAAAc4/e7v8AZS4_-o/s1600/Bowling+ball+is+invented+in+1862..jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://2.bp.blogspot.com/-coIL564FrH4/TenqUv5lTbI/AAAAAAAAAc4/e7v8AZS4_-o/s200/Bowling+ball+is+invented+in+1862..jpg" width="200" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சியோல் வந்து பணியில் சேர்ந்த புதிது. அலுவலகத்தில் எனது முதல் "Team Building" ஈவென்ட். அருகே 'பல்சான்' நகரில் உள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் காம்ப்ளேக்ஸில் பவுலிங் கேம் (அதாங்க, இந்த "பிரியமானவளே" படத்துல விவேக் சொல்லுவாரே "ஆமை முட்டைன்னு" அந்த கேம் தான்), அதைத் தொடர்ந்து லஞ்ச் பார்ட்டி. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்தே அப்புக்குட்டியார் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் திளைத்தார். ("அரிசிமூட்டை" அப்புக்குட்டியார் யார் என்பதை அறியாதவர், இதை<span class="Apple-style-span" style="color: blue;"><b> <a href="http://vinmukil.blogspot.com/2011/01/1.html">க்ளிக்கி</a> </b></span>தெரிந்துகொள்ளவும்). இரண்டு வாரமாக இதை பற்றிய ரெக்கார்டையே தேய் தேயென்று தேய்த்துக் கொண்டிருந்தார். "சதீஷ்! PORK & BEEF...ம்ம்ம்.....பாத்திகட்டி வெளு வெளுவென்று வெளுத்திடலாம்", என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டே இருந்தார். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
அந்த நாளும் வந்தது. புறப்படுவதற்காக கீழே அப்பார்ட்மென்ட் ரிசெப்ஷனில் அப்புக்குட்டிக்காக காத்திருந்தேன். எங்களுடன் சேர்ந்தே செல்ல மற்றுமொரு மூத்த சக இந்திய ஊழியர் ஒருவரும் வந்து அமர்ந்திருந்தார். சிறிது நொடிகளில் பார்த்த மாத்திரத்திலேயே வெடிச்சிரிப்பை வரவழைக்கும் உடையில் வந்து சேர்ந்தார் அப்புக்குட்டி. ஆட்டுக் கல்லிற்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி. "ஆளப் பாருயா...இட்லி அண்டாவிற்கு ஜட்டி பனியன் போட்டு விட்ட மாதிரி", என்று நம் சக ஊழியர் வேறு கிண்டிக் கிழங்கெடுக்க கொல்லென்று சிரித்தே விட்டேன். நல்ல வேளை, அப்புக்குட்டி கவனிக்க வில்லை. </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"என்ன போகலாமா?", என்று நான் கேட்டதற்கு, "இருங்க ஜோவும் வராங்க", என்று கூறினார் அப்புக்குட்டி. "ஜோ" பிலிப்பின்சை சேர்ந்த இளம் கன்னி. எங்கள் அலுவலகத்தில் தான் பணி புரிகிறாராம், அறிமுகப்படுத்தி வைத்தார் அப்புக்குட்டி. "ஜோ" மங்கோலியச் சாயலற்ற இந்தியச் சாயல் அதிகம் குடியேறிய முகத்தைக் கொண்ட வசீகரமான மினி ஸ்கர்ட் தேவதை. நல்ல அம்சமான வடிவமான பெண். அருகே நின்று கொண்டிருந்த சக மூத்தாரின் அளவுக்கதிகமாய் திறந்திருந்த வாயை மூடுமாறு சற்றே சைகை செய்தேன். அவர், "இல்லபா...என் வாயே அப்படித்தான்", என்றார் சமாளிப்பாக. "எது...மாரியம்மன் கோவில் உண்டியல் மாதிரி என்ன திறந்தேவா இருக்கும்...மூடுங்க சார் அதை...!", என்று நான் கூறியதற்கு வெட்கப் புன்னகையை தெளித்தார் நாற்பதுகளின் இறுதிகளில் இருக்கும் அவர். புறப்பட்டோம். </div>
<br />
<div style="text-align: left;">
"சார்!, நீங்க அந்தப் பொண்ணுக்கு கொள்ளுத் தாத்தா மாதிரி, நீங்க போய் ஜொள்ளு விட்டுகிட்டு...." என்ற என்னை ஒரு நெருப்புப் பார்வை பார்த்தார். "சாரி...தப்பா சொல்லிட்டேன், கொந்தளிக்காதீங்க...அந்தப் பொண்ணு தான் உங்களுக்கு கொள்ளுப் பேத்தி மாதிரி இருக்குது", என்று அவரை ஒரு வழியாக சமாதானப் படுத்தினேன். இந்த எங்களின் அக்கப்போருக்கிடையில், நம் அரிசிமூட்டை அங்கே "ஜோ"வுடன் அளவு கடந்து வறுத்துக் கொண்டிருந்தது. அதிகமாய்த் தீயவே, நான் இடை மறித்து, "அரிசிமூட்டை! உன் நாலாவது பையனுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருக்காமே....?", என்று என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாய் தொடுக்க, "நீ நல்லாவே இருக்கமாட்டே....",என்கிற அர்த்தத்தில் கண்களில் கனல் கக்கி நகர்ந்தது அரிசிமூட்டை. ஹீ....ஹீ...எத்தனை பாத்திருப்போம். பின் தொடர்ந்த பயணத்தில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் வரை சூடு-சுரணை, மானம்-ரோஷம், வெட்கம்-சிரமம் பாராமல் செய்த கடலை சாகுபடியால் இன்று வரை என் நெருங்கிய தோழிகளுள் ஒருவர் "ஜோ". சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க, பட்ட கஷ்டம் வீண் போகாதுன்னு...! ஹீ...ஹீ...!</div>
<br />
<div style="text-align: left;">
பவுலிங் லேன்(Bowling Lane)அடைந்த பிறகும் தொடர்ந்தது எமது கடலைப் பணி. அங்கே மூலையில் ஒரு 'கொத்தவரங்காய்' கொரியப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தது அரிசிமூட்டை. எங்கள் இருவரையும் கடக்கும் சமயமெல்லாம் அவர் பார்வையில் அனல் பறந்தது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
முந்தைய நாள் அலுவலகத்திலேயே ஒவ்வொருவருடைய ஆட்டத்திறனை அவரவர் மூலமாகவே கேட்டறிந்து, அதற்கேற்ப குழு அமைத்துவிட்டார்கள். நான் ஒப்புக்கு சப்பாணி என்று எழுதி கொடுத்து இருந்தேன். அப்புக்குட்டியோ ஆட்டத்தில் கை தேர்ந்த புலி என்று தெரிவித்திருந்தார். மேலும், "See, this game is just a matter of Focusing and Concentration, for people like you it'll be quite difficult to learn. In fact, I was trained by a Special Coach, you see", என்றெல்லாம் கூறி அவர் எனக்குள் பீதியை வேறு கிளப்பி விட்டிருந்தார். "அய்யய்யோ! பொண்ணுங்களுக்கு முன்னாடி நம்ம பல்பு பியுஸ் போயுடுமோ....", என்று எனக்கு ஒரே கவலை. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "எங்க ஊர்ல, தெருவுக்கு தெரு இந்த விளையாட்டு தான்யா பேமஸ், பச்சபுள்ளக் கூட சும்மா கில்லியா பிச்சி உதறும் தெரியுமா...?", என்று நான் கோலி குண்டை மனதில் வைத்து சொன்ன வார்த்தையால் கொஞ்சம் அடங்கினார் அப்புக்குட்டி. </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நாங்கள் நால்வருமே தனித்தனி குழுக்களில். அப்புக்குட்டியார் கடலை போட்ட கொத்தவரங்காய் கொரியப் பெண் எனது குழுவில், ஹீ...ஹீ....ஏமாந்திட்டியே செல்லம்....என்று அப்புக்குட்டியாரை பார்த்து சைகை செய்தேன். "ஜோ" எனது லேனிற்கு அடுத்த லேனில். போட்டி தொடங்கியது. பெரும்பாலான கொரிய ஆண்கள் அனாயசமாக, நேர்த்தியாக விளையாடினார்கள். என் விளையாட்டை கவனித்த சக ஊழியர்கள், "ஏற்கனவே விளையாடி இருக்கீங்களா...ரொம்ப பெர்பெக்டா இருக்கிறது உங்க Ball Release & Delivery", என்று பாராட்டி தள்ளினார்கள். ஏழெட்டு முறை "Strike" வேறு ஸ்கோர் செய்திருந்தது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்ததென்றால் பாருங்களேன்...! ஒவ்வொரு ஸ்ட்ரைக்கிற்கும் அணைத்து அணைத்து பாராட்டி பரவசப் படுத்தியது நமது "கொத்தவரங்காய்". ஆர்வக் கோளாறில் "பப்பரக்கா" என்று கீழே விழ இருந்த நேரத்தில் அருகிலிருந்த "ஜோ" கைகொடுத்த் தூக்கி, அடி ஏதும் பட்டுதா.." என்று கேட்க "நீங்கள் வந்து தூக்கி விடுவதாக இருந்தால் நான் விழுந்து கொண்டே இருப்பேன் என்று நான் ஜொள்ள, "You....Naughty..." என்று செல்லமாக கூறிவிட்டு பறந்தது பிலிப்பின்ஸ் குயில். அங்கே அப்புக்குட்டி காதிலே புகை மண்டலம். எங்களுடைய குழு விரைவாக தங்களின் ஆட்டத்தை முடித்ததால், நான் மற்ற லேன்களுக்கு சென்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பெரிதாக அளந்த அப்புக்குட்டியார், பந்தை எறிகிறேன் பேர்வழி என்று கீழே சிந்தெடிக் ப்ளோரில் விழுந்து புரண்டு கொண்டிருந்தார். கண்டம் விட்டு கண்டம் பாய்வதைப் போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன அவர் எறிந்த பந்துகள். "இது தான் ஸ்பெஷல் கோச் கிட்ட கத்துகிட்ட லட்சணமா...", என்று கூறி...நன்கு அடிவயிற்றில் இருந்து காரி, காரி துப்பிவிட்டு வந்தேன். வெட்கமில்லாமல், முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்தது அரிசிமூட்டை. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
மற்றொரு லேனில் நமது மூத்தவர், பந்தை கள்ளுப்பானையை ஏந்துவது போல் இரு கைகளிலும் ஏந்தி இங்கும் அங்கும் எறிந்து கொண்டிருந்தார். அவர் எறியும் பந்துகள் ஏவுகணைகளைப் போல் பாய்ந்து சென்று பக்கத்து லேனில் உள்ள பின்களை சாய்த்துக் கொண்டிருந்ததை கண்டு கூடி நின்று கும்மியடித்து மகிழ்ந்தனர் கொரியப் பெண்கள். அவரோ இவ்வளவு கேவலமாக விளையாடிய பின்பும் ஒரு ரன்னில் உலகக் கோப்பையை இழந்தவர் போல், "டச் விட்டு போச்சு, எங்க ஊர்ல நான்தான் புளியங்கா அடிக்கிறதுல கிங்காக்கும், அவ்வளவு ஷார்ப்பா இருக்கும் குறி, தெரியுமா..." என்று தனது புளியங்கா புராணம் பாடினார் என்னிடம். நானும், "நீங்க சூப்பராதான் விளையாடினீங்க....அந்த பந்துல தான் சார் ஏதோ...." என்று ஒத்தடம் கொடுத்தேன்...!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"ஜோ" மிக அருமையாக விளையாடினார். பல Double'கள் ஸ்கோர் செய்திருந்தார். போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழா நடந்தது. எங்கள் நால்வரில் மூவருக்கு பரிசுகள் கிடைத்தன. பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக விளையாடியதற்காக "ஜோ"விற்கும், ஆண்கள் பிரிவில் மிகக் கேவலமாக விளையாடியதற்காக அப்புக்குட்டிக்கும் பரிசுகள் கிடைத்தன. கூடுதலாக, அப்புக்குட்டிக்கு இணையாக கேவலமாக விளையாடியதற்கு நமது "கிங் ஆப் புளியங்கா"விற்கு ஆறுதல் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் லஞ்ச் பார்ட்டியை முடித்துவிட்டு அவரவர் தம் வீடு திரும்பினர். நமக்கென்று ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப் பட்டிருந்த, "PIZZA, BURGER, SANDWICH'களை போட்டு தாக்கிவிட்டு நாமும் நடையைக் கட்டினோம். எங்கள் வழி நெடுகிலும் அப்புகுட்டியை மூவரும் சேர்ந்து நக்கலடித்து நாறடிக்க, அவரோ வழக்கம் போல் கடைவாய் பல் தெரியும் அளவுக்கு சிரித்தே மழுப்பினார். </div>
<br />
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span><br />
<br /></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com15Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-51594545409184725392011-05-13T22:19:00.000-07:002016-08-13T20:39:00.173-07:00தமிழன் கையிலெடுத்த சாட்டை...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-jH7_60QuOjQ/Tc4QrFfs6jI/AAAAAAAAAZk/0oI3hqqR1xY/s1600/tamil1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="199" src="https://2.bp.blogspot.com/-jH7_60QuOjQ/Tc4QrFfs6jI/AAAAAAAAAZk/0oI3hqqR1xY/s320/tamil1.jpg" width="320" /></a></div>
<div style="text-align: left;">
<i><i><i><i><i><i><i><i><i><i><span class="Apple-style-span" style="font-style: normal;"><i><br />
</i></span></i></i></i></i></i></i></i></i></i></i></div>
<div style="text-align: left;">
<i><i><i><i><i><i><i><i><i><i><span class="Apple-style-span" style="font-style: normal;"><i>"தமிழ்நாடு"-இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இம்மண்ணில் வெடித்து கிளம்பியது போன்று மொழி எழுச்சியும், திராவிடச் சிந்தனையும், பகுத்தறிவு வாதங்களும், கடவுள் மறுப்பு இயக்கங்களும் துளிர்த்து வேர் விட்டிருக்கிறதா என்றால், அதற்கு பதிலுரைப்பது கடினமே. <b>தேசமே மத, சாதிச் சண்டைகளில் மிருகத் தனமாய் உலா வந்த தேதிகளில் இங்கே "கடவுளா...எங்கே என் கண் முன் வரச் சொல்..." என்று பொங்கியும், அரிசன ஆலயப் பிரவேசங்கள் நிகழ்த்தியும் மற்றோருக்கு புத்தியுரைத்தது இந்த பகுத்தறிவு புரட்சி பூமி. </b>ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அணை கண்டு நீர் தேக்கி முப்போகம் விளைத்த சோழ மாமன்னனிலிருந்து , உலகை வியப்பிலாழ்த்திய விஞ்ஞானிகள் சர் சி.வி. ராமன், சந்திரசேகர், வெங்கட்ராமன், அப்துல் கலாம் மற்றும் வீரர்கள், கலைஞர்களான விஸ்வநாதன் ஆனந்த், ஏ. ஆர். ரஹ்மான் வரை என்று இந்த அறிவார்ந்த சமூகம் இந்த தேசத்திற்கு மட்டுமின்றி பாருக்கே கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கிற கொடைக்கு நிறுத்தற்குறிகளே இல்லை எனலாம். </i></span></i></i></i></i></i></i></i></i></i></i></div>
<br />
<div style="text-align: left;">
<i><span class="Apple-style-span" style="font-style: normal;"><i></i></span></i><br /></div>
<div style="display: inline! important; text-align: left;">
<i><span class="Apple-style-span" style="font-style: normal;"><a href="http://1.bp.blogspot.com/-WDADmRtTI-o/Tc4FV9tg1EI/AAAAAAAAAZQ/nH7oJcTcM-w/s1600/Raman%252C+Chandrasekhara+Venkata%255B4%255D.jpg" imageanchor="1" style="clear: left; display: inline! important; margin-bottom: 1em; margin-right: 1em;"> <img border="0" height="200" src="https://1.bp.blogspot.com/-WDADmRtTI-o/Tc4FV9tg1EI/AAAAAAAAAZQ/nH7oJcTcM-w/s200/Raman%252C+Chandrasekhara+Venkata%255B4%255D.jpg" width="141" /> <span class="Apple-style-span" style="-webkit-text-decorations-in-effect: none; color: black;"></span></a></span><span class="Apple-style-span" style="font-style: normal;"><a href="http://3.bp.blogspot.com/-YGG5fVdXfSk/Tc4Fdgsce1I/AAAAAAAAAZU/RORt0N4g_W4/s1600/19chandra.jpg" imageanchor="1" style="clear: left; display: inline! important; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://3.bp.blogspot.com/-YGG5fVdXfSk/Tc4Fdgsce1I/AAAAAAAAAZU/RORt0N4g_W4/s200/19chandra.jpg" width="145" /></a></span><span class="Apple-style-span" style="-webkit-text-decorations-in-effect: none; color: black;"><span class="Apple-style-span" style="-webkit-text-decorations-in-effect: none; color: black;"><span class="Apple-style-span" style="-webkit-text-decorations-in-effect: none; color: black;"><a href="http://3.bp.blogspot.com/-sEnZbnztxUY/Tc4Fv1RZmyI/AAAAAAAAAZY/WR_3nB_PYBA/s1600/ramakrishnan_red.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://3.bp.blogspot.com/-sEnZbnztxUY/Tc4Fv1RZmyI/AAAAAAAAAZY/WR_3nB_PYBA/s200/ramakrishnan_red.jpg" width="132" /></a></span></span></span></i></div>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஆனால் இப்படிப்பட்ட ஒரு அறிவாற்றல் செறிந்த சமூகத்தை ஆள ஐயா காமராசரைத் தவிர்த்து நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் எந்த விதத்தில் நம்மையும் நம் வல்லமையையும் அடையாள படுத்தும் வண்ணம் இருந்திருக்கிறார்கள் என்றால், எவரும் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது. அறிஞர் அண்ணாவின் கால்கள் கோட்டையில் பதிந்த தினத்திலிருந்து இன்று வரை தேசியக் கட்சிகளை வேரறுத்து திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றியே அழகு பார்த்து வருகிறது எமது தாய்த் தமிழ் பூமி. மிக குறுகிய காலத்திலேயே காலன் கவர்ந்து கொண்டான் அண்ணாவை. "அறுபதுகளின் இறுதிகளில், <b><i>ஒரு இளைஞனின் செய்கைகள் மாநிலத்தையே உற்று நோக்க வைத்தன, அந்த இளைஞன் ஒரு சக்திமிக்க, மாநிலத்தின் எதிர்கால அரசியல் சின்னமாக கருதப்பட்டான். இளைஞர் பட்டாளங்களை தன் பக்கம் காந்தமாக இழுத்து கட்டி வைத்திருந்தான்.</i></b> அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்று தன் அனைத்து திறமைகளையும் நூதனமாய் கொள்ளைகள் அடிப்பதிலும், அண்ணா தோற்றுவித்த கட்சியை குடும்பம் கூறு போட இடம் கொடுத்ததிலும் செலவிட்டு அவைகளை தொலைத்தே விட்ட கருணாநிதி தான் அந்த இளைஞன்" என்று என் நண்பன் ஒருவனின் தந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. இவருக்கு பின் வந்த எம்.ஜி.ஆரோ நோவுற்றே மறித்துப் போனார். ஜெயலலிதா அம்மையாரோ இம்மண்ணின் நாடித்துடிப்பான ஏழை விவசாயிகளை நெருங்கவே முயலவில்லை இத்தனை வருடங்களில். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இரட்டை ஆட்சி முறையே நடை பெற்றுக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். எவரும் இங்கே தம் நற்செயலுக்காக வென்று வருவதில்லை. மாறாக, <b><i>முந்தைய ஆட்சியாளரின் செயலற்ற தன்மை, ஒழுக்கம், நேர்மை சிறிதுமற்ற, களவுகள் நிறைந்த ஆட்சியால் விளைந்த தோல்வியே மற்றவரை வெற்றி பெற வைக்கிறது.</i></b> நாற்பது ஆண்டுகளுக்கு முன் தேசியக் கட்சியை மண்ணை கவ்வ வைத்த தலைவர்களைப் போன்று இன்று இந்த இரு திராவிட கழகங்களை தூக்கி எறிய வல்ல ஆற்றல் கொண்ட எவரும் மக்களால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மக்களும் தம் வாழ்க்கை குறைகளை நிவர்த்தி செய்யும் வல்லமை வெள்ளித் திரைக்கே இருப்பதாக அதைச் சுற்றியே தம் அரசியலறிவை வளர்க்கிறார்கள். <b style="font-style: italic;">மிக அருகில் இருக்கும் மாநிலமான கேரளத்திலும், யூனியன் பிரேதசமான புதுச்சேரியிலும் இத்தேர்தலில் வழக்கமான முடிவுகளை தவிர்த்து மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய மக்களின் எண்ணவோட்டமும், மனவோட்டமும் என்று நமக்கு வரப் போகிறது என்று தெரியவில்லை. </b></div>
</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
ஆனாலும், ஒரு பெரு மகிழ்ச்சி தமிழக தேர்தல் முடிவுகளிலிருந்து. மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கிறார்கள்; இலவசங்களுக்கு விலை போகிறார்கள் என்பன போன்ற ஊடக செய்திகள் எந்த ஒரு கட்சி சார்பற்ற, வளர்ச்சி நோக்குற்ற தமிழரின் நெஞ்சை பிளந்தே இருக்கும். <b style="font-style: italic;">ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அறிவை விற்று விலை போனவர்களாகவும், தூக்கி எறியப்பட்ட இலவசங்களை பொறுக்கிச் செல்லும் பிச்சைக்காரர்களாகவும் தம்மை கருதியிருந்த அரசியல்வாதிகளை, பெருமளவில் வெளியே வந்து வாக்களித்து, தங்களின் விரல் நுனி தீர்ப்பால் அவர்களின் எண்ணத்தை தம் பாதகைகள் கொண்டு அடித்திருக்கிறார்கள். </b>எழுபத்து எட்டு<b style="font-style: italic;"> </b>சதவிகித வாக்குப்பதிவும், அதை ஒட்டிய தீர்ப்பும் இதையே கட்டியம் கூறுகின்றன.</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-yuvMR9aPCRA/Tc4G0BvcuuI/AAAAAAAAAZc/GLBi9fOvUqk/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://1.bp.blogspot.com/-yuvMR9aPCRA/Tc4G0BvcuuI/AAAAAAAAAZc/GLBi9fOvUqk/s400/images.jpg" width="400" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
இதோ மறுபடியும் ஒரே மாதிரியாக சுழலும் தீர்ப்பு. இம்முறை கலைஞரின் தவறுகள் ஜெயலலிதாவை அரியணை ஏற்றி இருக்கின்றன. விலைவாசி என்பது எந்தக் காலத்திலும் இறக்கத்தை சந்திக்கப் போவதில்லை, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை "உலகமயமாக்கல்" உதவியுடன் மெல்ல, மெல்ல மக்களும் அடைந்து கொண்டே வருகிறார்கள். ஆதலால், வெற்று துவேஷ கோஷங்களையும், இலவச வாக்குறுதிகளையும் மட்டும் நிறைவேற்றி, வாக்களித்த மக்களை மறுபடியும் மூடர்கள் ஆக்காமல், நல்ல பயனுள்ள திட்டங்கள் வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல், அவர்களின் மேலான தீர்ப்பு தவறல்ல என்று நிரூபிக்க வேண்டும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இலவசங்கள் தேவைதான். ஆனால் அவை நம் அரசியலர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சொந்த பணத்தில் வாரி இறைப்பதைப் போல் பீற்றிக் கொள்ளும் தொலைக்காட்சியையும் , மடிக்கணிணியையும் இன்னும் பல மனமகிழ் பொருள்களையும் குறிப்பதல்ல.<b style="font-style: italic;"> இவற்றை எல்லாம் </b><b><i>கொடுத்து நொடி நேர தனிமனித சந்தோஷத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைவது மட்டுமே அவர்கள் நோக்கம். மாறாக, நமக்குத் உண்மையிலேயே தேவையான இலவசங்கள் இவைகளே...</i></b></div>
</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
</div>
<ul style="text-align: left;">
<li>மக்கள் நோய்களற்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ வழி வகை செய்ய வேண்டும். பணம் நோய் தீர்க்கும் மருந்தாய் இருப்பதை மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகள் புனித சேவைத் தளங்களாய் உருப் பெறல் வேண்டும். </li>
<li>இளம் தொழிலதிபர்களையும், ஆராய்ச்சி மாணவர்களையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். இலவச பயிற்சியும் தேவையான பொருளுதவிகளும், ஆலோசனைகளும் நல்ல பயன்கள் தரும் வகையில் வடிவம் பெற வேண்டும். இதற்கான துறைகள் ஏற்கனவே இருந்தாலும், பயனாளிகளின் எண்ணிக்கையை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும் இவற்றின் செயல்பாடுகள். </li>
<li>உலகின் அசுர வளர்ச்சிக்கேற்ப உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வி கடைக்கோடி தமிழனுக்கும் இலவசமாய் கொடுக்கப்பட வேண்டும்.</li>
<li>சுகாதாரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். </li>
</ul>
<div>
மேலும், </div>
<div>
<ul style="text-align: left;">
<li>மக்களை உயர்ந்த பண்புகளுடைய மனிதர்களாய் மாற்றம் பெற செய்ய வேண்டும். மாசு மருவற்ற சமூகம் செய்ய வேண்டும். </li>
<li>சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கழிந்தும் எந்த அடிப்படை வசதிகளிலும் (குடிநீர், உணவு, உறைவிடம், மின்சாரம்) தன்னிறைவை அடையாத நிலை களையப்பட வேண்டும். </li>
<li><b><i>ஒழுக்கம், தூய்மை இவற்றை பேணி உழைக்கத் தயங்காத மக்களை உருவாக்க முனைதல் வேண்டும். </i></b></li>
<li>விவசாயம் முடங்கியே போய் விட்டது. நூறு ஆண்டு கால அண்டை மாநிலகளுடனான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளால் தரிசாகிப் போன அவர்களின் வாழ்க்கையை உயிர் பெறச் செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் தொழில் தொடங்க உலக/இந்திய நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமைகளையும் சலுகைகளையும் கொடுத்து அந்நகரங்களை தொழில் நகரங்களாகவும், கல்வி நகரங்களாகவும் மாற்ற வேண்டும். </li>
<li>சென்னை நகர் மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளும் தொழில் மயமாதல் வேண்டும். </li>
</ul>
<b><i>இவைகள் யாவும் ஒரு ஆட்சியாளர் முன் உள்ள சவால்கள் அல்ல. இவைகள் ஒரு ஆட்சியாளரின் பணிகளில் சில. </i></b></div>
<div>
<br /></div>
<div>
சரி, வென்றவரின் கடமைகளை பார்த்தாகி விட்டது. தோற்ற கலைஞர்....? எந்த காலத்தில் தமிழகம் சிறப்பான எதிர்க்கட்சியை கண்டிருக்கிறது. அப்படி என்றால்....!!?? அவருக்குத்தான் அவருடைய முழு நேர தொழிலான திரைப்படம் பார்த்தல், கதை வசனம் எழுதுதல், பாராட்டு விழாக்களில் பாராட்டு மழைகளில் நனைதல் என்று பல தலை போகிற அலுவல்கள் இருக்கின்றதே. மக்களே...., ஜாக்கிரதை, மிகுந்த எச்சரிக்கையாய் இருங்கள். இனி பல பொன்னர் சங்கர்களும், பெண் சிங்கங்களும், இளைஞன்களும் சீறி வெளிவரக் கூடும். </div>
<div>
<br /></div>
<div>
(படம் தந்த கூகிள்'க்கு நன்றி)</div>
<b><span class="Apple-style-span" style="color: red;">--விளையாடும் வெண்ணிலா....</span></b><br />
<b><span class="Apple-style-span" style="color: red;"><br />
</span></b></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com30Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-80017859111373344342011-04-23T05:13:00.000-07:002016-08-13T20:42:32.373-07:00சோக்கா சொன்னடா நைனா...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
என் பாட சாலை பருவத்தின் நினைவுகளாய் இன்றும் பசுமையாய், என்றும் இனிமையாய் நெஞ்சில் படிந்திருக்கும் ஒரு நல்ல மனிதருடன் பழகிய சில நாட்களின் சம்பவங்களே இந்தப் பதிவு. அவர் ஒரு தமிழாசான். எப்போதும் பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் "Johnsons வேட்டி-சட்டை" விளம்பர மாடல் தோரணையில் ஒய்யாரமாய் உலா வருவார். வெறும் தமிழ் பற்று அல்ல....தமிழ் பித்து பிடித்தவர். "அண்டை வீட்டு குழந்தாய்!, கணையாழியில் கவனம் வையடி கண்ணே?" என்று ஒரு சிறுமியிடம் இவர் சொல்ல, அவள் தன் தாயிடம் <b><i>"மம்மி!, ஒயிட் தோத்தி அங்கிள் என் கண்ணுமுழி எல்லாம் நோண்டிடுவேன்னு திட்றாரு மம்மி"</i></b>, என்று அழுதே விட்டாள். "தம்பி!, தெருமுனை பலசரக்கங்காடி சென்று உசாலா (UJALA) சொட்டு நீலம் வாங்கி வருகிறாயா, உசாலா, உசாலா..?", என்று சிறுவன் ஒருவனிடம் இவர் கேட்க, களுக்கென்று விழுந்து விழுந்து சிரித்த அவன், அது நாள் முதல் இவரை எங்கு, எப்போது பார்த்தாலும், "சார்! உசாலா சொட்டு நீலம் வாங்கி வரட்டுமா...உசாலா..உசாலா?" என்று குஷாலாக சொட்டு நீலத்தோடு அவர் பிராணனையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தான். </div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
ஒருவன் "சார்!, டாம் அண்ட் ஜெர்ரி'யை தமிழ்ல எப்படி சார் சொல்றது"ன்னு கேட்டான், என்னே தமிழ்ப்பற்று என்று வியந்து தான் போனார். ஆனால் "பூனையும் எலியும் என்று விளிக்க வேண்டும் தம்பி!" என்ற இவரின் சிரத்தையான பதிலால் அவன் திருப்தி அடையவில்லை போலும். "நான் கேட்டது அது இல்ல சார், பனியன்-ஜட்டி'யை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு கேட்டேன்", என்றவனைப் பார்த்து விக்கித்து விழி பிதுங்கி தான் நின்றார் ஆசான். பாருங்களேன்..பனியன்-ஜட்டிக்கு என்ன கோட் வார்டு வச்சிருக்கு பயபுள்ள. <b><i>இவர் சிறிது யோசித்து "மேலுள்ளங்கி-கீழுள்ளங்கி என்று விளிக்கவேண்டும் தம்பி", என்று கூறிவிட்டு பதறி துடித்து ஓடினார்</i></b>. திருதிருவென்று விழித்த அவன், "என்னாது...முள்ளங்கியா...நான் பனியன்-ஜட்டி'ன்னே சொல்லிக்கிறேன்", என்று நகர்ந்தான். இது போன்ற பல எதிர் நிகழ்வுகளால் அவர் தன் இலக்கியத் தமிழ் உரையாடலில் இருந்து நடைமுறைத் தமிழ் உரையாடலுக்கு இடம் பெயர வைக்கப்பட்டார். பின்னாளில் "சோக்கா சொன்னடா நைனா..." ரேஞ்சிற்கு போய்விட்டது அவர் தமிழ்...! ஹீ..ஹீ...அடியேனுக்கும் இப்பெருமையில் கணிசமான பங்குண்டு என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவுத்துக் கொள்கிறேன் யுவர் ஆனர்....! </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
'இதெல்லாம் தேவையில்லாத வேலை' என்ற பல குடித்தனர்களின் எதிர்ப்பையும் மீறி குடியிருப்பு அஸ்சோசியேஷன் ஒன்றை நிறுவி, அதற்கு தானே தலைவர் என்றும், தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்றும் பிரகடனப் படுத்தினார். முதல் கூட்டத்திற்கு ஒரு ஈ, காக்கையும் வரவில்லை. பின், அவரே ஒவ்வொவொரு வீட்டிற்கும் சென்று, "தயவுசெய்து வாங்க, நிறைய பஜ்ஜி, சொஜ்ஜிலாம் பண்ணியாச்சு, எல்லாம் வீணாப் போயிடும்", என்று தலைவருக்கே உரிய வானளாவிய அதிகாரத்தை பயன் படுத்தி மூர்க்கமாக உத்தரவிட்டும் பார்த்தார். ம்ம்ஹூம்...ஒரு பயனும் இல்லை. <b><i>அனைவரும் "அஸ் ஐயம் சப்பரிங் ப்ரம் பீவர்" என்று விடுப்பு விண்ணப்பம் நீட்டி, பழையது ஒன்னும் இல்ல, நீ வேற வீடு பாரப்பா என்கிற ரீதியில் இடத்தை காலி செய்ய சொன்னார்கள்</i></b>. வீட்டில் தாரமோ, "அதச்செய், இதச்செய்'ன்னு உசுர வாங்கினில்ல, உக்காந்து ஒன்னு விடாம நீயே தின்னு", என்று பாசமழை பொழிய, இவர் பயந்து போய், "இந்த அப்பார்ட்மெண்டும், குடித்தனக்காரர்களும் நாசமாய் போகட்டும்", என்று பி.எஸ். வீரப்பா வசனத்தை உச்சரித்தவாரே எல்லோர் வீட்டிற்கும் பதார்த்த விநியோகம் செய்தார். </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
இவருக்கும், அப்பார்ட்மெண்டில் ஐந்து சிறார்களுக்கும் (உள்ளேன் ஐயா..!) ஏழாம் பொருத்தம். அந்த ஐவரணி நாட்டாமை (சுதாகர்), Tomato (செந்தில்), கபீஷ் (ஆனந்த்), பென்சில் (நடராஜ்) அப்புறம் புஜ்ஜிக்குட்டி (நான்..ஹீ..ஹீ). அப்போது வளாகத்திற்கு உள்ளேயே ஸ்டம்ப் நட்டு கிரிக்கெட் விளையாடுவோம். பேரழகு அக்காக்களும், எம் வயதொத்த பள்ளிசெல் நங்கைகளும் பெருமளவில் குவிந்து எங்களை உற்சாகப் படுத்துவார்கள். அனைவரும் பால்கனியில் அமர்ந்து கைதட்டி ரசிப்பார்கள், இவர் ஒருவரைத் தவிர. ஏனெனில் எங்கள் பந்து அதிகமுறை பதம் பார்த்தது இவரையும், இவர் வீட்டு ஜன்னலையும் தான். <b><i>எல்லாம் தெய்வச் செயல், இவரிடம் ஏதோ ஒரு மந்திரச் சக்தி இருந்து, எமது பந்துகளை எல்லாம் அவரை நோக்கி காந்தமாய் இழுத்து விடுகிறது.</i></b></div>
</div>
<div style="text-align: left;">
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-h0__OpRg-4Q/TbLBIFh5pwI/AAAAAAAAAXo/_3rBu0zudzw/s1600/_3.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://1.bp.blogspot.com/-h0__OpRg-4Q/TbLBIFh5pwI/AAAAAAAAAXo/_3rBu0zudzw/s320/_3.JPG" width="216" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><b><span class="Apple-style-span" style="color: blue; font-size: x-small;">இவர் தங்கபாலு அல்ல..! ஆசான் தங்கபாலு அளவுக்கு காமெடி பீஸ் கிடையாது...!</span></b></td></tr>
</tbody></table>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
அன்றும் அப்படித்தான், கன்னிமாரை கவர பல்லை வலுகொண்டு கடித்து நம் நாட்டாமை அடித்த பந்து, அமைதியாக சென்று கொண்டிருந்த ஆசானின் பளிங்குத் தலையில் பட்டு 'படீர்' என்ற ஒலியுடன் தெறித்து விழுந்தது. அதே தெய்வச் செயல்..! சுற்றம் அதிர அதிர சிரிக்கவும், நம் பென்சில் "<b><i>நியுட்டனின் மூன்றாம் விதி நிரூபணம்</i></b>", என்று திருவாய் மலரவும், கொதிப்பின் உச்சியை அடைந்தார் ஆசான். மீண்டும் தன் வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி "வளாகத்தில் யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது", என்று உத்தரவு பிறப்பித்தார். அதிகம் பாதிக்கப்பட்டவர் குரல் ஆதலால் பிற குடித்தனர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
அன்றிலிருந்து, எங்களின் முதல் எதிரியானார் ஆசான். ஐவர் குழு கூட்ட முடிவு செய்யப்பட்டது. வளாகத்திற்கு உள்ளேயே கேட்பாரற்று கிடந்த ஒரு லாரி டயர் தான் ஐவர் கூடும் கூடம். அதன் மேல் அமர்ந்து கால்களை உள்ளே போட்டவாறு வட்டமேஜை கூட்டம் தொடங்கியது. ஆசானை ஒரு கைப் பார்த்து விட வேண்டும் என்றும், சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதன்முதலாக, அதிகாரப்பூர்வமாக, அவருக்கு "எளனி" (வழக்கழிந்து போன தமிழில் இதை இளநீர் என்பார்கள், அட...பூ'வை பூ'ன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம்னு சங்க இலக்கியத்துல படிச்சிருப்பீங்களே..அதே மாதிரி தாங்க.) என்று அவருடைய வழுக்கைத் தலையை குறிக்கும் வகையில் நாமகரணம் சூட்டப்பட்டது. ஆம்..அவர் தலை பார்ப்பதற்கு கவிழ்த்துப் போடப்பட்ட கடம் மாதிரியே இருக்கும். மிக உறுதியான கட்டமைப்பு. <b><i>பல வருடங்களாய் மகசூல் பாரா தரிசு பூமி அது. பொட்டல் காடு.</i></b> ஒவ்வொரு முறையும் அவர் கடக்கையில் உரத்த குரலுடன் கோரஸாக "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்" பாடல் அவருக்கு டெடிகேட் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. தலைவாசல், தரிசுநிலம், மொட்டைமாடி, மேனேஜர் சீனா, மிஸ்டர் முடியரசன் என்று பலவாறாக பட்டங்கள் அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப் பட்டார். தினசரி காற்றிறக்கி விடப்பட்ட T.V.S.50ஐ தள்ளச்செய்து உடலுறுதிக்கு உடற்பயிற்சி கொடுக்கப்பட்டார். </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
"டேய் பார்த்துடா, வழுக்கப் போவுது", என்று நண்பன் மேல் அக்கறையாய் அவர் காது பட பேசுவதிலும், "பேன் தொல்லையிலிருந்து விடுபட மெடிக்கர் யூஸ் பண்ணுங்க; மேலும் விபரங்களுக்கு அணுகவும் பயனாளியான ஆசானை", என்று சுவற்றில் எழுதி வைப்பதிலும், <b><i>"டேய் சார் தலையில் களிமண்ணு தான்டா இருக்கும்; ஏன்னா.., களிமண்ணுலதான் ஒன்னுமே முளைக்காதுன்னு எங்க சயின்ஸ் மிஸ் சொல்லிருக்காங்க"</i></b>, என்று அறிவியல் பேசுவதிலும், இப்படிப் பலவாறாக தங்கள் எதிர்ப்பை ஒவ்வொவொரு நொடியும் அவருக்கு உணர்த்திய வண்ணம் இருந்தது எங்கள் ஐவர் குழு. தொடர் அதிரடி அடாவடிகளால் மிகத் துயரமுற்றுப் போனார், ஆசான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நாள் சிவனே என்று அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த ஆசானை நாட்டாமை பின்தொடர்ந்து சென்று நிறுத்தி, "சார் உங்க ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று இரண்டு மூன்று முறை அவர் தோசைக்கல் தலையிலேயே ஆப்பாயில் போட, முறைத்து கொண்டே "வானரம்..புள்ளையா இது, புள்ளைய பெறுங்கடான்னா குரங்கப் பெத்து வச்சிருக்கானுங்க..என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார். மெயின்கேட்டில் நின்று கொண்டிருந்த Tomato'வும் தன் பங்கிற்கு "ஹேர்ஸ்டையில் சூப்பர்" என்று பாராட்டு தெரிவித்து உளம் பூரித்துப் போனான். அன்று மாலை லாரி டயர் கூட்டம், அவசர, அவசரமாக கூட்டப்பட்டது. நாட்டாமையும், Tomato'வும் படு பயங்கர துக்கத்தில். பென்சில் மட்டும் சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். எல்லாம் ஆசானின் புண்ணியத்தால் விளைந்த தகப்பன்மார்களின் தர்மடி.</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
"சரியான பரேடா(Parade)?", நான்.</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
நாட்டாமை, "ம்ம்ம்....வெளுத்து வாங்கிட்டாரு எங்கப்பா...! அந்த ஒரு சென்சிடிவ் ஸ்பாட்ட மட்டும் தான் விட்டு வச்சாரு". </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<b><i>"எங்கப்பா அதக்கூட விட்டு வக்கலடா, புஜ்ஜு...."</i></b>, இது Tomato. </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
"அதான், நீ வந்ததிலேர்ந்து நின்னுகிட்டே இருக்கியா...?!", கலாய்த்தான் கபீஷ். </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
"நீ வாங்கி பாரு, உனக்கு அப்பத்தான் தெரியும்", அழாத குறையாக நாட்டாமை. </div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஆசானை அதிகம் தீண்டியதில்லை ஐவர் அணி. பின் வந்த நாட்களில் போர் மேகங்கள் விலகி இருவரும் சமாதானமாகி அவர் எங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு ராசியான நண்பர்களாகிப் போனோம். எங்கள் அனைவரையும் சுற்றி அமரச் செய்து நல்ல, நல்ல நாட்டு நடப்பு செய்திகளை, சினிமா, விளையாட்டு செய்திகளை பல்சுவை குன்றாமல் பகிர்வார். அப்படி மகிழ்ந்த தருணங்களில் அவர் நாட்டாமையை பார்த்து எடுத்தியம்பிய பொன் மொழிகளுள் ஒன்று தான் இந்த, </div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<b><i>"சோக்கா சொன்னடா நைனா...!" </i></b></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
வாழ்க தமிழ் ஆசான்....! நீங்க இப்போது எங்கே சார் இருக்கிறீங்க..?, மீண்டும் உங்களை சந்திக்கும் ஆவலில்...நான்...!</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!!)</div>
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span></div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com18Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-68980708432998059022011-04-09T07:52:00.000-07:002016-08-13T20:43:01.960-07:00"நான்" - கொல்லப்பட்ட நொடிகள்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-cfHp_1gZ9iA/TaB2OLBAEbI/AAAAAAAAAXQ/ZajT9zqXdpU/s1600/3688164-a-straight-walking-path-through-green-trees.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://2.bp.blogspot.com/-cfHp_1gZ9iA/TaB2OLBAEbI/AAAAAAAAAXQ/ZajT9zqXdpU/s320/3688164-a-straight-walking-path-through-green-trees.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
சபாநாயகர் தெருவை அரவணைத்துச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH-45. எனக்கு நினைவு தெரிந்து தனியே யார் துணையுமின்றி நான் கடந்து செல்ல பழகிய தார்ச் சாலை. கடந்த காலமாகிப் போன அந்நாட்களின் அற்புதமான காலை பொழுதுகளை, மெய் தழுவி ஜொலித்த இளஞ்சூரிய கதிரும், உயிர் வருடிச் சென்ற மென் குளிர் தென்றல்காற்றுமே இப்போதும் என் நெஞ்சிலும் நினைவிலும் பதியச் செய்திருக்கின்றன. அந்தக் காலைகளில் இச்சாலையை கடந்து சென்ற தருணங்களை இப்போது நினைத்தாலும் மனம் சில்லிடுகிறது. கால் சட்டையணிந்து சின்னஞ்சிறு மழலையாய் கவலையின்றி திரிந்த காலத்திலிருந்து, கனவுகள் கோடி சுமந்து கல்லூரி காளையாய் சீறிப் பாய்ந்த நாட்கள் வரை, அன்றைய தினங்களின் எனது ஒவ்வொவொரு அசைவுகளையும், கவனித்து இன்றும் பத்திரமாய் அடக்கிவைத்திருக்கும் ஒரு நெடு நீண்ட பெட்டி இச்சாலை. பள்ளி கூப்பிடு தூரத்தில் வீட்டிற்கு இடப் புறமென்றால், கல்லூரியோ வலது புறத்தில்.<br />
<br />
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
எந்த வித எண்ணத்தின் தாக்கமும் இல்லாத, அவசரமற்ற, பளிங்கு போன்ற கறையற்ற காலைப் பொழுதிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அதிக அரவமற்ற, பனி படர்ந்த அவ்வேளைகளில் பறவைகளின் ஒலி ரசித்து, இருமருங்கிலும் பச்சை பசேலென்றிருக்கும் மரங்களுக்கு நடுவே நடந்து களித்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அளவற்ற இன்பம் கொடுத்த கணங்கள். மல்லிகை, கனகாம்பரம், ரோஜா போன்ற மலர் சூடி தெய்வீகமாய் திலகமிட்டு, பயிற்சி வகுப்புகளுக்கு "லேடி பேர்ட்" மிதி வண்டிகளில் வண்ணத்துப் பூச்சிகளாய் ரீங்காரமிட்டு செல்லும் அந்த தேவதைகளை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து சென்ற தருணங்கள் சொர்க்கமாய் இன்னும் என் நெஞ்சில். அவர்கள் கடந்து , மறைந்த பின்பும் மறையாத அவர்களின் சிரிப்பொலிகளையும், மலர்களின் மணத்தையும் இப்போதும் முறையே, கேட்கிறேன், நுகர்கிறேன்..! ஆணை அழகனாக்குவாள் பெண்...! இச்சொற்களை உண்மை என்று உணர்த்திய நாட்கள் அவை. அவர்கள் எனது மண்ணின் ஆர்ப்பரிக்கும் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் பெண்டிர். கடக்கும் கன்னியர் யாவரின் கண்களும் நம் மேலே இருக்கக் கூடாதா என்பது போன்ற ஒரு விபரீத எண்ணத்தை தூண்டி, பைத்தியம் பிடிக்க வைக்க கூடிய பேரழகுப் பெண்கள். <b><i>அவர்கள் அங்கு, அந்த மண்ணில்தான் ஜனிக்கிறார்கள் , வசிக்கிறார்கள்....இப்போதும். ஆடவரின் அனுமதிக்கு காத்திராமல், நொடிப்பொழுதில் உள் நுழைந்து திணிக்கப்படும் இந்த ரசாயன மாற்றத்தை நிகழ்த்துவதில் இவர்களின் வனப்புக்கு ஈடான ஒன்றை வேறெங்கும் கண்டிலேன்.</i></b> </div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: left;">
அதைப் போன்றதொரு பொன் காலைப் பொழுதில்தான், பள்ளி செல்லும் பாலகனாய் உலவிய காலத்தில், அவரை அம்மரத்தினடியில் அமர்ந்திருக்க கண்டேன். எம் வீட்டின் அருகில் இருந்த "வருவாய் வட்டாட்சி அலுவலர்" அரசு இல்லத்தின் வெளிப்புறத்தில், காம்பவுண்ட் சுவர் அருகில் இருந்த அந்த மரத்து நிழலில் தான் அமர்ந்திருந்தார். பல வருடங்களாக அங்குதான் அமர்ந்திருக்கிறார், என் கண்கள் அவரை கவனித்ததென்னவோ அன்று தான். அழுக்கடைந்து கறுப்பேறியிருந்த கந்தல் ஆடைகளால் மூடப்பட்ட உடல். நரைத்த புருவத்தின் கீழ் எந்தவித எதிர்ப்பார்ப்பும் அற்ற விழிகள். உணர்ச்சியற்றதாய் தோன்றின அவை. முகத்தை தலை மயிரும், தாடி மயிரும் மறைக்க, நீண்டிருந்த நாசி மட்டுமே அது மனித முகம் தான் என்பதை உணர்த்துவதாய் அமைந்து இருந்தது. தலைமயிர் சடை சடையாய் முடிச்சிகளுற்று, விழுதுகளை போல் முன் விழுந்து முகம் முழுக்க பரவிக்கிடந்தது. அடர்ந்து வெளுத்தும், பழுப்படைந்தும் இருந்த தாடி அவரின் நெஞ்சுக்கூட்டை தாண்டியும் நீண்டிருந்தது. உருவத்தில் தெரிந்த முதிர்ச்சி, அவருடைய கருத்த சருமத்தில் தெரியவில்லை. தோல் சுருக்கங்களின்றி இருந்தது. நாற்பதுகளின் இறுதியில் இருப்பவராகவே பட்டது. மொத்தத்தில் ஒரு பிச்சைகாரருக்குரிய அத்தனை அடையாளங்களையும் கொண்டவராய் இருந்தார் பிச்சைப் பாத்திரமின்றி. மூங்கிலால் ஆன கைத்தடி அவருடைய கைக்கு எட்டும் தொலைவில்.<br />
<br />
<div style="text-align: left;">
அவ்வயதில் மிக அச்சுறுத்தலாய் உணர்ந்தேன் அவரை கடக்கும் நொடிகளை. தலையை கீழே தொங்கவிட்டிருந்த நிலையில் அமர்ந்திருந்தவர் நான் கடக்கையில் என்னை நிமிர்ந்து பார்த்தார். சிரித்தார். தோற்றத்தைக் கொண்டு முடிவெடுக்கும் வயதானதால், அவரின் தலை நிமிரளும், காவிப்பல் சிரிப்பும் என் இதயத்துடிப்பை அதிகரித்து பயத்தை உறுதி செய்தன. பைத்தியமோ...என்று எண்ணிக்கொண்டே ஒரு வித படபடப்பில் அவரை அவசரகதியில் கடந்தேன். இரண்டு, மூன்று முறை பின் தொடர்கிறாரா...என்று திரும்பி திரும்பி பார்த்து பீதியாகவே ஓட்டமும் நடையுமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது. <b><i>பின் வந்த நாட்களில், அவர் அபாயமற்றவர் என்பதை அவரை ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போது அவருடைய அமைதியும், அவ்வப்போது தாடி மறைவிலிருந்து வெளிவரும் புன்னகையும் உணர்த்த அவரை கடக்கும் தருணங்கள் மிக சாதரணமாக போய் விட்டன. </i></b></div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-3Is5erA9Lv0/TaB0YDeOh6I/AAAAAAAAAXI/PN4ntlrUPYY/s1600/images_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://3.bp.blogspot.com/-3Is5erA9Lv0/TaB0YDeOh6I/AAAAAAAAAXI/PN4ntlrUPYY/s320/images_2.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: left;">
எவ்வளவு கடுமையான வெயிலானாலும், மழையானாலும் அவர் அந்த இடத்தை விட்டகன்று கண்டதில்லை. கொளுத்தும் வெய்யிலிலேயே அவர் அமர்ந்திருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். அவருக்கு இரவு உறக்கமும் அதே இடத்தில் தான். வாழ்க்கையையே நான்குக்கு இரண்டு என்ற நீள அகல பரப்பளவிலேயே கழித்து வந்தார். ஒரு நாள் கனமழை பெய்து கொண்டிருந்த போது அவர் ஞாபகம் வர, குடை பிடித்து அவர் அமர்ந்திருக்கும் இடம் விரைந்தேன். மழையும் காற்றும் மிக பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவர் அங்கு இல்லை. அப்படியே கண்களை சுற்றும், முற்றும் அலைய விட்டேன். அவர் அமர்ந்திருக்கும் எதிர் திசையில், நெடுஞ்சாலையை கடந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருந்த சிறு கோவிலின் கூரை கீழ் தலையை குனிந்து அமர்ந்திருந்தார். தலைமுடியிலிருந்து சொட்டு சொட்டாய் நீர் வழிந்து கீழே அவருடைய ஏற்கனவே நனைந்த அழுக்கு ஆடையை மேலும் ஈரமாக்கிக் கொண்டிருந்தன. இயற்கை கடன்களை கழிப்பதற்கும், எப்போதாவது மழையிலிருந்து தன்னை காத்து கொள்வதற்கும் மட்டுமே அவர் அவ்விடத்தை விட்டு நகர்வார் என்று தோன்றியது. </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
ஒரு நாள், நல்ல உச்சி வெய்யிலில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, அவர் அருகில் ஐந்து அடுக்கு டிபன் கேரியர் ஒன்று இருப்பதை காண முடிந்தது. கேரியர் கம்பிகளுக்கு இடையில் வாழை இலை சொருகப்பட்டு இருக்க அவர் அருகே ஒரு நாயும் அமர்ந்து இருந்தது. நாய் சற்று கொழுத்து காணப்பட்டது. அவருக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலேயும் உணவுக் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதை பல நாட்கள் கண்டிருக்கிறேன். பின்பு தான் அவருக்கு யார் மூலமாகவோ, மூன்று வேளை உணவும் தினசரி கொடுக்கப் படுவதை அறிந்து கொண்டேன். </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"அவர் யார்...? பிச்சைக்காரரா...? இல்லை....பைத்தியக்காரரா...? பார்ப்பதற்கு அச்சம் தரும் தோற்றத்துடன் இருக்கும் அவரை ஏன் இதுபோன்ற பொதுமக்களும், பள்ளிச் சிறுவர் சிறுமிகளும், வெகுவாக கடந்து செல்லும் சாலையில் அமர அனுமதிக்கிறார்கள்...? யார், ஏன் வாழையிலையில் மூன்று வேலையும் உணவு கொடுக்கிறார்கள்...?", என்பன போன்ற சிறு வயதில் மனதை உறுத்திய, தோன்றிய கேள்விகள், பதிலை தேடாமலேயே தொலைக்கப்பட்டன என்னால். பள்ளிப்பருவத்தை கடந்து கல்லூரி செல்ல தொடங்கிய பிறகு, அவரை பற்றிய நினைவுகளே எழவில்லை. அப்போதும் அவர் அங்குதான் அமர்ந்திருந்தார். <b><i>கல்லூரி சலனங்களை சுமந்து திரிந்து கொண்டிருந்த கண்களுக்கு அவர் அவசியமற்றவராக கருதப்பட்டாரோ என்னவோ...! அவரை மறந்தே போனேன். </i></b></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
பிறிதொரு நாள் , தொலைக்காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களுள் ஒன்றான "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். "அக்கம் பக்கம் பாரடா என் சின்ன ராசா" என்ற பாடலில் தோன்றும் ஒரு பிச்சைக்காரரின் தோற்றம், மரத்தடியில் அமர்ந்திருப்பவரை ஞாபகப்படுத்தவே , பல வருடங்களுக்கு பிறகு, அவரை பற்றிய நினைவுகள் எழ ஆரம்பித்தன. விறு, விறுவென்று புறப்பட்டு அவரிடத்தை அடைந்தேன். இப்போதும் அதே இடத்தில் தான் இருந்தார். மிகவும் , மெலிந்து, தோள் சுருக்கமுற்று, மரவட்டை போன்று சுருங்கி கிடந்தார். நாயில்லை அவர் அருகில், முனை மழுங்கிய அதே பழைய கைத்தடி இருந்தது. அவரை முதன் முதலில் சந்தித்த நினைவுகள் நிழலாடின கண் முன். என்னை அச்சுறுத்திய அவருடைய அந்தப் புன்னகை மெல்ல ஒரு நொடி மனதை கடந்து சென்றது. <b><i>மீண்டும் அவரைப் பற்றிய பதில் தேடப்படாத பழைய கேள்விகள் மனதில் உயிர்பெற்று எழுந்தன. கேள்விச்சுமைகளை சுமந்தபடியே வீடடைந்தேன். </i></b></div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சில நாட்களுக்கு பின், நண்பர் ஒருவரிடத்தில் உரையாடி கொண்டிருக்கையில், இவரைப் பற்றிய பேச்சு தற்செயலாக எழுந்தது. என்னுடைய கேள்விச் சுமைகளை அங்கே அவரிடத்தில் இறக்கி வைக்க, அதற்கு அவரளித்த பதில்கள் என்னை சற்று திடுக்கிடச் செய்து உறையத் தான் வைத்தன. சிதம்பரம் நகர வீதியில், செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாம் அந்த முதியவர். சில வருடங்கள் முன்பு வரை பணம் பகட்டு என்று, ஒய்யார வாழ்க்கையாம் அவருடையது. நிறைய சொத்துகளுக்கும், நில புலன்களுக்கும் சொந்தக்காரராய் பெரு மகிழ்ச்சியாய் வாழ்ந்தவருக்கு திருமணம் நடந்த பிறகு தான் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கின.<br />
<br />
<div style="text-align: left;">
அவருடைய மனைவியும், மனைவி வழி உறவினர்களும், சொத்துக்கு ஆசைப்பட்டு அவரையே ஏமாற்றி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்க, இதை அறிந்து பலமுறை கண்டித்திருக்கிறார். அவரின் புத்திமதியை மனைவி கண்டு கொள்ளவே இல்லை. மாறாக, மிகுந்த பேராசையுடன் பணம், சொத்து, நிலம் என்று பொருள் குவிப்பதிலயே குறியாக இருந்திருக்கிறார். மேலும், அவர் செய்து வந்த தான தர்ம காரியங்களுக்கும் தடைகள் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார். தினம் போர்க்களமாய் ஒரு வாழ்வு வாழ்வதை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த மனிதர். பணம் என்பது வாழ்க்கை சக்கரத்தை சுழல உதவும் ஒரு கருவியே அன்றி, அதுவே வாழ்க்கையல்ல என்பதை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் மனைவி புரிந்து கொள்ளவே இல்லை. தன் உறவினர்களைக் கொண்டே மனைவி தன்னை தாக்க முயல, வெறுப்பின் உச்சத்தை அடைந்திருக்கிறார், அவமானம் தாளாமல். இறுதியாக, அனைத்தையும் துறந்து அந்த மரத்தினடியில் வந்து அமர்ந்து விட்டதாக கூறினார் நண்பர். நான் நினைத்தது போல் அவர் பிச்சைக்காரரும் இல்லை, பைத்தியக்காரரும் இல்லை. </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
பணத்தை துச்சமாய் கருதி மனைவிக்கு வாழ்க்கைப் பாடத்தை புகட்ட அரண்மனை போலிருந்த வீட்டையும், செழிப்பான வாழ்க்கையையும் துறந்து ஒரு பிச்சைக்காரரை போல் வெயிலிலும், மழையிலும், கடுங்குளிரிலும் தெரு நாயைப் போல் அமர்ந்திருந்த அந்த மனிதனின் கதை என்னை மிகவும் பாதித்தது. <b><i>மனிதர்களுக்குள் உறங்கும் "நான்" மிருகங்கள் பலவகை. அதில் ஒன்று பணச் செருக்கு "நான்". அன்று என்னுள் அந்த ஒரு "நான்" எதிர்காலத்தில் பிரசவிக்கப்பட்டு உயிர் பெறும் முன்பே அவர் மூலம் கொல்லப்பட்டதாய் உணர்ந்தேன். அந்த "நான்" கொல்லப்பட்ட நொடிகளில் தான் என்னை நான் அறியத் தொடங்கினேன் . </i></b>அன்று இரவு, அவரை தூரத்திலிருந்து பார்ப்பதற்காக அவர் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு சென்றேன். அங்கு அவரில்லை. சுற்றிலும் தேடினேன் எங்காவது இருக்கிறாரா என்று, கோவிலில், தூரத்தில், மரத்தின் பின் என்று எல்லா இடத்தையும் நோக்கினேன். எங்கும் இல்லை அவர். வீடு திரும்பினேன். அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. விசாரித்ததில், அவர் இறந்து விட்டதாக சொன்னார்கள். </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
ஆனால் அந்த மனிதர் என்னுள் கொன்று சென்ற அந்த "நான்" இப்போதும் சில முறை உயிர்த்தெழ எத்தனிக்கும் போதெல்லாம், அவனை மறிக்கச் செய்யும் மந்திரம், மனதில் தோன்றும் அவரின் முதல் பார்வையும், தன் தாடியினுள் புதைந்திருந்த உதடுகள் விரித்து சிந்திய அந்த புன்னகையும் தான். அவை எப்போதும் எனக்குள் தோன்றி என்னை எச்சரித்து மமதை அடையாமல் மனிதனாய் வாழ உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. "ஆனால் இப்போதும் சில நேரங்களில் அந்த "நான் " உயிர்த்தெழுகிறான் எனில் அவன் முற்றிலும் மறிக்கப்படவில்லையோ...?", என்னை நானே பல முறை கேட்டிருக்கிறேன் இந்த வினாவை. முயற்சிக்கறேன் அவனை- அந்த "நான்'ஐ"முற்றிலும் களைவதற்கு. <b><i>மனிதப் பிழைகள் குற்றங்களாவது, பிழைகளை நாம் உணர்ந்த பின்பும் தவிர்க்காமல் இருக்கையில் தானே...!</i></b></div>
<br /></div>
<div style="text-align: left;">
(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span><br />
<br /></div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com17Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-19646301338907665262011-03-12T06:27:00.000-08:002016-08-13T20:43:38.005-07:00நடுநிசியில் ஓர்நாள்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
அன்று இரவும் அப்படி ஒரு இனிய இரவாகவே கரைந்து கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்த <i>'சுரபி'</i> நிகழ்ச்சியை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். தொலைக்காட்சியில் ஊடுருவி தொலைந்து விடும் ரகமில்லை. சில.....மிகச் சில நிகழ்சிகளை தொடரும் ரகம் நான். அவற்றில் அனைத்திலும் முதன்மையானது <i>'</i>சுரபி'. <i>பூகோளத்திலும், பரந்துபட்ட நம் தேசத்தின் பலவேறு தொன்மையான, உன்னதமான கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ளும் தாகமும், எங்கோ தொலைவில் வாழும் நம் சகோதரனின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் முனைப்பும், என்னை அந்நிகழ்ச்சியின் தீவிர ரசிகனாகவே மாற்றின.</i> இவை மட்டுமின்றி, வயலின் மேதை 'சுப்ரமணியத்தின்' இசை, தொகுப்பாளர்கள் ரேணுகா, சித்தார்த் இவர்களுடைய நிகழ்ச்சி தொகுக்கும் பாங்கு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் கேள்வி-பதில் பகுதி என அனைத்தும் என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைக்காட்சி முன் கட்டிப் போட்டு விடும். எல்லாவற்றுக்கும் மேலாக, <i><b>ரேணுகாவின் அந்த மயக்கும் சிரிப்புக்கு நான் அடிமை என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை என்பேன் ஆணித்தரமாக...!</b></i> </div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒவ்வொருவராக தத்தமது அறைக்கு செல்லத் தொடங்கினர். தம்ளரில் பாலை கொடுத்துவிட்டு, சீக்கிரம் படுக்கைக்குச் செல்லுமாறு தாய் அதட்டல் தொனியில் அன்பாக சொல்லிவிட்டு சென்றார். 'அனுபம் கெர்' தொகுத்து வழங்கிய 'Mr.கோல்ட்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அனைவரின் அறை விளக்குகளும் அணைக்கப்பட்டு, உரையாடல்கள் குறைந்து நிசப்தம் பரவவே, நான் தொலைகாட்சி சத்தத்தை குறைத்து வைத்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். மெல்ல, மெல்ல தூக்கம் கண்களை ஆக்கிரமிக்க தொடங்கி பின்னர் முழுவதுமாக என்னை ஆளத் தொடங்கியது. தம்ளரில் இருந்த ஏலக்காய் வாசம் வீசும் பாலை பருகினேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எனதறைக்கு வந்து சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சரிந்து அப்படியே தூங்கிப் போனேன்...!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh5.googleusercontent.com/-ZX_OKSFKkfo/TXt-eKHdgaI/AAAAAAAAAWY/wVe4VWOJBQY/s1600/asylum1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://lh5.googleusercontent.com/-ZX_OKSFKkfo/TXt-eKHdgaI/AAAAAAAAAWY/wVe4VWOJBQY/s320/asylum1.jpg" width="320" /></a></div>
<br />
என்ன விடு.......! என்ன விடு.......! ஆ....ஆ....ஆ......! </div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
என்ன விடு.....! ஆ....ஆ....ஆ......! </div>
</div>
<div>
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
வீல்....வீலென்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்கவே துடித்து எழுந்தேன்...! அஜந்தா சுவர் கடிகாரத்தில் மணி முள்ளும் நிமிட முள்ளும் முறையே பனிரெண்டிலும், நான்கிலும் வெளிர் நீல நிற ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளியில் பளபளப்பாய் மிண்ணி பின்னிரவின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருந்தன...! கனத்த அமைதி. வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில்...! ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது போலிருந்ததே.....கனவாயிருக்குமோ...?! தூக்க கலக்கத்தில் இருந்தாலும் தொண்டை காய்ந்திருப்பதை உணர முடிந்தது. கட்டிலுக்கு அருகில் மேசை மேலிருந்த கூஜாவில் இருந்து தண்ணீரை பருகினேன். தண்ணீர் தொண்டை வழி நுழைந்து, உணவுக் குழாய் நனைத்து வயிற்றை குளுமைப்படுத்தியது. குழப்பத்துடன் உத்திரத்தை நோக்கியபடியே சிந்தனையில் இருந்தேன். ஏதோ சத்தம் கேட்டதே...! மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறியின் சத்தம் என்னை அதன் மேல் பார்வையை படரச் செய்தது...! </div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
என் படுக்கைக்கு வலது பக்கத்தில் இருந்து வினோத சத்தம் வருவது போல் இருந்தது. என்ன சத்தம் அது...! யாரோ நடந்து செல்வது போல் இருக்கிறதே...</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
'தொப்..!' 'தொப்.....!' 'தொப்...!'<br />
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்..</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
என்ன யாரோ குதித்து ஓடுவது போல் சத்தம் வருகிறதே...?!!</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
இப்போது சத்தம் வலுவாகவும், ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி குறைந்தும் ஒலித்தன. கொஞ்சம் நடுக்கமாய் உணர்ந்தேன். திருடனாக இருக்குமோ...மணி பனிரெண்டரை ஆகுதே..இந்தப் பகுதி கூர்க்கா இப்போது தானே ரவுண்ட்ஸ் முடித்து விட்டு போயிருப்பார்...! அந்த வயதில் திருட்டைத் தடுக்க கூர்க்காவே போதும் என்ற கருத்துடன் இருந்தவன் நான். தூக்கம் முற்றிலும் தொலைந்து விட்டது.</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
சர்க்... சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்...சர்க்.......</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<div style="text-align: left;">
மிக வேகமாக நெருங்குவது போல் கேட்கிறதே...! அப்பாவையும், அண்ணன்களையும் எழுபபுவோமா...?! வேண்டாம்...முதலில் என்ன, யார் என்று நாமே பார்த்துவிடுவோம் என்று சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் படுக்கையின் வலது பக்கத்து ஜன்னலை நோக்கி மெல்ல, மெல்ல நகர்ந்தேன்...! ஜன்னலை நெருங்க நெருங்க சத்தத்தின் கனம் அதிகரித்துக் கொண்டே சென்றது...! மூடி இருந்த ஜன்னலை அச்சத்துடன், எந்த சலனமுமின்றி திறக்க முயன்றேன்...! தோல்வியே...! க்ரீச்....என்ற ஒலியுடன் திறந்தது ஜன்னல். மிகவும் கவனத்துடன், கிடைத்த சிறிய இடைவெளியில் வெளியே யார் தான் உலவுகிறார்கள் என்று தேடலானேன்.</div>
</div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
சத்தம் இப்போது மிகத் தெளிவாக...! காய்ந்த தேக்கன் இலை சருகுகள் மேல் யாரோ ஓடி வருகிறார்கள். இந்த நேரத்தில் திருடனை தவிர வேறு யாருக்கு நம் தோட்டத்தில் அப்படியொரு அத்தியாவசிய அலுவல் இருக்கப் போகிறது?? தந்தையையும், தமையன்களையும் எழுப்பி ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக்கொண்டே, ஜன்னலை மூட எத்தனிக்க, மூன்று பருத்த கீரிப்பிள்ளைகள் வலமிருந்து இடமாய் பெரு வேகமெடுத்து கருவேல மரங்களடர்ந்த பகுதிக்குள் ஓடி மறைந்தன. அடச்சீ... கீரிப்பிள்ளைகள்..! கொஞ்ச நேரத்தில் கொலை பீதியை ஏற்படுத்திவிட்டனவே...! ஜன்னலை அடைத்துவிட்டு படுக்கைக்கு திரும்பினேன். </div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...சர்ர்க்...</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
சர்ர்ராக்க்...சர்ர்ராக்க்க்....</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
ஓடி மறைந்தது அவைகள் மாத்திரமல்ல அவைகளுடன் அவைகள் எழுப்பிய சத்தமும்தான். சிறிது தண்ணீர் பருகிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவே இல்லை. அந்தப் பெண்ணின் அலறல் சத்தமும் இது போல் தான் ஏதாவது கனவாக இருக்குமோ...? வெட்டியா கண்டதையும் நெனச்சு தூக்கம் கெட்டது தான் மிச்சம்....! மீண்டும் உறக்கம் தழுவ....இமைகள் இறங்கத் தொடங்கின...!</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
ஆ....ஆ....ஆ......! </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
அதே அலறல். அப்போ....முன்னர் கேட்ட சத்தம் கனவில் அல்ல...! முன்னிலும் வேகமாக துடித்து எழுந்தேன்...! </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
ஆஆஆ........!!!!<br />
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
என்ன நடக்கிறது...? அதே வலது புற ஜன்னலை துரித கதியில் திறந்து சத்தம் எங்கிருந்து வருகிறதென்று தேடலானேன்....! அதோ அந்த கருவேல மரங்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து தான் கேட்கிறது அந்த சத்தம். காவலர் குடியிருப்பு தான் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. பெண் குரல் கேட்கும் இடம் அந்த குடியிருப்பு வரிசையின் கடைசி வீடு...! கும்மிருட்டு...! </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<div style="text-align: left;">
"பிடிங்க அவள...!, ஏன்டி இப்படி எல்லாம் பண்ற...", என்றது வேறு ஒரு குரல். அதுவும் பெண் குரலாகவே பட்டது.</div>
<br />
"அடிக்காத...அடிக்காத...ஐயோ....வலிக்குது...வலிக்குது....கொலை பண்றாளே..!", முதல் குரல். </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px;">
<div style="margin: 0px;">
"கொலையா..?", பயத்தில் எனது இதயம் இன்னும் சில நொடிகளில் வெடிக்கப் போவதைப் போல் துடித்துக் கொண்டிருந்தது...!</div>
</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
</div>
</div>
</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
"அய்யய்யோ....யாரும் கிட்ட வராதீங்க....! யாராவது ஓடிப் போயி போர்வை எதுனா எடுத்துகிட்டு வாங்க....! கடவுளே இது என்ன கொடுமை....! சீக்கிரம் யாராவது எடுத்து வாங்களேன்....!". இது அந்த மற்றொரு குரல். நடுக்கத்துடன் வேதனையில் உடைந்து ஒருவர் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அக்குரல். </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="margin: 0px;">
<div style="text-align: left;">
அர்த்த ராத்திரியில் இது என்ன மர்மம். விவரம் என்னவென்று பிடி படவே இல்லை. வியர்த்தே விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருந்த அலறல்கள் அடங்கி நிசப்தம் நிலவியது அங்கே. திடீரென்று அந்த வீட்டு தோட்டத்தின் விளக்கு போடப்பட்டது. மூன்று ஆண்கள் வீட்டின் அருகிலேயே பனியன் லுங்கி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இரு பெண் குரல் கேட்டதே.....கண்களை அலைய விட்டேன். அந்த ஆடவர் மூவரும் பதைக்க பதைக்க சத்தம் வந்த முட்புதரை நோக்கி ஓடி மறைந்தனர். அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டார்களா...பாவிகள்? தெரு நாய்கள் குறைக்கத் தொடங்கி விட்டன. நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே போர்வை போற்றப்பட்ட ஒரு உடலை இருவர் தூக்கிக் கொண்டு முட்புதரிலிருந்து வெளியேறி தங்களின் வீட்டுக்குள் நுழைந்தனர் புயல் வேகத்தில். அடக் கொலைகாரப் பாவிகளா...கொன்னுட்டீங்களா அந்தப் பொண்ண...என்று விக்கித்து நான் நின்று கொண்டிருக்கும் போதே முட்புதரிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் வேக வேக நடையில் தங்கள் வீட்டுக்குள் சென்று தோட்டத்து கதவை அடைத்து கொண்டனர். விளக்கும் அணைக்கப்பட்டது. நடுக்கத்துடனேயே கழிந்தது அந்த இரவு உறக்கமின்றி. பின்னர் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை, விழித்தெழும்போது மணி காலை ஒன்பதரை. </div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br />
விறுவிறு என்று எழுந்து ஜன்னல் வழியே அந்த திகில் தோட்டத்தை நோக்கினேன். ஆள் அரவமில்லை. தோட்டக் கதவு அடைக்கப்பட்டே இருந்தது. சடாரென்று நண்பன் அஷோக்கின் நினைவு பொறியில் தட்டவே, அவனை சந்திக்க ஆயத்தமானேன். அவன் வீடும் அதே காவலர் குடியிருப்பில் தான் இருந்தது . சரசரவென்று குளித்து, உடைமாற்றி அவன் வீடு அடைந்து அவனை வெளியே அழைத்துச் வந்தேன். </div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
நேற்று இரவு நான் கண்டதை, நடந்ததை அவனுக்கு மிகுந்த பதட்டத்துடன் கூற, அவன் முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை. எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே "அம்மா நல்லா இருக்காங்களா?" என்று கேட்டார். "நல்லா இருக்காங்க, அக்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?", இவனும் கேட்டான். இரண்டு நிமிடம் நீண்டிருக்கும் அவர்களின் சம்பாஷனை. என் நினைவு முழுக்க நேற்று நடந்த அந்த மர்மமான விஷயத்தை சுற்றியே சுழன்று கொண்டிருந்ததால் அஷோக்கின் சலனமற்ற எதிர்வினையும், இடையில் அந்தப் பெண்மணியுடனான அவனது உரையாடல்களும் எனக்கு மிகுந்த எரிச்சலையே ஏற்படுத்தின. நான் உஷ்ணமாவதை கண்டுவிட்ட அஷோக், "நீ பார்த்ததெல்லாம் உண்மைதான்", என்றான் மிகச் சாதரணமாக. "அப்படீன்னா...", என்ற என்னை, "நீ பார்த்ததெல்லாம் உண்மை தான் ஆனா நீ புரிஞ்சிகிட்டது மட்டும் தான் தப்பு", என்று புதிர் விடுத்தான். பின்னர் அவனே தொடர்ந்தான். <br />
<br />
அந்த வீட்டில் ஒரு அக்கா இருக்காங்க, தேவதை மாதிரி அழகு, ஒரு ஆக்சிடன்டுல தலைல அடிபட்டு அவங்களுக்கு சித்த சுவாதீனமில்லாம போச்சு. எங்கெங்கயோ காட்டியும் குணமாகல அந்த அக்காவுக்கு. சாமியா நெனச்சு பாத்து பாத்து வளத்த பொண்ண எங்கேயோ கொண்டு போய் மன நல காப்பகத்துல விட யாருக்கு தான் மனசு வரும். அதனால் வீட்டிலயே வச்சு வைத்தியம் பார்த்துகிட்டு வராங்க. ரொம்ப முரண்டு பண்ணினா சங்கிலியால கட்டி வச்சுடுவாங்க. சமயத்துல அந்த அக்கா, நடு ராத்திரில தோட்டத்துக்கு பின்னாடி இருக்கிற அந்த கருவேல மரங்கள் நெறஞ்ச முட்புதருல போய் தனியா உக்காந்திருப்பாங்க. சில சமயம் ஒட்டுத் துணி கூட உடம்புல இல்லாம....! அந்த குடும்பமே ராத்திரியெல்லாம் உக்காந்து அழுதுகிட்டே இருக்கும். ரொம்ப பாவம். ரெண்டு பசங்க, ஒரேயொரு பொண்ணு. சந்தோஷமா கலகலப்பா இருந்த அந்த குடும்பம் இப்போ ரொம்ப நொடிஞ்சி போச்சு. எல்லாரும் ஓர் நடைபிணமா தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. </div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எங்கிட்ட ஒருத்தங்க பேசிவிட்டு போனாங்களே..., அவுங்க தான் அந்த அக்காவோட அம்மா...!</div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<b><i>அஷோக் சொல்ல, சொல்ல துக்கம் என் தொண்டையை அடைத்து, கண்ணீராய் வெளி வந்து பூமியில் விழுந்தது. </i></b></div>
</div>
<div style="margin: 0px;">
<br /></div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
</div>
</div>
(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">--விளையாடும் வெண்ணிலா....</span></b></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com9Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-77146388240379807132011-03-05T05:16:00.000-08:002016-08-13T20:45:38.402-07:00குடுத்து வச்சது அவ்ளோதான்..!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<b><u>இல்லம் </u></b><b><u>(எனது படுக்கையறை)</u></b><b><u>:</u></b> வழக்கத்துக்கும் மேல தேஜஸ் மின்னுவது போல இருக்கே...! நம்ம கண்ணே பட்டுடும் போல...! இன்னும் ஒரு பஹுடர் கோட்டிங் குடுத்துருவோமா...ம்ம்ம்ம்.....? வேணாம்...போதும், அப்புறம் அந்த கஸ்மாலத்துக்கு நம்மள அடையாளம் தெரியாம போனாலும் போய்டும்...! ஏற்கனவே, எக்கச்சக்க காம்பெடிஷன்ல ஓடிட்ருக்கு....! </div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இதுவே போதும், புதுக் கண்ணாடியா இருந்தா இன்னும் கொஞ்ச கலரா தெரிவோம்...! இந்த பெர்சனாலிட்டிய புடிக்கிலன்னு எவளாவது சொல்ல முடியுமா என்ன...? இன்னைக்கு எப்படியும் அமுக்கி போட்டுடனும் அவள...! சரி கெளம்புவோம், டைம் ஆயிட்ச்சு.....!</div>
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="font-weight: bold; text-decoration: underline;"><br />
</span></div>
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="font-weight: bold; text-decoration: underline;">முக்குச் சந்து போகும் வழியில்:</span><span class="Apple-style-span"> ம்ம்ம்ம்...! இவள சந்திச்சி இதோட ஐஞ்சு வருஷம் ஓடிப் போச்சு...! எதிர்காலத்த நெனச்சா என்னாவுமோ, ஏதாவுமோன்னு ரொம்ப பயமா இருக்குது. இந்தப் புள்ளைய முதல் முதல்ல பாத்ததுமே புடிச்சிபோச்சு....! ஆப்பீஸ்ல ஒரு பார்ட்டி சமயத்துல, "ஐயா" படத்துல </span>வர்ற <i>'ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்'</i>ன்ற பாட்டுக்கு இவ ஆடுனதப் பாத்து அன்னைக்கு 'ஆப்' ஆனவன்தான்...! இன்னும் 'ஆன்' ஆகவே இல்ல...!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
<div style="margin: 0px; text-align: left;">
லூசுப் பெண்ணே....லூசுப் பெண்ணே....லூசுப் பெண்ணே.....!</div>
<div style="margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
வந்துட்டானா...? நமக்கு முன்னாலயே வந்து பட்டரைய போட்ருவானே..! நாயா அலையுறான் நாயி...நாக்க தொங்கப்போட்டுகிட்டு...! அதான் போடா பேப்பயலே'ன்னு காறித் துப்பிட்டாளே...! இன்னும் ஏன் மான, ரோஷம் இல்லாம பின்னாலயே சுத்துது இந்த மூதேவி...! இவன்லாம் நம்ம லவ்வுக்கு ஒரு காம்ப்பெடிடர்...கருமம்..கருமம்...! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பெரிய மம்முத 'மா'னான்னு நெனப்பு...! ரிங் டோனப் பாரு, லூசுப் பெண்ணே..வாம். அவதான் உன்ன கரடிப் பெத்த கொரங்கு, லூசுன்னுட்டு போயிட்டாளே...அப்புறம் என்ன இன்னும் </div>
<div style="text-align: left;">
"லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....!"</div>
<div style="text-align: left;">
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="text-align: left;">
டேய்...மண்ட வீங்கி!, அப்படியே சுவத்துல மூச்சா போற மாரி அந்தப் பக்கமா திரும்பி நின்னுக்கோ...இல்ல மூஞ்சில காறி துப்பிட்டு போய்டுவா என் வெள்ளைக்குட்டி...! </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<b><u><br />
</u></b></div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="text-align: left;">
<b><u>முக்குச் சந்து: </u></b> அதே முக்கு சந்து...! கால் கடுக்க என்னோட தேவதைக்காக நான் நெதம் நிக்கிற அதே முக்கு சந்து. என்ன இன்னும் இந்தப் புள்ளைய காணோம்....?!! எவ்வளவு நாள் தான் இப்படியே காலம் தள்ளுறதுன்னு தெரியில...! ஏற்கனவே இந்தப் புள்ள அந்தப் மண்ட வீங்கிப் பயலோட சுத்திகிட்ருந்தா'ன்னு ஊரே சிரிப்பா சிரிச்சுது...! "சீ..சீ..., இது பழமா இருந்தாத்தானே புளிக்கிறதுக்கு, பச்ச காய்..", அப்படீன்னு தூர போட்டுடலாம்னு நெனெச்சேன். இப்போ என்னடான்னா, அவளுக்கும் அந்த மம்முத 'மா'னாவுக்கும் இடையில் பெரிய டமால்'னும், உறவு பனால்'னு அந்து நஞ்சிடிச்சின்னும் சொல்றாங்க...! அத கேள்விப் பட்டுதான் சரி, போனாப் போவுது, கழுதைய மன்னிச்சி வாழ்க்கை பிச்சை போடலாம்னு நிக்கிறேன்..! <i>இன்னும் காணல இந்த குடுத்து வச்ச சிறுக்கிய...ம்ம்ம்...!</i></div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
வந்துட்டா...! வந்துட்டா...! </div>
<div style="text-align: left;">
வரா..வரா...கிட்ட வரா...!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே....!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
அவனைத் தாண்டும் போது கரெக்டா சிச்சுவேஷன் சாங் போடறான் பாரு பன்னாட...! டேய் மண்ட வீங்கி....!, என் லவ் கன்பார்ம் ஆவட்டும், உனக்கு அப்புறம் இருக்குடா கச்சேரி...! </div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இவன் யார்ரா.. நடுவுல...?<br />
<br />
தாடிக்காரன்... அதுவும் சைக்கிள்ல...! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இந்தப் புள்ள என்ன பல்ல காட்றா அந்த தாடிக்காரனுக்கு, ஒரு வேளை அண்ணனா இருப்பானோ...? சீ...சீ..அதுக்குன்னு இவ்வளவு அசிங்கமாவா ஒரு அண்ணன் இருப்பான் அவளுக்கு...! அண்ணன் இல்லன்னா...ஒரு வேளை...</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஐயையோ...கருமம் என்ன இந்த புள்ள அவன கட்டிப் புடிக்குது...! கொரங்கு கையிலர்ந்து பூமால கரடி கைக்கு போயிடிச்சா...? </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அடக்கடவுளே..! இந்த கஸ்மாலம் என்ன அவன் சைக்கிள்ள உக்கார்றா? கரடிபபயலுக்குத் தானா இந்த பழம் கெடைக்கணும்...அவன் ஏற்கனவே ரெண்டு குட்டி போட்டவன் மாரி இருக்கானே..? ம்ம்ம்ம்.. வயிறு எரியுது...! எங்க இருந்தாலும் நல்லா இருங்கடா...! சின்ன கேப்பு கெடைக்க கூடாதுடா உங்களுக்கு...! இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டயப் போட்ருதோ...? கண்ணிமைக்கிற நேரத்துல கடலை மிட்டாய கவ்விட்டு கெளம்பிடிச்சே இந்த காட்டுப்பூன.......!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே....! மண்ட வீங்கியோட ரிங் டோன் சத்தம். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இன்னுமாடா...! இவன......இருடா வரேன்...!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
என்ன பாஸ்...! சோகமா...?! அழுகாச்சி சீனெல்லாம் நமக்கு சரியா வராது, விடுங்க பாஸ்...! பழம் நழுவி பால்டாயில்ல விழுந்துச்சுன்னு நெனச்சிக்க வேண்டியது தான்...! நமக்கென்ன போச்சு, குடுத்து வச்சது அவ்வளவுதான்...!</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
யாரு குடுத்து வச்சது...? </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஒன்னுமே தெரியாத மாரித் தான் கேப்பீங்க, சிம்பு....!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-hiaJ0Xs_S2o/TXIwjLCAsqI/AAAAAAAAAVs/Gvd-iDob2jM/s1600/still20%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://lh3.googleusercontent.com/-hiaJ0Xs_S2o/TXIwjLCAsqI/AAAAAAAAAVs/Gvd-iDob2jM/s320/still20%255B1%255D.jpg" width="223" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<i>அவதான்.... அட அவ தாங்க...., நயன் தாரா...!! </i>அவ குடுத்து வச்சது அவ்ளோதான்...!</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
என்னைய விடுங்க...! உங்க நெலமதான் ரொம்ப பரிதாபம்...! தாடி வச்சவனுங்க தான் உங்களுக்கு பெரிய இம்சையா இருப்பானுவ போலிருக்கு...!<br />
<br />
<div style="text-align: left;">
எப்படி சொல்றீங்க..?</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
மறுபடியும் ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறீங்களே...! சரி, போவுது, கொஞ்சம் கீழப் பாருங்க...<br />
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://lh3.googleusercontent.com/-zuDRQi8xKeg/TXJM7bxnHyI/AAAAAAAAAVw/Qq2p9kmjFnA/s1600/08312004_29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="172" src="https://lh3.googleusercontent.com/-zuDRQi8xKeg/TXJM7bxnHyI/AAAAAAAAAVw/Qq2p9kmjFnA/s200/08312004_29.jpg" width="200" /> <span class="Apple-style-span" style="-webkit-text-decorations-in-effect: none; color: black;"></span></a><a href="https://lh6.googleusercontent.com/-XlKr12c-EPs/TXJM-69EXiI/AAAAAAAAAV0/wIc-j-YDW3s/s1600/nayanthara-prabhu-deva.jpg" imageanchor="1" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="154" src="https://lh6.googleusercontent.com/-XlKr12c-EPs/TXJM-69EXiI/AAAAAAAAAV0/wIc-j-YDW3s/s200/nayanthara-prabhu-deva.jpg" width="200" /></a></div>
<br />
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
நான் சொன்னது சரி தானே...!!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<b><u>மறுபடியும் இல்லம் (எனது படுக்கையறை):</u></b></div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="text-align: left;">
"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!"</div>
<br />
<div style="margin: 0px;">
"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!"</div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!" </div>
<div style="margin: 0px;">
<br /></div>
அட எழுந்துட்டேன், அந்த டி.வி.'ய நிறுத்தித் தொலடா டேய் ...! உன்னோட தெனம் இது ஒரு எழவாப் போச்சு...!!<br />
<br />
<div style="text-align: left;">
"அண்ணே...! படம்'ண்ணே "<i>7/G. ரெயின்போ காலனி</i>" அதுல ஹீரோ'வ அவுங்க அப்பா திட்ற சீன் அண்ணே...! தூக்கம் கலைஞ்சிப் போச்சா..? நீ தூங்கு, மணி இப்போதான் பகல் பன்னிரண்டு...!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அத விடுங்க, இன்னைக்கு யாருண்ணே கனவுல...?" ரோஷினியா, ஜோதிகாவா...? </div>
<br />
டேய் போடா..போய் தம்பியா..லட்சணமா.. அண்ணனுக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வாடா....! காலங் காத்தால, தொன தொனன்னு பழைய கெழவிங்கள பத்தி கேட்டுகிட்டு இருக்க...!<br />
<br />
கெழவிங்களா.....? அப்ப தமன்னாவா...இல்ல நயன் தாராவா...??!!<br />
<br />
போயிர்ரா...! நானே லவ் பெய்லியர் துக்கத்துல இருக்கேன்...!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
என்னாது...கனவுல கூட லவ் பெய்லியரா...??<br />
<br />
கரர்ர்ர்ர்....தூ........! கரர்ர்ர்ர்....தூ........!<br />
<br />
டேய், ஒரு பெயிலியருக்கு ஏன்டா ரெண்டு தடவ துப்புற...! இன்டீசன்ட் பெல்லோ...!<br />
<br />
<div style="text-align: left;">
<b>---கனவு கலைந்தது--- </b></div>
<div style="text-align: left;">
<b><br />
</b></div>
<div style="text-align: left;">
<b><br />
</b><br />
<b>நண்பர்களே...!, </b></div>
<div style="text-align: left;">
<b><span class="Apple-style-span" style="font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 13px; font-weight: normal; line-height: 18px;">கனவுகளும் நிஜத்தை போல்தான் என்றாலும், சில கனவுகள், நிஜத்தையும் தாண்டியவைகளா இருக்கும். அதுல ஒரு வசதி "ஒபாமவக்" கூட நான் ஓங்கி ஒரு அறை விடலாம். "ஒசாமாவக்" கூட அர்ரெஸ்ட் பண்ணலாம். சரி..., அந்த கனவுகளை எல்லாம் தொகுப்போமே..அப்படீன்னு தோனுச்சு...! அது தான் இந்தப் பதிவு...! நான் இனிமேலும் கனவு காணலாமா..., இல்ல உங்க தர்மடியிலிருந்து தப்பிச்சு ஓடிவிடலாமா என்பது கிடைக்கும் வரவேற்பையும், காறி துப்புகளையும் பொறுத்ததே....,!!</span></b></div>
</div>
</div>
<br />
(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)<br />
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com17Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-3428949238048489042011-02-25T00:20:00.000-08:002016-08-13T20:44:57.326-07:00இவுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<i>"அனுபவம்" - இந்த வார்த்தை இடத்துக்கு இடம், நபருக்கு நபர், விஷயத்துக்கு விஷயம் என்று நிறம் மாற்றத்திற்கு உட்பட்டதேயானாலும், முடிவாய் அது ஒருவருக்கு கொடுப்பதென்னவோ படிப்பினைகளே...! சியோலிலிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை பயணம். சிங்கப்பூரில் வசிக்கும் சகோதரரை சந்திப்பதாகவும் திட்டம். இந்த நெடிய பயணத்திலும், எமது மண்ணில் எமது மக்களுடன் கழித்த சில நாட்களிலும், எம்மை உற்று நோக்கி சிந்திக்க வைத்த சில நிகழ்வுகளே இந்தப் பதிவு. இனி பயணத்திலிருந்து துவங்குவோம்.... </i></div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<br /></div>
சில அனுபவங்களுடன் இந்தியா செல்கிறேன். இங்கே நான் சுமந்து செல்வது படிப்பினைகளா என்பதில் எனக்கும் ஐயப்பாடே.! ஏனெனில் நான் தவறிழைத்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை. எனக்கு அறிமுகமானவைகள் எல்லாமே மன்னிக்கவும்....நான் அறிந்து கொண்டவைகள் எல்லாமே எனக்கு புதியவைகளே..! கற்றுக் கொண்டவைகளே...! அவற்றை இங்கே எழுத்தாக்கிடவும் விருப்பமில்லை. அவைகள் தானாகவே இங்கும் அங்குமாய், உண்மைகளும் உதாரணங்களுமாய், வெறுப்பும் ஆற்றாமையுமாய், ஏக்கங்களும் துக்கங்களுமாய், பிதற்றல்களும் பினாத்தல்களுமாய், இதுவும் அதுவுமாய், இன்னும் ஏதேதுமாய் என்னையும் மீறி பிறப் பதிவுகளில் வந்தே தீரும். பொறுத்துக் கொள்வீர்களாக..! அதிகாலையிலேயே ஆயத்தம். விமானப் பயணங்கள் எப்போதுமே எனக்கு எரிச்சல்களை தருபவைகளே...இரு விஷயங்களைத் தவிர்த்து..! ஒன்று, நெடு நாட்களாக படித்து முடிக்கப்படாமல் இருக்கும் நாவலை எந்த தொந்தரவும் இன்றி படித்து முடிக்க நேரம் கிடைப்பது, மற்றொன்று...., நான் விரும்பும் உலகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு கிடைப்பது. </div>
<div style="text-align: left;">
<br />
<i><b>'</b>இஞ்சியான்' சர்வதேச விமான நிலையம், சியோல்</i>. இந்த நிலையத்தின் பிரம்மாண்டம் எப்போதுமே கண்களை விரியச் செய்யும். போர்டிங் சமயத்தில் தான் அந்த தம்பதியரை கண்டேன். நாற்பதுகளின் இறுதியில், வட இந்தியர்கள். படித்த மேட்டுக் குடி மக்கள். வசதியின் வனப்பு அவர்களின் சரீரத்தில் தங்க ஆபரணங்களாய் பளபளத்துக் கொண்டிருந்தன. ஆண் சினகேப் புன்னகையொன்றை உதிர்த்தார். எனக்கு பின்னிருக்கைகளில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர். ஆரம்பத்திலிருந்தே பெண்மணி தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டே இருந்தார். பயணியர் பாதுகாப்பு அறிவிப்பில் கைப்பேசிகளை அணைக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிறகும் தொடர்ந்தன உலகின் அதி முக்கியம் வாய்ந்த அவருடைய "ஹேவ் யு டன் யுவர் ப்ரேக் பாஸ்ட்..?" உரையாடல்கள். விமானம் ஓடு பாதையை நோக்கி நகர ஆரம்பிக்க இருந்ததால், பணிபெண் தேவதை ஒருவர் அவரை அணுகி கைப்பேசியை அணைக்குமாறு தன் அதி சிவந்த உதடுகளின் வழியே ஆங்கிலத்தை உதிர்த்து விட்டுச் சென்றார். பெண்மணியின் உரையாடல்கள் நின்ற பாடில்லை. விமானம் ஊர்ந்து மெல்ல நகரத் தொடங்கியது. கைப்பேசியை கைவிடாத நம் கதாநாயகியை கண்ட அப்பணிப்பெண் மறுபடியும் அருகே வந்து வேண்டுகோள் விடுத்துச் சென்றார். நமக்கே எரிச்சலாக இருந்தது. "டோன்ட் யு ஹேவ் சென்ஸ்? சுவிட்ச் ஆப் யுவர் ப்ளடி மொபைல்..! யு மே நாட் கேர் பார் யுவர் சேப்டி, பட் வி கேர் அவர்ஸ்...!", வார்த்தைகள் சீறிப் பாய்ந்து அந்தப் பெண்மணியை துளைத்தன அவருக்கு நேர் இடது திசையில் அமர்ந்திருந்த வெள்ளைக்கார இளைஞனிடமிருந்து. பிரிட்டிஷ் அஸ்ஸன்ட்...! கைப்பேசி உரையாடல் அதி விரைவாக துண்டிக்கப்பட்டது. தம்பதியரால் பதில் பேச முடியவில்லை. ஆண் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. எனக்கு உள்ளூர பெரு மகிழ்ச்சி. பின்னர் தொடர்ந்த பயணத்தில் தன் கோபத்தை பலவிதமாய் அப்பணிப்பெண்ணை அலைக்கழிப்பதிலும், அதட்டலாய் ஏவல் இடுவதிலும் வெளிப்படுத்தினார் அந்தக் கனவான். தன் கோபத்தை எங்கேயாவது, யார் மீதாவது இறக்கி வைத்து விட வேண்டும் நம்மவர்களுக்கு...! இவர் இட்ட கூச்சல் தாளாமல், கேபின் சீப் வந்து சமாதான படுத்த முயன்றார் இவரை. தம் தவறுகளை திருத்திக் கொள்ள முயல்வதே இல்லை நம்மில் சிலர். இவர்களை போன்றவர்களால் தான் சில சமயங்களில் ஒட்டு மொத்த இந்தியர்களும் ஒழுங்கீனர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். <b><i>அறிவின் முதிர்ச்சி நடத்தையின் வெளிப்பாடே...!</i></b><br />
<br />
<div style="text-align: left;">
<i>சிங்கப்பூர் சங்கி விமான நிலையம்.</i> டெர்மினல் மூன்று மிகவும் வசீகரம். ஏதோ தோட்டத்தில் நடந்து செல்வது போன்றதோர் உணர்வு. இந்த டெர்மினல் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களில் இதைப் பற்றி ஒரு டாகுமெண்டரி நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் கண்டு மலைத்தேன். அதை விட நேரில் பேரழகுடன் இருக்கிறது. ஏற்கனவே சில முறை சென்றிருந்தாலும், இம்முறை தான் சில மிக அழகான தமிழ் பெண்களை தகவல் மைய அதிகாரிகளாக கண்டேன். மகிழ்ச்சியில் துள்ளியது மனம். கடலை சாகுபடி செய்ய எத்தனித்து நான் ஒருவரை அணுக, கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக, கை பிடித்து அழைத்து செல்லாத குறையாக அவர் அளித்த விளக்கங்கள் மூலமாகவும், தன் அழகிய மந்திரப் புன்னகையாலும் என் ஜொள்ளருவியை அணை கட்டி தேக்கி நிற்க வைத்தார். அவ்விடத்தை விட்டு நகரும் முன் அவர் கண்கள் சிமிட்டி பை சொன்னது, வாயை தொடச்சிக்கோ...என்று சொல்வது போலவே இருந்தது. ஹீ...ஹீ...கானக்குயில்கள் கூவினாலே அழகு தான் போங்கள்....! <b><i>சிங்கப்பூர் மட்டுமல்ல, சிங்கைத் தமிழ் பெண்களும் சிங்காரமே...! </i></b> தமயனை சந்தித்துவிட்டு சென்னை செல்லும் ப்ளைட்டில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்...! அதே முதிய ஜோடி என்னை கடந்து சென்றது...!</div>
<br />
<i>காமராஜ் சர்வதேச விமான நிலையம், சென்னை</i>. வந்தாச்சு...சென்னை..! விமான நிலையம் 'சர்வதேச' என்ற வார்த்தையை தாங்கிப் பிடிக்க பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது. சிங்கப்பூரில் தங்கள் உடைமைகளை தாங்களே காத்திருந்து எடுத்து வந்த ஜோடி, சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், தங்கள் லக்கேஜ்களை எடுக்க ஒருவரை அமர்த்தி எடுக்கச் செய்து, அவருக்கு ஐம்பது ரூபாய் பணத்தையும் திணித்தது. டாலர்களாய் சம்பாதித்து ரூபாய்களாய் செலவழிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்...ஆனால், இந்திய மண்ணை மிதித்த அடுத்த நிமிடமே இவர்களை ஆண்டான்-அடிமை எண்ணம் பற்றிக்கொள்கிறதே அதன் ரகசியம் தான் நமக்கு புரிவதே இல்லை.<br />
<br />
<div style="text-align: left;">
சென்னை நகர் முழுக்க அழுத்தமாய் பதிந்திருக்கும் குப்பை கூளங்களும், சாலையோர சாக்கடைகளும், துர்நாற்றங்களும் பல வருடங்களாய் வாய் நோக நாம் சொல்லிக் கொண்டிருக்கும் சிங்காரம் எங்கே என்று ஏங்கி தேட வைத்தது. அஷோக் பில்லர் அருகில் ட்ராபிக்கில் சிக்கி எமது வாகானம் நின்றது. இடது பக்கத்தில் சீருடையில் ஒரு ஆட்டோக்காரர். கைகளில் வைத்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும், அந்தக் காகிதத்தை அப்படியே கீழே போட்டு விட்டு கைகளை தன் நீண்ட நாவினால் நக்கி, நக்கி தூய்மை படுத்தினார். எலி வலையில் இருந்து மலைப் பாம்பு சீறியது போல் இருந்தது அக்காட்சி. பின்னர், கைகளை தூரமாக நீட்டி வைத்து, நன்றாக உதறிவிட்டு, பின் தன் காக்கி சீருடையில் துடைத்துக் கொண்டார். என்ன ஒரு தூய்மை உணர்வு, பாருங்கள்...! <b><i>கரங்களை தூய்மையாய் வைத்திருப்பதில் தான் எத்தனை அக்கறை</i></b>. வியந்து தலை சுற்றிப் போனேன். மஞ்சளரைத்த மாவு மில் போல் இருந்த தன் வாயை விரியத் திறந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த என்னை பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகை வேறு. அட ராமா...! அவர் உண்டது மசாலா தோசையாக இருக்குமா...இல்லை வாழைக்காய் பஜ்ஜியாக இருக்குமா...? விட்டுத் தள்ளுங்கள்....! அவர் வாயிலும், வாய்க்குள் இருக்கும் வஸ்திலும் நமக்கென்ன ஆராய்ச்சி...!</div>
<br />
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
பின் ஒரு நாள் நண்பர் ஒருவரை பார்க்க வடபழனி சென்று விட்டு, வீடு திரும்ப ஏழைகளின் ஏர்ப்போர்ட்டாம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன். வழி நெடுக பழரசாமாய் பருகியதால், இயற்கை அழைக்க அருகிலிருந்த ஆண் கழிவறைக்கு நடையை கட்டினேன். கடவுளே...! அருகில் செல்லவே முடியவில்லை. அந்தளவு துர்நாற்றம் குடலை புரட்டியது. நான் விழி பிதுங்கி, நெஞ்சடைத்து தலை தெறிக்க ஓடி வருவதை கண்ட ஒரு நடுத்தர வயது மகளிரணி 'கெக்களிக்கே' என்று நக்கல் நகைப்பு நகைத்தார். எனக்கு மானமே போய்விட்டது போல் இருந்தது இந்த ஆம்பளப் பயபுள்ளைகளால...! அந்த வசந்த மாளிகை அருகிலேயே ஒருவர் சுடச்சுட சப்பாத்தி குருமாவை ஓப்பன் அட்மாஸ்பியரில் வைத்துக்கொண்டு உறுமி அடித்துக் கொண்டிருந்தார். <i style="font-weight: bold;">வாழ்க... சுத்தம்(!) சோறு என்ன...சப்பாத்தி குருமாவே போட்டு விட்டது...! </i> மறைந்த தலைவர்களுக்கு சிலை திறப்பதிலும், மணிமண்டபம் அமைப்பதிலும் காட்டும் அக்கறையில் சிறிதளவாவது, பல மாநில மக்கள் வந்து செல்லும் ஒரு மாநகரத்தில் கழிப்பிட வசதிக் குறைவுகளை நீக்கி சுகாதாரத்தை பேணிக் காக்கும் நடவடிக்கைகளில் காட்டினால் வளமான, நோயற்ற வருங்கால தமிழகத்தை நாம் அடையலாம். இந்த விஷயத்தில், பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது...! </div>
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Ub7MvMBc6Pc/TWdgne409aI/AAAAAAAAAVc/sdy62kgw2Iw/s1600/index1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://4.bp.blogspot.com/-Ub7MvMBc6Pc/TWdgne409aI/AAAAAAAAAVc/sdy62kgw2Iw/s1600/index1.jpeg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
இன்றைய இளைஞர் சமுதாயத்தை ஜனநாயகத் தூண்களில் ஒன்றான பத்திரிகைகள் வழி நடத்தும் விதத்தையும் பார்ப்போமே...! இப்போது, "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..! அஜீத்தும், விஜய்யும் ஒன்றாக அரசியல் கட்சித் தொடங்குவார்களா...!", போன்ற அதி முக்கிய, அத்தியாவசிய வாதத்தை சுற்றித்தான் பத்திரிகைகள் தங்கள் தர்மத்தை நிலை நாட்டி கொண்டிருக்கின்றன. ஒரு கல்லூரி மாணவனை அழைத்து துனிசியாவில், எகிப்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா என்று கேட்டேன், நீங்கள் சியோலில்-அரபு தேசத்தில் வசிப்பதால் உங்களுக்கு தெரியும், எங்களுக்கு எப்படி தெரியும் என்று ஒரு பொது அறிவு கொக்கி போட்டதில் விழுந்தவன் தான்....., எழுந்திருக்க இரண்டு நாள் ஆனது..! சரி அத விடு, வெளிநாட்டு பிரச்சினை, "S-Band விவகாரம் என்னவென்று தெரியுமா?", என்று கேட்டால், நான் ஏதோ நம் முதல்வர் மனம் கவர் நடிகை நமீதா தழைய, தழைய சேலை கட்டி வருகிறார் பார்த்தாயா..என்று கேட்டதைப் போல் ஒரு பேரதிர்ச்சி பார்வை ஒன்றை விடுத்தார். <b><i>"சரி போ ராஜா...! உன் தலைவன் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய டைம் ஆயிட்ச்சு...", என்று அவர் தன் கடமையாற்ற வழி விட்டு விலகி நின்றேன். </i></b></div>
</div>
<div style="text-align: left;">
<b><i><br />
</i></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-8msXX8ZEvV8/TWdgjzulSGI/AAAAAAAAAVY/XixWZ5hVotw/s1600/images2.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://1.bp.blogspot.com/-8msXX8ZEvV8/TWdgjzulSGI/AAAAAAAAAVY/XixWZ5hVotw/s1600/images2.jpeg" /><span class="Apple-style-span" style="color: black;"></span></a><a href="http://3.bp.blogspot.com/-lQW_zm5s3Vo/TWdhDQZfKLI/AAAAAAAAAVk/xKPZmn8aJGc/s1600/images1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://3.bp.blogspot.com/-lQW_zm5s3Vo/TWdhDQZfKLI/AAAAAAAAAVk/xKPZmn8aJGc/s200/images1.jpeg" width="146" /></a></div>
<div style="text-align: left;">
<b><i><br />
</i></b></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
விஜய்க்கு வெண்கல சிலை வைக்கலாமா, அஜீத்திற்கு அலுமினிய சிலை வைக்கலாமா என்று ஒரு கூட்டம் சி.எம். கனவுகளில் மிதக்கும் சில நடிகர்கள் பின் அணிவகுக்க, சொந்தமாக நாலு வார்த்தை கோர்வையாக பேசத் தெரியாத, இந்தியாவின் கடந்த இரண்டு ஆண்டு நிகழ்வுகள் பற்றிக் கூட அறிவற்ற அந்நடிகர்களை அரசியலுக்கு அடையாளம் காட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன நம் பத்திரிக்கைகள். ரசிகர்கள் என்ற பெயரில் லஞ்சத்தாலும், ஊழல்களாலும் எலும்பு கூடாகி அழிந்து கொண்டிருக்கும் தேசத்தை பற்றிய எந்த சுரணையுமின்றி படிப்பிலும் கவனமின்றி பெருங்கூட்டம் ஒன்று தறிகெட்டு அலைந்து அழிந்து கொண்டிருக்கிறது. இவர்களே, இந்தக் கூட்டமே இன்று மிகச் சுலபமாக பலரால் வீழ்த்தப்படுகிற கூட்டம். முதலில் ரஜினியை மக்கள் அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்று கூவிக் கூவியே காசு பார்த்த பத்திரிக்கைகள், பின்னர் விஜயகாந்த்தை முற்றுகையிட்டன. இப்போது விஜய், அஜீத் என்று தமிழனை ஆள்வதற்கு தகுதி என்னவோ நடிகர்களிடம் மட்டும் தான் கொட்டிக் கிடைப்பதைப் போல் எப்போ வருவீங்க..எப்படி வருவீங்க...எந்த சந்து வழியா வருவீங்க...எந்த பஸ்ஸ பிடிச்சி வருவீங்க... என்று தூண்டிவிட்டு தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டே இருக்கின்றன. மக்களை இப்படி சூன்யம் வைக்கப்பட்டவர்கள் போல் வைத்திருப்பதில் இப்பத்திரிக்கைகள் பெரும் முனைப்புடன் இருக்கின்றன. இதுவரை எதெதற்கோ முன்னுரைகளையும், விளக்கவுரைகளையும் முழம் நீளத்திற்கு வெளியிட்டு கொண்டிருந்த பத்திரிக்கைகள், மக்களுக்கு ஒரு நல்ல மனிதரை அடையாளம் காட்டி இருக்கின்றனவா என்றால், ஏமாற்றமே...! <b><i>ஒவ்வொரு பத்து வருடமும் ஒரு தலைமுறை என்று கணக்கில் கொண்டால், எத்தனை புதிய தலைமுறைத் தலைவர்களை நாம் உருவாக்கி இருக்கிறோம் என்பதில் நமக்கு தெரிய வரும் கடந்தாண்டுகளில் பத்திரிக்கைகள் புரிந்த பெருந்தொண்டு..! </i></b>இவைகள் நல்ல தலைவர்களை, மாநிலங்களை, தேசத்தை உருவாக்க வல்ல செய்திகளை எங்கோ ஒரு மூலையில், பூதக் கண்ணாடி துணை கொண்டு தேடும் இடங்களில் அச்சிட்டு, இது போன்ற தேசத்துக்கு தேவையான நமீதா ரக செய்திகளை, சேவை மனப்பான்மையுடன் முதல் பக்கத்திலும், நடுப்பக்கத்திலும் இட்டு சமுதாயத்தின் அறிவுப் பசியைத் தீர்க்கின்றன. அடுத்த முறை இந்தியா திரும்புகையில், </div>
</div>
<div style="text-align: left;">
<br />
இன்று....</div>
<div style="text-align: left;">
புலிவேட்டையில்...., </div>
<div style="text-align: left;">
2016 இல்....<b style="font-style: italic;">,</b></div>
<div style="text-align: left;">
தங்கத் தளபதி <b><i>'சஞ்சய் ஜோசப் விஜய்'</i></b> கோட்டையில்...!"</div>
<div style="text-align: left;">
<br />
<div style="text-align: left;">
என்ற செய்தி நம்மை வரவேற்றாலும் வரவேற்கலாம். எவ்வளவோ தாங்கிவிட்டோம், இத்த தாங்கமாட்டோமா...! இரும்பு இதயம் வேண்டும் சகோதரா...! திடமாய் இரு...! வாழ்க... பாரத சமுதாயம்...!</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
<i>சில நல்ல விஷயங்கள் கண்களை, செவிகளை மற்றும் இதயத்தை குளிரச்செய்தன.</i> SBI இன்சுரன்ஸ் விளம்பரத்தில் தெரியும் "அந்தக் குட்டி குட்டி சந்தோஷத்தில் சொர்க்கம்", பொது கழிவறைகளை சுத்தபடுத்த "Domex" சமூக அக்கறையுடன் எடுத்த இனிஷியேடிவ், பாவை பள்ளியின் 'வீ கிரியேட் லீடர்ஸ்' விளம்பரம், ஹேரிஸ் ஜெயராஜ் இசையில்-கேட்ட முதல் தடவையே மனதை சில்லிடச் செய்த <i>நெஞ்சில் நெஞ்சில்</i> பாடல் 'எங்கேயும் காதல்' திரைப்படத்திலிருந்து என்று அனைத்துமே அருமை...! பல முறை பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்..., கேட்டிருப்பீர்கள். மகிழ்ந்த அவைகள் அனைத்தையும் விட முக்கியமானாதாக நான் கருதும் ஒரு சந்திப்பை, உரையாடலை மட்டுமே தங்களிடம் பகிர விரும்புகிறேன்...! இதோ அந்த நிகழ்வு...!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஒரு முறை, பிரதி எடுக்க அருகிலிருந்த கடைக்கு சென்றேன். கடை உரிமையாளர் ஐம்பதுகளை கடந்த பெண்மணி. பல வருடங்கள் கழித்து சந்தித்ததால், சில மணி நேரங்கள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். தூய்மையின்மை, லஞ்சம், அக்கறையின்மை, என்று நம் மக்களின் குணங்களை பற்றி திரும்பியது பேச்சு...! மக்கள் தொகைப் பெருக்கமே இவை எல்லாவற்றிற்கும் மூலம் என்றார் அப்பெண்மணி. "நானும் நம்முடைய மக்கள் தொகையைத் தான் காரணமாக எண்ணியிருந்தேன். ஆனால் மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒழுக்கத்தின் அளவீடாக ஆக முடியாது என்ற உண்மையை உணர்ந்து பின்னர் நானே என் எண்ணத்தை மாற்றி கொண்டேன். மக்கள் தொகை பெருக்கம் என்பது மாற்றத்திற்கான ஒரு இடைஞ்சல் என்று வேண்டுமானால் கூறலாம். அதுவே முழு காரணமாக முடியாது. இந்தியாவை உள்ளிருந்து, ஒரு அமைப்பின் அங்கமாய் பார்த்தலை விட, அதை வெளியிலிருந்து பார்த்தால் தான் நாம் எவ்வளவு பின்தங்கி ஒரு காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்கிறோம் என்பது தெரியும். வல்லரசு ஆவதெல்லாம் அடுத்த விஷயம், முதலில் நாகரீகமாக வாழ கற்றுகொள்வோம் நாம். <i><b>இந்த தேசிய குற்றங்களின் தொடக்கம் தனி மனித ஒழுக்கமின்மையே ஆகும்.....!</b></i> ", என்று கூறி அவ்வாதத்தில் என்னிலையை நான் விளக்கினேன். </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
<div style="text-align: left;">
அதை பெரிதாக ஆமோதித்த அவர், உங்களைப் போன்று வெளிநாட்டில் முன்னேறிய வாழ்வை அனுபவிப்பவர்கள், NRI'கள் இங்கே பின் தங்கி இருக்கும் மக்களின் வாழ்வை வளமாக்க என்ன பெரிதாக செய்கின்றீர்கள்<b>...? </b>இங்கேயே படித்து பட்டம் பெற்று வெளிநாட்டில் டாலர், டாலர்களாக சம்பாதித்து, அவர்களின் இயலாமையை சுட்டி, சுட்டி குற்றம் சுமத்தும் நீங்கள் அவர்கள் வாழ்வில் மேன்மையுற இவை போன்ற வார்த்தைகளை தவிர ஆக்கப்பூர்வமாய் என்ன கொடுத்திருக்கிறீர்கள்....? பல ஏற்ற இறக்கங்களை கண்டு விட்ட பழுத்த அனுபவசாலியின் கேள்விக்கணை. </div>
</div>
<div style="margin: 0px; text-align: left;">
<br /></div>
<div style="margin: 0px; text-align: left;">
முகத்தின் குறுக்கே சாட்டையடி...! பதிலில்லை...என்னிடம்...! தேடலில் நான் இப்போது...! </div>
<div style="margin: 0px; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: 13px; line-height: 18px;"></span><br /></div>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)<br />
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span></div>
</div>
<br />
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: "arial" , "tahoma" , "helvetica" , "freesans" , sans-serif; font-size: x-small;"><span class="Apple-style-span" style="line-height: 18px;"><br />
</span></span></div>
</div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com12Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-31791591394928800692011-02-17T04:03:00.000-08:002016-08-13T20:46:08.369-07:00பொண்ணப் பெத்தவன்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
அவர் பெயர் கணேசன். எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் பள்ளித் தோழர். உத்தேசமாக, என்னை விட ஐந்தாறு வயது மூத்தவர். மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், தான் படிக்கவில்லை என்ற ஏக்கமும், தன் சந்ததியை படிப்பறிவு பெற்ற சமூகமாக விதைக்க வேண்டும் என்ற வெறியும் இருந்ததாலும், கூலித் தொழிலாளியான கணேசனின் தந்தை அவரை எனது நண்பன் படித்த அந்த வட்டாரத்திலேயே சிறந்த பள்ளியொன்றில் சேர்த்து பயில வைத்தார். நாளடைவில், அந்த தொழிலாளி குடும்பத்தை வறுமை அரக்கன் தன் அகோரப் பசியால் முடக்க கணேசனின் படிப்பு நூலறுந்த பட்டமாய் பாதியிலயே அறுந்து வீழ்ந்தது. பின்னர் குடும்ப சூழலை உணர்ந்து, வீட்டிலுள்ள உருப்படிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய குடும்பச் சுமையை தன் தோளில் சுமக்கலானார். தொடக்கத்தில் பல்வேறு கூலி வேலைகளுக்கு போக தொடங்கிய அவர், சில வருடங்களில் வருமானத்திற்கு நிரந்தர தீர்வாக கருதி தனக்கென ரிக்க்ஷா ஒன்றை வாங்கி முழு நேர ரிக்க்ஷா தொழிலாளியானார். </div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-b-xSgutbvIo/TV0N1QuOfAI/AAAAAAAAAVM/VEsUyLO1O7I/s1600/index.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://1.bp.blogspot.com/-b-xSgutbvIo/TV0N1QuOfAI/AAAAAAAAAVM/VEsUyLO1O7I/s1600/index.jpeg" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
திருமணம், குழந்தைகள், குடும்பம் என்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தனது சிறிய வயதிலேயே கடக்க துவங்கி விட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். குடும்பம், பொருளாதார நெருக்கடி என்று எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் எங்களை கண்டு விட்டால் அந்த பள்ளிக்கால கணேசனாக மாறி சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்விக்கும் பாசமிக்கவர். கல்லூரி கடந்த பிறகு பணிக்காக வட இந்தியாவிலேயே நான் அதிக வருடங்கள் வசிக்க நேரிட்டதால், அவரை பார்த்தே ஏழெட்டு வருடங்கள் கடந்திருந்தது. சமீபத்தில் டில்லியிலிருந்து விடுமுறைக்கு நான் எனது வீடு சென்றிருந்த நாட்களில் ஒரு நாள் அவரை ஏதேச்சையாக சந்தித்தேன். நான் சாலையை கடக்க காத்திருந்த போது, பின்னிருந்து சார்...என்னங்க..., சார்...என்னங்க... என்று குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. குரல் மெலிதாக ஒலிக்க தூரத்தில் யாரையோ நோக்கி இருக்கும் என்று கருதியதாலும், சிக்னலில் சாலையை கடக்கும் தீவிரத்தில் இருந்ததாலும், நான் பொருட்படுத்தவில்லை. சாலையை கடந்து, ஏதோ நினைவில் பின் திரும்பிப் பார்த்தால்...கணேசன். சார்...சார்..என்று என்னை நோக்கி ஓடோடி வந்து கைகளைப் பற்றினார் மிக்க மகிழ்ச்சியுடன். பல வருடங்களுக்கு பிறகு அவரை பார்த்ததில் எனக்கும் மிக்க ஆனந்தம். இருவரும் பரஸ்பர விசாரிப்புகளை பரிமாறிக்கொண்டோம். "ரொம்ப நேரமா கூப்டிட்டே இருந்தேன்.. நீங்க திரும்பி பார்க்கவே இல்ல..சுற்றி இருந்த எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க சார் ...", என்றார் வருத்தத்துடன். "அப்படியா..நான் யாரோ யாரையோ கூப்பிடறாங்கன்னு நெனச்சிட்டேன் சாரி..நீங்க பேர சொல்லி கூப்பிட வேண்டியது தானே..", என்று அவரின் தோளைப் பற்றினேன். கூச்சத்துடன் நெகிழ்ந்து என் பிடியிலிருந்து நழுவ முயன்றார். அருகில் இருந்தவரிடம் "என்னுடைய பிரண்ட், டில்லியில இருக்கார்..", என்று பெருமையுடன் கூறினார் நண்பனின் வளர்ச்சி உயர்வில் ஆனந்தமடையும் அந்த உயிர் நண்பன். <i><b>உலகில் இன்னும் முழுமையாக கெட்டழியா உறவுகளில் முதன்மையான 'தாய்/தந்தை-சேய்' உறவுக்கு அடுத்த நிலையில் நான் வைத்து வியந்து பார்க்கும் உறவு -'நட்பு'.</b></i> நெகிழ்ந்தேன் அவரின் அன்பில். மறுதினம் குடும்பத்துடன் என்னுடைய வீட்டில் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன் அவரை. கூச்சத்துடன் மறுத்து விட்டார். "மறந்து விடாதீர்கள்" என்ற அவரின் பாச வார்த்தைகளில் இருந்து மீள முடியாமல் கைப்பேசி எண்ணை கொடுத்து விட்டு விடை பெற்றேன் மறு நாளே அவரை அப்படியொரு குமபலுக்கிடையில், ஒரு அசாதாரண சூழ்நிலையில் சந்திப்பேன் என்பதை அறியாமலே....!</div>
<br />
அன்று வெள்ளிக் கிழமை. மாலை ஆறரை மணி வாக்கு. எனது தாயாருடன் கோவிலுக்கு சென்றிருந்தேன். வழக்கம் போல ஏழு மணி பூஜை. திவ்ய தரிசனம். சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நானும் என் தாயாரும் தெற்கு வாயிலின் வழியாக வெளியே வந்தோம். எப்போது ஆலயத் தொழுகை வந்தாலும் நான் வழக்கமாக எனது காலணியை விடும் அதே கடையில் தான் அன்றும் நானும் எனது தாயாரும் காலணிகளை விட்டிருந்தோம். ஆனால் அன்று அந்த நேரத்தில் அந்த கடையை சுற்றிலும் வழக்கத்துக்கு மாறான கும்பலும், கூச்சலுமாக இருந்தது. "நாலு சாத்து சாத்துங்க, திருட்டு கழுத..." "அப்படியே கழுத்த நெரிச்சு கொன்னு போடுங்க திருட்டு நாய...", என்றும் இன்னும் புரியாத 'சில பல நாலு கால் பிராணிகளை ஈற்றில் கொண்ட வார்த்தைகளும்' எல்லா திசைகளிலிருந்தும் சீறி காற்றில் மிதந்து வந்தன. என் தாயாரை கொஞ்சம் தூரத்திலேயே நிற்கச் சொல்லிவிட்டு நான் உள் நுழைய முயன்றேன்.<br />
<br />
ஒரு கை பிரம்புடன் தரையில் கிடந்த ஒரு உருவத்தை விளாசு விளாசென்று விளாசிக் கொண்டிருந்தது. "இனி இப்படி பண்ணுவியா...கொழுப்பெடுத்து அலையற...உன்ன இப்போ என்ன பண்றேன் பாரு..." என்று உறுமியவாறு கீழே கிடந்த அந்த உருவத்தை தோலுரித்துக் கொண்டிருந்ததது அந்தக் கை. இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் மட்டுமே என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியும். ஆனால், இது ஏதோ இரு குடிகாரர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினையாகவோ, திருடி மாட்டிகொண்ட ஒருவனை பிடித்து விட்ட திருட்டு கொடுக்க இருந்த ஒருவனுடைய பிரச்சினையாகவோ இருக்கலாம் என்று தோன்றவே, நான் எங்களுடைய காலணிகளை திரும்பப் பெற வழிவகை தேடி கண்களை அலை பாயவிட்டேன். இவ்வளவு குழப்பத்துகிடையிலும் அங்கே ஒரு மூலையில் கடை உரிமையாளப் பெண்மணி ஒரு ருபாய் விகிதம் ஒரு ஜோடி காலணிக்கு பெற்றுக் கொண்டு செருப்பை உரியவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்ததை கிடைத்த ஜனத்திரளின் இடுக்குகள் வழியே கண்டேன். அந்தத் திசையை நோக்கி நடக்க அந்த கூட்டத்திலிருந்து வெளியேற எத்தனித்து பின் திரும்பிய போது தான் வந்து விழுந்தன அந்த வார்த்தைகள் குழப்ப கும்பலின் நடுவிலிருந்து, "கணேசா..டேய் கணேசா..விட்ரா..செத்து கித்து தொலைய போறா...". யூகித்துக் கொண்டேன், "உதைத்து நொறுக்கப்படுவது பெண்ணினமோ...?". நீங்க சும்மா இருங்கண்ணே...உங்களுக்கு தெரியாது..", பதிலுரைத்தது ஒரு கோபக் குரல், மூர்க்கமாக. அக்குரல் எனக்கு பரிச்சயப்பட்ட குரலாகப் தோன்றவே சற்று நிதானித்தேன். தொலைவில் என் தாயார் என் மீது வைத்த கண்களை எடுக்காமல் என்னையே பின் தொடர்ந்து கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு சிறிது நிமிடங்கள் காத்திருக்குமாறு சமிக்ஞை கொடுத்துவிட்டு, குரல் ஒலித்த திசையில் வலுகொண்டு முன்னேறினேன்.<br />
<br />
<br />
கோபக்கார அந்தக் குரலுக்கு உடையவராக குழப்ப கும்பலின் நடுவிலிருந்து ஒரு குரலால் குறிப்பிடப்பட்ட அந்த கணேசன், எனது "ரிக்ஷா நண்பன்" கணேசன் தான். பிரம்பை பிடித்திருந்த அந்தக் கைக்கு சொந்தக்காரரும் அவர்தான் என்பதை அவர் கை பற்றியிருந்த பிரம்பும் உணர்த்த சற்றே அதிர்ச்சி எனக்கு. <i><b>அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...?</b></i> கீழே கந்தலாய், தலை மயிர்கள் மண்ணில் புரள, அணிந்திருந்த பாவாடை கிழிசல்கள் வான் நோக்க, முகத்தை பூமித்தாயினுள் புதைத்து தேம்பிக்கிடந்தது அவ்வுருவம். இவ்வளவு ஆண் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெண்ணில்லை. என் கோபத்தீ என்னை திமிறிக்கொண்டு உள் நுழையச் செய்தது. கணேசனை நேருக்கு நேர் பார்த்து "கணேசன், என்ன இது..?" என்று கேட்டுக் கொண்டே கீழே கிடந்த அந்த பெண்ணை நோக்கினேன். நிலவிய சூழ்நிலை அவர் என்னை எப்போது சந்தித்தாலும் உதிர்க்கும் சிநேக சிரிப்பை அவரிடம் கட்டுப் படுத்தியிருந்தது. ஆனால் அவர் கண்களில் இருந்த கோப வெறி அடங்கி தலையை கீழே தொங்கவிட்டிருந்தார். அந்தக் கந்தல் பெண்ணின் பாவாடை கிழிசல்களில் தெரிந்தது அவளின் வறுமை மாத்திரமல்ல, சுற்றி மௌனித்து நின்ற அந்தக் கோர மனிதர்களின் கொடூர மனங்களும், ஈவு, இரக்கமற்ற அவர்களின் காமப்பார்வையும் தான். என்னையுமறியாமல், ஓங்கி ஒரு அறை விட்டேன் கணேசனை. கொஞ்சம் பலமாகத்தான். அவர் சிறிதும் எதிர்பார்க்க வில்லை, சுற்றி நின்ற கூட்டமும் தான். ஒரு பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க விலங்கை அடிப்பதை போல் அடித்தது அநியாயம் என்று தோன்றியதால் மட்டுமே நான் கணேசனை அடித்து விடவில்லை. அந்த அநியாயத்தை நிகழ்த்தியவர் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரே என்ற அந்த நினைவு கொடுத்த தைரியமே என்னை எனது கைநீளச் செய்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வேறு யாராவது ஒருவர் அந்த சூழ்நிலைக்கு காரணமாயிருந்தால் என்னுடைய எதிர்வினை இவ்வளவு வீரியமாய் இருந்திருக்குமா என்பதில் எனக்கும் சந்தேகமே. ஏனெனில், இந்த இழி சமூகம் நம் பலரது எதிர்ப்புக் குரல்களை ஊமையாக்கும் காரணிகளாக குடும்ப அமைதியை குலைத்தல், பொறுக்கிகளுடன் போராட வேண்டி வரும் கோர நிலை என்பது போன்ற கேடுகெட்ட 'ப்ராக்டிகல் உண்மைகள்' அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இருப்பதால், அவைகள் என்னையும் மௌனித்தே இருக்க செய்திருக்கும். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-t_HSJFcGSmI/TV0N-itn61I/AAAAAAAAAVQ/XYnPBspB780/s1600/images1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://3.bp.blogspot.com/-t_HSJFcGSmI/TV0N-itn61I/AAAAAAAAAVQ/XYnPBspB780/s1600/images1.jpeg" /></a></div>
<br />
கணேசனின் கண்கள் பனிக்கத் தொடங்கி இருந்தன. "எல்லோரும் போங்க, எது நடந்தாலும் எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே வேடிக்கை பார்க்க வந்துடுவீங்களே...., அடுத்தவன் வீட்டு விவகாரம்னா நமக்கு வெண்பொங்கல் சாப்பிடற மாதிரி தானே..., எடத்த காலி பண்ணுங்க..! கணேசன்...!, எல்லாரையும் போகச் சொல்லுங்க.." என்று கத்தி விட்டு கீழே நிலை குலைந்து போயிருந்த அந்த பெண்ணை..இல்லையில்லை...சிறுமியை எழுப்பி மூலையில் உட்கார வைத்தேன். கூட்டம் "யார்ராவன்..?, இவர் பெரிய இவரு..., ஹேய் வந்துட்டருயா....போன்ற வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கலையத் தொடங்கியது. கரைந்த கூட்டத்தினால் எனது தாயார் என்னை இப்போது தெளிவாக பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவரை கையமர்த்தி அமைதியாக இருக்கச் சொன்னேன். அவர் அமைதியானதாக தெரியாமல் போகவே, என்னை நோக்கி வர எத்தனித்தவரை எனது செயற்கை புன்னகை தொற்றிய முகத்தின் மூலம் அமைதி காக்க வைத்தேன். "அந்தப் பொண்ண கூட்டிச் சென்று வேறு உடை மாற்றுங்கள் ", என்று அந்த உரிமையாளப் பெண்மணியிடம் கூறினேன். அந்தச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டாள். <br />
<br />
குனிந்த தலை நிமிராமல் கணேசன் என் முன். "சார், என்ன நடந்ததுன்னு தெரியாம என்னை அடிச்சிட்டீங்களே....!", என்றார். "என்ன நடந்திருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா நடு ரோட்ல போட்டு அடிப்பாங்க...?", நான். "சார்...பதினாலு வயசு சார், தோ...செருப்ப பாத்துகிட்டு காலத்த தள்ளிகிட்டு இருக்குதே இது தான் அந்தப் பொண்ணோட அம்மா...! மூணு வருஷத்துக்கு முன்னாடி, இதே கோவில்ல யாசகம் எடுத்து சாப்டிட்டு இருந்ததுங்க. இங்க ஏற்கனவே யாசகம் எடுத்துகிட்டு இருந்தவங்க அடிச்சு தொல்லைப் படுத்தியதால, தற்கொல பண்ணிக்கலாம்னு போனதுகள தடுத்து நிறுத்தி, எனக்கு தெரிஞ்ச சில கோவில் பிரமுகர்கள புடிச்சி நான்தான் இந்த தொழில ஏற்பாடு பண்ணேன். இப்போ ஒரு வேளையாவது கௌரவமா சாப்பிடுதுங்க...! நேத்து ராத்திரி இந்த புள்ளைய நாலு குடிகார நாய்ங்க பஸ் ஸ்டாண்டு பக்கத்துல வச்சி...சொல்லவே நாக்கு கூசுது சார்...! நல்ல வேளையா அந்தப் பக்கம் சவாரி போன என் தோஸ்து ஒருத்தன் சரியான நேரத்துல போய் சில நண்பர்கள் துணையோட அந்த பிச்சைக்கார நாய்ங்கள, தேxxx பயலுங்கள வெரட்டி இந்தப் பொண்ண வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வந்திருக்கானுங்க...! எனக்கு சேதி இப்போதான் தெரிஞ்சி ஓடி வந்து, கடையில தானே உன்ன உக்காரச் சொல்லி வுட்டுட்டு போனா ஒன் ஆத்தா, நீ அந்த நேரத்துல எங்கடீ போனேன்னு கேட்டா, அந்த அண்ணனுங்க தான் சினிமாவுக்கு வரியான்னு கூப்டு போனாங்கன்னு சொல்றா...! வந்துச்சி கோவம், அதான் சார் யாரு எதுக்கு கூப்ட்டாலும் போயிருவியான்னு விளாசு விளாசுன்னு விளாசிட்டேன்", என்றார் ஒரே மூச்சில். "அங்க பாருங்க சார் அந்த பொண்ணோட ஆத்தாவ..., என்று இந்த குழப்பத்துகிடையில் தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்த உரிமையாளப் பெண்மணியை நோக்கி என் கவனத்தை திருப்பினார். அந்தத் தாயார் கண்களில் தாரை தாரையாக கண்ணீருடனும், கும்பிட்ட கைகளுடனும் நேராக என்னை நோக்கி நடந்து வந்தார். எனது கண்கள் கலங்க எத்தனிக்க அடக்க முயன்று தோற்றேன். "அத ஒன்னும் சொல்லாதீங்க சாமி..., அது என் குல சாமிங்க", என்று என்னுடைய காலில் விழ வந்தவரை, ஐயோ...என்று தடுத்தேன். "என்னை மன்னிச்சுடுங்க கணேசன்", வேறு வார்த்தைகளில்லை என்னிடம் . ஊமையானேன். என் மனதில் உச்சத்தில் கணேசன். <br />
<br />
"நானும் ரெண்டு பொண்ணப் பெத்தவன் சார்..எனக்கும் இதோட வலி என்னன்னு தெரியும் சார்..! அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்னு தான் இப்படி நடந்து கிட்டேன். மானத்துக்காக சாவப் போனவ சார் இவ ஆத்தா...! காசு பணம் இல்லாதவங்க மானத்தோட உயிர் வாழக் கூடாதான்னு இவ ஆத்தா அப்ப கேட்டது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு....! இன்னும், நான் தப்பு பண்ணியிருந்ததா நீங்க நெனச்சா என்ன உங்க செருப்பாலயே அடிங்க சார்..", என்று காலணி அணியாத என் கால்களை பார்த்தவாரே கூறினார். அவரை சமாதனப்படுத்தினேன். அவர் என் நண்பர் என்பதில் மிக்க பெருமிதம் அடைவதாக சிலாகித்தேன். அவர் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினார். அவர் கண்களில் நெருப்பாய் தெரிவதென்ன..? அவர் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அர்த்தமென்ன...? அவர் கோபத்தின் நியாயமென்ன...? என்னுடைய இந்தக் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துவிட்டன அந்த கவரிமான் சாதியிடமிருந்து. <br />
<br />
நானும் என் தாயாரும் காலணிகளை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். யாரது என்று கேட்ட தாயாரிடம் நண்பர் ரிக்ஷாக்காரர் என்று சொன்னதும், உனக்கு இவங்கல்லாம் கூட பிரெண்டா என்று ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்தார் என்னுடைய வீட்டு முகம் மட்டுமே கண்ட என் அன்புத் தாய். ஆனால், ஒரு விஷயம் மட்டும் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருந்தது.<br />
அந்த சிறுமி என்ன தவறு செய்தாள்? குற்றவாளிகள், வெகு ஜனத்தை மற்ற விஷயங்களில் இருந்து திசை திருப்பும் சினிமா மோகத்தை அந்த பிஞ்சிடம் விதைத்த இந்த சமூகமும், அதை தங்களின் சதை வெறிக்கு சாதகமாக பயன்படுத்த முயன்ற அந்த நான்கு குடிகார வேசிமகன்களும் அல்லவா? தண்டனை ஏன் அந்த பிஞ்சு குழந்தைக்கு. <i><b>இன்னும் இந்த கேடுகெட்ட சமூகம் பெண்ணுக்கான பாதுகாப்பில் பெண்ணையே குற்றவாளியாக பார்ப்பது ஏன்? </b></i>ஒரு பெண்ணின் கற்பை உயிரினும் மேலானதாக குறிக்கும் இச்சமுதயாமே அதனை பாதுகாக்கும் பொறுப்பையும், உரிமையையும் தட்டிக் கழிக்கும் நோக்கில், "வீக்கர் செக்ஸ்" என்று சொல்லப்படும் அவர்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து, அதை பறிப்பதற்கான எல்லா வழிகளையும் திறந்து வைத்துவிட்டு பெண்களையே குற்றவாளிகளாக, பலி ஆடுகளாக ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்.<br />
<br />
<div style="text-align: left;">
<i><b>அதே சமூகத்தின் ஒரு அங்கம் என்று நினைக்கும் போது என் மேலேயே எனக்கு அருவெருப்பாய் இருக்கிறது.</b></i></div>
<br />
<br />
(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)<br />
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span></div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com24Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-39959524168774674192011-01-28T19:46:00.000-08:002016-08-13T20:46:43.812-07:00அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
ஐந்து வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக ஹரியானாவில் உள்ள 'பாவல்' என்ற தொழில் நகருக்கு சென்றிருந்தேன். 'பாவல்' NCR என்று சொல்லப்படும் தேசிய தலைநகர் மண்டலத்துக்குட்பட்டது. 'டெல்லி-ஜெய்பூர்' தேசிய நெடுஞ்சாலை NH-8'ல் டெல்லியிலிருந்து நூறாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதி. தேசிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பொட்டலாய் தரிசு நிலங்களே. பாக்டரி, அலுவலகம், இரண்டுமே பாவல்'லில் தான். நான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் ராஜஸ்தானில் உள்ள 'பிவாடி' என்ற இடத்தில் இருந்தது. 'ஆஷியானா கார்டென்ஸ்' என்ற ரம்மியமான அப்பார்ட்மென்ட்சில் தான் என்னுடைய நான்கு மாத ஜாகை. அந்த சமயத்தில் பணி மாத்திரமே ஜனித்திருந்த, தனிமை அதிகம் நிறைந்த என்னுடைய நொடி, நிமிட, மணித்துளிகளை மாற்றியவர்கள் இருவர்.</div>
<br />
ஒருவர் நண்பர் 'மனீஷ் நிநாவே', குவாலியர் தான் பூர்வீகம். நான் இருந்த பிளாட்டிற்கு எதிரே இருந்த பிளாட்டில் தங்கி இருந்தவர். எங்களுடைய நட்பு முதல் சந்திப்பில் "ஹே ட்யுட்...! வாஸ்ஸப்..??" என்று பீட்டரின் இலக்கிய நடையில் அவர் எடுத்து விட்ட இரண்டு பிட்டிலேயே தொடங்கியது. இருவரில் மற்றொருவர் என்று நான் குறிப்பட்டது ஒரே ஒருவரை அல்ல, ஒரு குடும்பத்தை. அந்த குடும்பத்துடனான முதல் சந்திப்பு மிகவும் சுவையானதொரு சம்பவம். பணியும் ப்ளாட்டுமாக ஆமையாய் நகர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள், மாடிப்படி வழியாக மேலே சென்று கொண்டிருந்த போது, நன்கு பரிச்சயமான தென்னிந்திய திரைப்பட பாடல் ஒன்று எங்கிருந்தோ மிகவும் மெலிதாக ஒலித்து கொண்டிருந்தது. பாடல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 'பார்த்த முதல் நாளே..... பாடல் இப்போது தெளிவாக காதுகளில் விழுந்தது. பாடல் ஒலித்துக் கொண்டிருந்த தரைதள முதல் பிளாட்டின் முன் நின்றேன். கதவு திறந்தே இருந்தது. இரண்டு முறை அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் வரவே இல்லை. மீண்டும் ஒரு முறை அழுந்த அழுத்திவிட்டு உள் நுழைந்தேன். "கோன் ஹை? கியா சாஹியே?", என்று சற்றே பீதியுடன் எதிர் வந்து நின்றார் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் ஒரு பெண். நான் தமிழ் பாடல் என்னை அழைத்து வந்த கதையை சொன்னவுடன் தான் தாமதம், "தமிழா நீங்கள்...!, வாங்க..!, வாங்க...!", என்று குதூகலமாய் வரவேற்று, சில பல விசாரிப்புகளுக்கு பிறகு தடபுடலாய் உபசரித்தார். அவர் கணவர் 'பாவல்' நகரில் ஓர் நிறுவனத்தில் மேலாலளராக பணியாற்றுவதாகவும், ஐந்து வயதில் ஒரு ஆண் குழ்ந்தை இருப்பதாகவும் கூறினார்.<br />
<br />
வார நாட்களின் மாலை பொழுதுகளை மனீஷுடன் சிறு நடைகளிலும், உரையாடல்களிலும், வார இறுதி நாட்களை பாசமிக்க தமிழ் குடும்பத்துடனும் கழித்து வந்தேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TUOFLQDdO2I/AAAAAAAAAU4/JynsKVD8IhE/s1600/CAKHY7SP_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="117" src="https://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TUOFLQDdO2I/AAAAAAAAAU4/JynsKVD8IhE/s200/CAKHY7SP_1.jpg" width="200" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
மனீஷ் 'ஆஷியானா கார்டென்ஸ்'யின் பின் திசையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறிக் கொண்டே இருந்தார். அந்த சனிக்கிழமை போகலாம் என்று முடிவெடுத்து என்னுடைய 'கேர்டேகர்' காந்திலாலிடம் விஷயத்தை தெரிவித்தோம். திரும்ப சிறிது தாமதம் ஆனாலும் ஆகலாம், இரவு உணவை தயாரித்து வைத்துவிட்டு காத்திருக்கும் படியும் கூறினோம். அவர் சற்றே பீதி கலந்த பதட்டத்துடன், "கருக்கலில் செல்வதற்கு கோவில் செல்லும் பாதை உகந்தது அல்ல, தாங்கள் இருவரும் நாளை காலை செல்லலாமே",...என்றார் தயக்கத்துடன். புலி, நரி என்று உயிருக்கு ஆபத்தான காட்டு விலங்குகள் திரியும் காட்டு பகுதி வழியாகவே அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று கூறி என்னை மிரள வைத்தார். ஆனால், மனீஷ் போயே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே அங்கயே பழம் தின்று கொட்டை போட்டு ஆல விருட்சமாய் விரிந்திருக்கும் காந்திலாலின் பேச்சை புறந்தள்ளி புறப்பட்டோம். மணி அப்போது மாலை 6.30ஐ தொட்டிருந்தது. அப்பார்ட்மென்ட்சின் வெளிப்புற இடது பக்கத்து காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கலானோம்.<br />
<br />
இருள் மெல்ல படர தொடங்கி இருந்தது. ஒற்றையடிப்பாதை தாண்டி இப்போது தரிசு நிலத்தில் எங்கள் பயணம். வெளிச்சமின்மையும், ஆள் நடமாட்டமின்மையும் எனக்குள் சிறு பயத்தை விதைக்க, அதை போக்க மனீஷுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன். அவரும் ஆர்வத்துடனும், பலத்த சிரிப்புகளுடனேயும் மிகுந்த உற்சாகத்துடன் உரையாடி கொண்டே வந்தார். எதிர் திசையில், தூரத்தில் இரு உருவங்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை போன்று நிழலாடியது. ஆணும், பெண்ணுமாய் இருவர் -இப்போது அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி குறைந்து இருந்தது. உற்று நோக்கிய பார்வையுடன், கனத்த அமைதியுடன் கடந்து சென்றார்கள் எங்களை. இருள் இப்போது அடர்த்தியாய் பரவி இருந்தது. எங்கோ விலங்குகள் ஊளையிடும் சத்தம் எங்கள் பாதங்கள் முன்னேற, முன்னேற வலுத்துக் கொண்டே சென்றன. பாதை இப்போது இரு புறத்திலும் மரங்களடர்ந்த வழியினூடே பயணித்தது. காந்திலால் சொன்ன காட்டுப்பகுதி இதுவாக இருக்குமோ என்று யூகித்துக் கொண்டேன். "என்ன ரொம்ப தூரம் வந்து விட்டோம் இன்னும் கோவில் இருக்கும் திசையே கண்ணுக்கு தெரியவில்லையே..?", என்றேன் மனீஷிடம். "முதலில் ஒரு கிராமம் வரும், அதை தாண்டி தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று காந்திலால் சொன்னார்" என்றார் மனீஷ். "என்னது சொன்னாரா... அப்போ உங்களுக்கு தெரியாதா...வெளங்கிடும்...", என்று கேட்டு கொண்டே தொடர்ந்தேன்.<br />
<br />
கனத்த அமைதியில் காட்டுப் பூச்சிகளின் பேரிரைச்சல் பயத்தை அதிகப்படுத்தியது. "ஒரு ஐடியா ட்யுட்...!" என்று உரத்த குரலில் அலறினார் மனீஷ். அருகில் இருந்த ஒரு கோதுமை வைககோல்போரை காட்டி இதன் அருகில் நான் நிற்பது போல் ஒரு போட்டோ எடுங்கள் என்றார். உங்களுக்கு எப்படி இப்படி நடுக்காட்டில் இது மாதிரி எல்லாம் தோன்றுகிறது, இந்த இருட்டில் ஒன்றுமே தெரியாது வாங்க போகலாம் என்று நான் கூறியதை ஏற்காமல், அவருடைய 'சோனி' மொபைல் கேமராவில் என்னை படமெடுக்க வைத்தார். "அல்டிமேட்...!" என்று எடுத்த புகைப்படத்தை பார்த்து மீண்டும் ஒரு அலறல் அவரிடமிருந்து. என்ன அல்டிமேட்டோ...நிஜத்தை விட பேரிருளாய் தெரிந்தது புகைப்படம்.<br />
<br />
அந்த காட்டு பாதையை கடந்து விட்டதை போன்ற உணர்வு எனக்கு வந்தது. எங்கோ தூரத்திலிருந்து மனித சத்தங்கள் காதில் விழத்தொடங்கின. இன்னும் சிறுது நேர நடைக்குப் பிறகு, இங்கும் அங்குமாய் மனிதத் தலைகள் தெரிய ஆரம்பித்தன. "கிராமம் அடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன்", என்றேன் நான். வீடுகள் நிறைந்த பகுதிக்குள் பாதை நீண்டது. கிராமமே இருளில் மூழ்கி இருந்தது. ஒவ்வொரு வீடும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்டிருந்தன. விசாலாமான, பெரிய வீடுகள். அகலமான பரந்த முன் வாசல்கள், மரங்கள் என்று நாம் ஒரு காட்டுப்பகுதியின் வாயிலாக தான் இந்த கிராமத்தை அடைந்தோம் என்று நம்பவே முடியாத அமைப்பிலான வீடுகள். பெரும்பாலான வீடுகளின் முன்பு குறைந்தது ஒரு நான்கு சக்கர வாகனத்தைக் காண முடிந்தது. பல வீடுகளின் முன் இரண்டு மூன்று வாகனங்களும், ஒரு ட்ராக்டரும் என்று வசதியின் வனப்பு வாசலை தாண்டி பிதுங்கி வழிந்து கொண்டிருந்ததன. "மின்வெட்டு போல் இருக்கிறது, இட்ஸ் எ பேட் ஈவ்னிங் டுடே" என்ற என்னை மனீஷின் "திஸ் வில்லேஜ் இஸ் எட் டு பி எலெக்ட்ரிபைட்" என்னும் வார்த்தைகள் அதிரத்தான் வைத்தன. "அரசாங்கம் இந்த பகுதியை சிறப்பு பொருளாதார பகுதியாக அறிவித்து தொழில் தொடங்க அனுமதி அளித்தது. வேண்டிய நிலங்களை நேரடியாக விவசாயிகளிடமேயே தொழில் தொடங்க விழைவோர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தது. தொழிலதிபர்கள் அலை கடலென திரண்டு இவர்களின் விலை மதிப்பில்லா நிலங்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தான் இப்படி ஒரு விசித்திரமானதொரு விஷயத்தை நாம் காண்கிறோம்", என்றார் மனீஷ்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TUOFY-Nj6MI/AAAAAAAAAU8/VEi_-V97uc0/s1600/CAWLAN0H_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="149" src="https://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TUOFY-Nj6MI/AAAAAAAAAU8/VEi_-V97uc0/s200/CAWLAN0H_1.jpg" width="200" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
மெலிதான தென்றல் மனித சத்தங்களின் வழியே எங்களை வருடி சென்றது. கிராமத்து வாசம் கமழ்ந்திருந்த சுகந்தமான காற்று. வானத்தில் தவழ்ந்து கொண்டிருந்த அந்த நிலாவினை ரசித்த படியே மனம் மகிழ்ச்சியில் திளைக்க நடந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு வீட்டிலும், குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் அகன்று விரிந்த, வெளிப்புற முற்றத்தில் அமர்ந்து அளவாலாவிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் இங்கும் அங்கும் விளையாடி கொண்டிருந்தனர். அருகிலேயே, அடுப்பை மூட்டி, பெண்கள் தங்கள் கைகளாலேயே ரொட்டியை சுட்டு சுடச்சுட அனைவருக்கும் பரிமாறி<br />
கொண்டிருந்தார்கள். பாட்டியின் கதை கேட்கும் பேரன், தாத்தாவின் கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் பேத்தி, தந்தையின் தலை வருடும் மகள், தாயின் இடுப்பை அணைத்த மகன், தாயின் தோளில் உறங்கும் குழந்தை, "எப்படியொரு சொர்க்க வாழ்க்கை வாழ்கிறேன் பார்..." என்கிற பெருமித முகத்துடன் குடும்பத் தலைவன் என்று ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த அந்த அற்புதமான, வார்த்தையிலடங்கா வாழ்க்கையை எப்படி உரைப்பது. இந்த அருமையான காட்சியில் எங்களை இழந்து நாங்கள் ஒவ்வொரு வீடாக நகரும் போது, பல வீடுகளில் எங்களையும் பாசத்துடன் அவர்களின் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தனர். அவர்களின் அன்பான அழைப்புகளை நன்றியுடன் மறுத்து முன்னேறினோம். எதிரெதிர் வீடுகளில் பல மாதங்கள் வசித்தாலும், முகம் பாரா நவ நாகரீக நகரத்து கலாச்சாரத்தை நினைக்க, நினைக்க வேதனையாய் இருந்தது. இவர்களின் இயற்கையோடு இணைந்த அர்த்தமிக்க பரிவான வாழ்க்கையை, முகமறியா மனிதர்களுக்கும் பந்தியிட்டு உணவு பகிரும் உன்னத குணத்தை எண்ணி எண்ணி சிலாகித்துக் கொண்டிருந்தேன்.<b> </b><br />
<b><br />
</b><br />
<b>"<i>அவசர வாழ்க்கைக்காக பல அவசிய குணங்களை அவிழ்த்து எறிந்து விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நம்மை போன்ற நகர வாசிகள் இன்னும் என்னென்னவெல்லாம் இழக்க காத்து கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை"</i>.</b><br />
<br />
வழியில் சிலரை விசாரித்து கோவிலை அடைந்தோம். சிறியதாகவும், மிக சுத்தமாகவும் இருந்தது வளாகம். அப்போதும் சில பெண் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி கொண்டும், விக்ரஹங்களை சுற்றி வந்து கொண்டும் இருந்தார்கள். பெரியவர்கள் கோவில் மரத்தடியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தார்கள். கோவிலை சுற்றி வந்து விட்டு, சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பின் புறப்படத் தயாரானோம். திரும்புகையில் பெரும்பாலான வீடுகளில் இரவு உணவு நிறைவுற்று இருந்தது. வெளியே போடப்பட்டிருந்த கட்டில்களில் அவரவர் அகன்ற வானத்தை பார்த்து மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். இப்போது இவர்களின் ரம்மியமான வாழ்க்கை சூழல் என் மனதில் எல்லையற்று வியாபித்திருந்ததால் வழி நெடுகிலும், காட்டுப்பாதையின் திகிலும்,கும்மிருட்டும், மனீஷின் உரையாடல்களும் முறையே என் சிந்தையிலும் செவியிலும் விழவே இல்லை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TUOJ2wPTV0I/AAAAAAAAAVE/wbFGQGAR0mw/s1600/CAVPR0X0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="152" src="https://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TUOJ2wPTV0I/AAAAAAAAAVE/wbFGQGAR0mw/s200/CAVPR0X0.jpg" width="200" /></a></div>
<br />
அந்த சுகமான நினைவுகளோடே என் ப்ளாட்டை அடைந்தேன், சூரியனை ஒத்த வெளிச்சத்தினை மின் விளக்குகள் பாய்ச்ச, இமயமலை சாரலாய் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து காற்று வீச, அந்த கிராமத்து இருளும், மென் தென்றலும் ஏற்படுத்திய தாக்கத்தை இம்மியளவும் அசைக்க கூட முடியவில்லை இவைகளால். மேசையின் மேல் மையமிட்டிருந்த 'மடிச்சனியன்' என்னை உள் விழுங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான்.<br />
<br />
எனக்கும் அந்த சொர்க்க வாழ்கை வாழ வழி இருந்தது, இன்னும் இருக்கிறது. நான் தான் அதற்கான பாதையை தவிர்த்து இந்த பாதையை தேர்ந்தெடுதேன் என் சுற்றுப்புறங்களுடைய விருப்பங்களின் தாக்கத்தினால். என்னை சுற்றி இருந்தவர்கள் யாவரும் நிம்மதி என்பது பொறியியல் துறையிலும், மருத்துவ துறையிலும், மாட மாளிகைகளிலும், நகரத்து, பெருநகரத்து வாழ்க்கையிலும் தான் இருப்பதாக வலியுறுத்தி வழி காட்டினார்கள்.<br />
<b><i><br />
</i></b><br />
<b><i>"நிகழ் கால கஷ்ட நஷ்டங்களை, சுக துக்கங்களை கடந்தகாலமான பிறகு அசைபோட்டு ரசிப்பதையே மனித மனம் விரும்பும் என்ற வாழ்க்கையின் சாராம்சம் புரிந்திருந்தாலும், "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்று நோக்குவதே மனிதர்களின் இயல்பு என்று தெரிந்திருந்தாலும், சில தவிப்புகளை, இழப்புகளை பொறுத்துக் கொள்ள முடிவதே இல்லை".</i></b><br />
<br />
எதை எதையோ தேடி மூச்சிரைக்க ஓடிய கால்கள், வலியெடுத்து நிற்க திரும்பிப் பார்த்தால் எங்கோ வெகு தூரத்தில் தனியாக நான் மட்டும் ஒற்றையாய் நின்று கொண்டிருக்கிறேன். என் இளரத்தச் சூடு என்னை உந்தித் தள்ளிய தூரத்தின் வீரியம் அம்முறை நான் என் விடுமுறைக்கு வீடு சென்ற போது தான் தெரிந்தது.<br />
<br />
தைரியத்தின், ஆளுமையின், ஆண்மையின், அன்பின், அறிவின், உழைப்பின், மொத்த உருவமாய், என் முதல் கதாநாயகனாய் மிடுக்கான தோற்றத்துடன் இருந்த என் தந்தையின் முதுமையில் தான் தெரிந்தது எனது தொலை தூர அர்த்தமற்ற பயணத்தின் விளைவு. செயலில் வேகமாய், புயலாய் நான் பெருமையுடன் கைகளையும், தோள்களையும் பற்றி நடந்த அந்த உத்தமரின் "அப்பாவுக்கு வயசாச்சில்லப்பா" என்னும் சொற்கள் என்னை மிகவும் திடுக்கிடச் செய்து பெரு வேதனைக்குள்ளாக்கியது. இந்த எனது அவசர ஓட்டம் என் தந்தை முதுமை அடைந்து கொண்டிருக்கிறார் என்பதையே என்னை மறக்கச் செய்து விட்டது. என் மனம் அவர் சொற்களை நம்ப மறுத்து மறுபடியும் இறைச்சலிடத் தொடங்கி இருந்தது. "நீ தேர்ந்தெடுத்த பாதை உனக்கு கொடுத்ததென்ன தெரியுமா...??? நீ உன் அருகாமையை விட வேறு என்ன பேரின்பத்தை கொடுத்து விட முடியும் உன் தந்தைக்கு...??"<br />
<br />
<b><i>மயான அமைதி...மனமோ பேரிரைச்சலில்...!!!</i></b><br />
<br />
(படம் தந்த கூகுள்' க்கு நன்றி)<br />
<div style="margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span></div>
<div>
<span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span></div>
</div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com18Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-28879067758028224862011-01-10T19:39:00.000-08:002016-08-13T20:47:17.100-07:00பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...! சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-2)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="margin: 0px;">
<div style="text-align: left;">
<div style="text-align: left;">
அந்த கொரிய பணிப்பெண் என்னுடைய எதிர்வினையின் வேகத்தையும், அதனால் உண்டான வேதனையையும் கூட பொருட்படுத்தாமல், முன்பை விட மிகுந்த புன்னைகையுடன் மறுபடியும் என் தொடை அருகே கையை கொண்டு வந்து என்னை கீழே தலையை குனிந்து பார்க்கும்படி செய்கை செய்தார். குனிந்து பார்த்தேன். அவர் சுட்டிய திசையில் சமையல் வாயு செல்லும் குழாயும், வால்வும் இருந்தது. பணிப்பெண் என் தொடையருகே இருந்த அந்த வால்வை திறக்கத்தான் தனது கையை கொண்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு அப்போதுதான் மண்டையில் உரைத்தது. பச்சை வாத்து மாமிசத்தை கொண்டு வந்து மேஜை நடுவில் தோசைக்கல் போன்ற ஒன்றில் கொட்டி விட்டு சென்றதாக சொன்னேனே..., அது மாதிரி அல்ல அது தோசைக்கல்லே தான். மாமிசத்தை பதமாய் அவரவரே புரட்டி, புரட்டி எடுத்து உண்பதுதான் இந்த ரெஸ்டாரெண்டின் வழக்கம் என்பது எனக்கு அப்போது தான் புரிந்தது. ஒரு வித குற்ற உணர்ச்சியில் தயக்கத்துடன் அந்த பணிப்பெண்ணை நோக்கினேன், அவர் இப்போதும் சிரித்துக்கொண்டே அதே செய்கையை செய்து விட்டு நகர்ந்தார்.</div>
</div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
எனது அருகில் அமர்ந்திருந்த அப்புகுட்டியார் நடந்ததை எல்லாம் கவனித்துவிட்டார் என்பது 'அசிங்கபட்டான் ஆட்டோக்காரன்' என்கிற ரீதியிலான அவரது பார்வையிலையே விளங்கியது. நம் அப்புக்குட்டி ஒருவரை நக்கலடித்து நாறடிப்பதில் படு கில்லாடி, யாருக்கும் சளைத்தவரில்லை. "கண்டவுடன் கன்னிகளை வீழ்த்தும் கட்டழகு காமரூப சுந்தரனா என்ன? நாம் தான் தினமும் நம் திருமுகத்தை நிலைக்கண்ணாடியில் பார்க்கிறோமே...! இரண்டு செகண்டுக்கு மேல நமக்கே ஒரு மாதிரி தானே இருக்கு..!" என்று படு நக்கலான கமெண்டுடன் ஒரு அஷ்டகோணல் சிரிப்பையும் வீசினார் அப்புக்குட்டி சிரத்தையாக. நானும், இருக்கட்டும் அரிசிமூட்டை...., எனக்கு ஒரு சமயம் கிடைக்காமலா போய்விடும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன். </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
<div style="text-align: left;">
ஒவ்வொவொரு மேஜைககும் தனித்தனி பிரத்யேக பணிப்பெண்கள். எங்கள் மேஜைக்கு எனது கை அவசரப்பட்டு அடித்த அதே பணிபெண் தான். சோஜு பாட்டில்களையும், இறால்களையும் ப்ளேட்டில் எடுத்து வந்து மேஜையில் வைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு தடவை அவர் அருகில் வரும்போதெல்லாம் அப்புக்குட்டி என்னை பார்த்து கண்ணடித்து வெறுப்பேற்றி கொண்டே இருந்தார். பார்ட்டி ஆரம்பமானது. முதலில் துறைத்தலைவர் எழுந்து புதிதாக பணியில் சேர்ந்தவர்களை வரவேற்று பேசிவிட்டு, சோஜு பாட்டிலை திறந்து நாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தார். என்னருகில் இருந்த அரிசிமூட்டை "அவர் உன்னை நோக்கித்தான் வருகிறார், கொரிய பழக்கத்தின் படி, நீ எழுந்து நின்று அந்த கோப்பையில் அவர் ஊற்றும் சோஜுவை வாங்கி அவர் முன்பே முழுக்க பருக வேண்டும், மறுத்துவிடாதே! அனைவரும் தவறாக எடுத்துக் கொள்வார்கள்", என்று பெரிய குண்டை தூக்கி போட்டது. "நான் மதுவை தொட்டது கூட இல்லை என்று ஏற்கனவே உன்னிடம் கூறினேன் அல்லவா..." என்று அவருக்கு பதில் அளிக்கும் முன்பே துறைத்தலைவர் பெருத்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் என்னை அடைந்தே விட்டார். </div>
<br />
நான் எழுந்து நின்றேன் ஆனால் வெறுங்கையுடன். என்னிலையை அவரிடம் விளக்கினேன். அவர், "அப்படியா, மது அருந்தும் பழக்கமில்லாதவரா நீங்கள்? என்னை மன்னியுங்கள், வேறு என்ன சாப்பிடுவீர்கள்? " என்று என்னை கேட்டார். நான் ஒரு கோக் என்று கூறினேன். "இந்தியர்கள் பெரும்பாலும் மாமிசமும் உண்பதில்லை என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். நீங்கள் எப்படி?", என்று நான் மறந்து போய் இருந்த வாத்து மாமிசத்தை அவரே நல்ல வேலையாக ஞாபகப்படுத்தினார். ஆமாம்..ஆமாம்... நான் சிக்கனை தவிர வேறு புலால் உணவை உண்டரியாதவன் என்று எடுத்துரைதேன். "இந்த ரெஸ்டாரெண்டில் அது கிடைக்க வாய்ப்பில்லை, சரி நான் ஏற்பாடு செய்கிறேன்", என்று நகர முயன்றவரை, நமது அப்புக்குட்டியார், மதுகோப்பையும், கையுமாய் வழி மறித்தார். அட அசிங்கம் புடிச்ச அரிசிமூட்டை...! மதுப்பழக்கத்தை கை விட்டு விட்டதாக கூறிவிட்டு இப்படி கண்டு கொள்ளாமல் போறவரை துரத்தி போய் தண்ணி வரம் கேட்குதே....., இதை எந்த வகையில் சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டேன்.<br />
<br />
தலைவர் நிரப்பிய கோப்பையை, நாம் நம் கோவிலில் தீர்த்தம் வாங்கும் போது வலது கை முட்டியை இடது கையினால் பிடித்து பவ்யமாய் வாங்குவோமே அதே மாதிரி வாங்கி, அப்படியே அவர் முன்பே ஒரே மடக்கில் உள்தள்ளினார் அப்புக்குட்டி. தள்ளிவிட்டு ஏதோ போர்முனைக்கு சென்று திரும்பிய வீரனைப் போல் ஒரு பெருமித பார்வையையும், பதினைந்து சென்டிமீட்டருக்கு சற்றும் குறையாத இளிப்பையும் என்னை நோக்கி வீசினார். பின் அதே கோப்பையை துறைத்தலைவர் கையில் கொடுத்து, அப்புக்குட்டி ஊற்ற, தலைவர் அதே மாதிரி ஒரே மடக்கில் சரக்கை உள் தள்ளினார். இருவரும் ஏதோ உலகில் யாருமே செய்ய முடியாத அதிசய அற்புதத்தை நிகழ்த்தியதைப் போல் ஒரு அட்டகாச புன்னகையை அனைவருக்கும் செலுத்த, எனக்கா... கொட்ட கொட்ட விழித்திருந்து தாடி தெய்வமான "வீராசாமியின்" பேட்டியை டி.வி.யில் பார்ப்பது போல் டரியலாய் இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSsI4UyvZEI/AAAAAAAAASA/Rr8GxBdbCUU/s1600/CASFPT1V.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSsI4UyvZEI/AAAAAAAAASA/Rr8GxBdbCUU/s200/CASFPT1V.jpg" width="200" /></a></div>
<br />
மறுபடியும் மூன்று முறை தனது கோப்பையை துறை தலைவர் மூலம் நிரப்பி, பின் தன் பெரிய பிரம்மாண்ட கீழ்தேக்க தொட்டியில் நீர் இறக்கம் செய்துவிட்டு, விரிய விரிய சிரித்துக் கொண்டே காண்டாமிருக ஏப்பத்துடன் வந்து அருகில் அமர்ந்தார். நான் ஒன்றுமே சொல்லவில்லை அவரே தொடங்கினார். "கொரிய கலாச்சாரப்படி வயது மூத்தவர்கள் நம் கோப்பையில் மதுவை ஊற்றினால் அதை 'பாட்டம்ஸ் அப்' செய்து குடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவர்கள் பெரிதும் உளம் மகிழ்வர்" என்று லெக்சர் வேறு எடுத்தது அரிசிமூட்டை. மதுப்பழக்கத்தை விட்டு விட்டதாக அவர் சொன்னதைப்பற்றி கேட்டதற்கு, "ஆமாம் ரெண்டு நாளாக தொடவே இல்லை" என்று கண்ணை சிமிட்டி மறுபடியும் அஷ்ட கோணலாய் இளித்தார். பின் அருகில் மஞ்சளும், சிவப்பும் என்று பல வண்ணங்களில் இருந்த பெரிய பெரிய இறால்களை அப்படியே அள்ளி, பானையில் புளியை திணிப்பது போல வாயில் திணித்தார். பச்சை வெண்டைக்காயை கடிக்கும் ஓசை எழவே நான் விவரம் கேட்கும் தொனியில் புருவத்தை உயர்த்தி கேள்விக்குறியை கண்களில் வைத்தேன். "இது செமி குக்ட் பிரான், கிட்டத்தட்ட பச்சை இறால் தான்", என்று சராமாரியாக குண்டு மழை பொழிந்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒவ்வொவொரு மேசையாக சென்று வாங்கி குடிப்பதும், பின் ஊற்றிக்கொடுப்பதுவுமாகவே இருந்தார். தூரத்தில் என் சக பெண் தோழியர்கள் ஏற்கனவே வெளிறி இருக்கும் தங்கள் நிறத்தை குடித்து குடித்து சிவப்பேற்றி கொண்டிருந்தார்கள். </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
எனக்காக வெளியிலிருந்து ஆர்டர் செய்து கொண்டு வரப்பட கோக்கும், சிக்கனும் பணிப்பெண்ணால் எனக்கு பரிமாறப்பட்டது. உண்ண எத்தனிக்கும் போது 'மிஸ்டர் மூன்' வந்து என்னருகில் அமர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார். பார்ப்பதற்கு கம்பி மத்தாப்புக்கு சட்டை, பேன்ட் அணிவித்தது போல் இருப்பார். ரொம்ப நல்ல மனிதர். கொரியர்கள் இந்தியர்களை பற்றி கூறும் முதல் இரண்டு நல்ல விஷயங்கள் மகாத்மா காந்தியும், இந்தியர்களின் கணித திறமையும் ஆகும். அடுத்து அவர்கள் கேட்பதெல்லாமே, இந்நூற்றாண்டிலும் அழியாத அவமானங்களான, சாதிக் கொடுமை, ஏழ்மை, லஞ்சம், மதக்கலவரங்கள், இந்திய-பாகிஸ்தான் ரணம், விளையாட்டு துறையில் மக்கள் தொகைகேற்ற வளர்ச்சியின்மை என்று நீண்டு கொண்டே போகும். இவரும் அப்படியே.</div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
மிஸ்டர் மூன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதை என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். "நீங்கள் ஒரு கொரிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தயாரா?" என்று திடீரென்று சற்றும் எதிப்பாராத ஒரு வினாவை வைத்தார். "அவ்வாறு நீங்கள் விரும்பினால் உங்கள் தாய், தந்தை அதை ஏற்றுக் கொள்வார்களா?", என்றும் கேட்டார். இரு வேறு பட்ட மதம், மொழி, இனம், தேசம், கலாச்சார திருமணத்தை ஏற்று கொள்ளும் பக்குவத்தை என்றோ இந்தியா ஓரளவிற்கு அடைந்து விட்டது என்று எடுத்துரைத்தேன். மேற்கூறிய (சாதி, மதம்) பல விஷயங்களின் தாக்கத்தின் வீரியம் வலுவாக, அவர்களின் பள்ளி புத்தகங்களில் அச்சிடப்பட்டு இருப்பதால், இந்திய துணைக்கண்டத்து மாற்றங்கள் இன்னும் பெரும்பான்மையான கொரியர்களுக்கு எட்டவில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் அவரின் கேள்வியின் நோக்கம் என்னை ஆச்சரியப் படுத்தவில்லை. இது இந்தியாவில் இப்பொழுது ஒரு பெரிய விஷயமில்லை என்று அவருக்கு ஒரு சிறிய விளக்கம் அளித்தேன். இருப்பினும் நான், சடைபின்னி, பூச்சூடி, சேலையணியும் என் தேசத்து பெண்ணையே திருமணம் செய்வேன் என்ற கூறியதும், ஏன் கொரியப் பெண்கள் அழகில்லையா என்று வினவினார். நான் அப்படி சொல்லவில்லை, இந்த மணாளனின் மங்கை எனது தேசத்தில் தான் பிறந்திருக்கிறார் என்று ஏதோ வரிசையில் இந்தியாவில் நமக்கென்று காத்திருப்பதைப் போல், பீற்று பீற்றென்று பீற்றினேன். நான் ஏற்கனவே கூறியது போல் அவர் ரொம்ப நல்லவர். எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே இருப்பார்.<br />
<br />
பசி வயிற்றை பிராண்ட, ஒரு சிக்கன் பீசை எடுத்து வாயில் வைத்தேன். பேரதிர்ச்சி...! சர்க்கரை பொங்கலை போல் இனித்தது சிக்கன். " டேய்...!, இது எங்கேயாவது அடுக்குமா..?, ஜின்ஜெர், சில்லி, 65'ன்னு கண், மூக்கு, வாயெல்லாம் திரவப் பிரவாகத்தை பீறி டச் செய்து, ஒரே கார சாரமா இருக்க வேண்டிய ஒரு சமாச்சாரத்த, நாட்டு சக்கரைய அள்ளி கொட்டி யாருடா இப்படியெல்லாம் புரட்சி பண்றது. வயித்துல ஈரத்துணிய கட்ட வச்சுட்டீங்கலேடா...!" என்று நொந்து அந்த சிக்கனை கண் மற்றும் கைக்கு எட்டாத திசைக்கு நகர்த்தி வைத்து விட்டு கோக்கை மட்டும் குடித்து கொண்டிருந்தேன். தூரத்தில் அரிசிமூட்டை, முழுக்க நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நின்ற இடத்திலயே எட்டு போட்டு லைசென்ஸ் எடுத்து கொண்டிருந்தது. பலரும் அவரவர் இருக்கைகளை விட்டெழுந்து என்னிருக்கை வந்து சில பல வார்த்தை விசாரிப்புகளை முடித்து சென்று தங்கள் தலையாய சோஜு கடமையில் மூழ்கினார்கள். </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
அருகிலிருந்த 'மிஸ்டர் மூன்' இதை ட்ரை பண்ணுங்களேன் என்று வாத்துக்கறியை காட்டினார். "இப்படியெல்லாம் வாயில்லா பூச்சியான வயிற்றுக்கு எதிர்ப்பாராத ஷாக்கெல்லாம் தரக்கூடாது மிஸ்டர் மூன்", என்று அழாத குறையாக நான் கூறினேன். இருந்தாலும், பசி மிகவும் வயிற்றை கிள்ளவே, நானும் முயற்சி செய்ய எத்தனித்தேன். என் ஆசிரியை தாய் கையில் பிரம்புடன் மனக்கண்ணில் தோன்ற, போட்டு விட்டேன் கீழே. மகாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா என்று இந்தியா முழுக்க பணி நிமித்தமாக நான் சுற்றிய காலத்தில் அவர், அசைவம், மாமிசமென்றால், வீட்டில் வந்து தான் செய்வதைத்தான் உண்ண வேண்டும் என்றும், வெளியில் எங்கும் சாப்பிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். நானும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று அவர் கையால் தான் சாப்பிடுவேன். </div>
<div style="margin: 0px;">
<br /></div>
<div style="margin: 0px;">
தாய்க்கு கொடுத்த சபதத்தை காக்க உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் என்ற பேருண்மையை உணர்ந்து என் வாழ்வின் முதல் வாத்துக்கறியை ருசித்தேன். நிஜமாகவே அருமையாய் இருந்தது. மட்டனுக்கும், சிக்கனுக்கும் இடையேயான பதமும், மிருதுவும், ருசியும் கொண்டது வாத்து மாமிசம். ஓரளவுக்கு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, என்னுடைய பிளாட்டுக்கு கிளம்பினேன். என்னை தவிர அனைவரும் ஊற்றவோ...?, உட்கொள்ளவோ...? என்று சோஜுவில் நீந்தி கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் இவர்கள், 'செகண்ட் பார்ட்டி'க்கு இன்னொரு ரெஸ்டாரெண்டிற்கும், 'தேர்ட் பார்ட்டி'க்கு வேறொரு ரெஸ்டாரெண்டிற்கும் சென்று குடித்தும், குடிக்க கொடுத்தும் வீடு செல்ல விடிந்து விடும்.<br />
<br />
அங்கே அப்பு குட்டி, அலங்கோலமாய், தொப்புள் தெரிய, பிளந்த வாயில் இறாலுடன், கண்கள் சொருகி, உத்தரத்தை நோக்கிய முகத்துடன், முக்கி முனகிக் கொண்டு, பார்ப்பதற்கு மல்லாக்கப் போடப்பட்ட ராட்சச பிள்ளைத்தாச்சி தவளை போல் சரிந்து கிடந்தார். மிக ஹைலைட்டான விஷயம் யாரோ சக தோழி அவர் கழுத்தில் தொங்க விட்டுச் சென்றிருந்த ஹேண்ட்பேக் தான். இப்படி ஒரு அசாதாரண நிலையில் நம் அப்புக்குட்டியை அன்று கண்டதை இப்போது நினைத்தாலும் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும். மறு நாள் விசாரித்ததில், டாய்லெட் போன நம் அப்புக்குட்டியார் அங்கயே உட்கார்ந்த நிலையிலேயே நித்திரையில் ஆழ்ந்துவிட, பின் பொல பொலவென்று புலர்ந்த சனிக்கிழமை காலை, அவரை அவர் பிளாட்டிற்கு கொண்டு வந்து கிடத்தி விட்டு போனதாக நண்பர்கள் சொல்லி சொல்லி எல்லா பக்கத்தாலேயும் சிரியோ சிரியென்று சிரித்து விட்டார்கள்...!</div>
<div style="margin: 0px;">
<br />
(படம் தந்த கூகுள்' க்கு நன்றி) </div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span></div>
</div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com20Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-63096176069189645412011-01-05T06:25:00.000-08:002016-08-13T20:47:43.229-07:00பார்ட்டி...பார்ட்டி...பார்ட்டி...! சோஜுவும் வாத்துக்கறியும்...! (பகுதி-1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
லூசு பார்ட்டி, கேனப் பார்ட்டி, கிறுக்கு பார்ட்டி, நக்கல் பார்ட்டி, நமைச்சல் பார்ட்டி என்று மனிதப் பார்ட்டிகளை பற்றிய பதிவு இல்லைங்க இது. </div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSR0NtHpcMI/AAAAAAAAAQ0/FOE0Sw2KmyI/s1600/CA42T32Z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSR0NtHpcMI/AAAAAAAAAQ0/FOE0Sw2KmyI/s200/CA42T32Z.jpg" width="200" /></a></div>
<br />
இந்தப் பதிவு என்னுடைய அலுவலக பார்ட்டி கொண்டாட்டங்களைப் பற்றியது. நானும் ஒரு கடமை தவறாத, கண்ணியமிக்க, கணினியில் இருந்து கணப்பொழுதும் கண்ணசையா பொறிஞர் (என்னுடைய சர்டிபிகேட்'ல அப்படிதாங்க போட்டிருக்கு) ஆன பிறகு எனது விருப்பம், ஆசை, எண்ணம் இது எதற்கும் இடமளிக்காமல், எனது நண்பர்களும், உயரதிகாரிகளும் (இந்தத் தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..!) கருணா காரூண்யமின்றி தர, தரவென்று இழுத்துச் சென்று கும்பலோடு கும்பலாக கும்மி அடிக்க வைத்து, சிரிப்பா சிரிச்சிப் போன மிகச் சில பார்ட்டிகளை பற்றியது தாங்க இந்தப் பதிவு.<br />
<br />
சியோல் வந்து பணியைத் தொடங்கிய ஆரம்பத்தில், துறைத்தலைவர் அளித்த "New Joiners" வரவேற்பு பார்ட்டி தான் என்னுடைய முதல் பார்ட்டி அனுபவம் கொரியாவில். இங்கே மற்ற நிறுவனங்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் பணி புரியும் நிறுவனத்தில் பெரும்பாலும் சராசரியாக வாரம் இரு பார்ட்டி கொண்டாட்டங்களை சந்தித்தே தீர வேண்டியது இன்றியமையாத, தவிர்க்க இயலாத விஷயமாகும். சரி, இப்போது பார்ட்டிக்கு போவோம்.<br />
<br />
மாலை ஆறு மணிக்கு பார்ட்டி துவங்கும் என்று முன்னரே எனக்கு தெரிவித்தாகிவிட்டது. இருந்தாலும் நான் ஒரு வித பயத்தில் அதற்கான முஸ்தீபுகளில் ஆர்வமின்றி கிடா வெட்டுக்கு வந்த மந்திரித்து விடப்பட்ட ஆடு மாதிரி அப்படியே பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தேன். ஏனென்றால் பல வருடங்களாக இந்நாட்டிலேயே பணியாற்றி வரும் சக இந்திய அண்ணன்மார்கள் "ராஜா பாத்து, இவனுங்க ஆச்டோபசு, மீனு, நண்டு, எறா'ன்னு எல்லாத்தையுமே உயிரோட சாப்பிடுவானுகப்பா, அது மட்டுமா மாடு, பன்னி, வாத்து, நாய்'ன்னு ஒன்ன விட மாட்டனுங்க" என்று தங்களின் கொரிய பார்ட்டி அனுபவங்களை அளவுக்கு மீறி என் உட்செலுத்தி விட்டிருந்தார்கள். <br />
<br />
மிஸ்டர் கிருஷ் , மிஸ்டர் கிருஷ்.. என்று இரண்டு முறை சத்தம் வர வேண்டா வெறுப்பாக தலையை திருப்பி சத்தம் வந்த திசையை நோக்கினேன். என்னையும் மீறி என் கண்கள் அகல விரிய; கால்கள் தரையில் உறுதியாக பதிய முயன்றன. இருக்கையை விட்டு எழுந்து நின்றே விட்டேன். ஏனெனில், என் பின்னே என்னுடைய துறைத் தலைவரும், அவர் பின்னே மொத்த டீமும் நின்று கொண்டிருந்தார்கள் என்னை பார்த்து புன்னகைத்தவாறு. சிக்கிச்சிடா சிறுத்த..! இன்னைக்குன்னு பாத்து பலத்த சூறாவளியுடன் பாசமழை கொட்டுதே என்று நினைத்தவாறே புறப்பட்டேன்.<br />
<br />
எங்கள் குழுவில் இந்தியாவிலருந்து நானும், பிலிப்பின்ஸிலிருந்து (அதாங்க தமிழ்'ல 'பிலிப்பைன்ஸ்') ரயான் என்ற நண்பரும் தான் எக்ஸ்பாட் பொறிஞர்கள். நான் நம் பழக்க தோஷத்தில் 'பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ்' என்று கூவிக் கொண்டே இருந்ததை பொறுக்க மாட்டாமல் ரயான், "சதீஷ், இட்ஸ் பிலிப்பின்ஸ், நாட் பிலிப்பைன்ஸ்" என்று மகுடி வாசித்து திருத்தினார். நானும் என்னை திருத்திக் கொண்டேன். <br />
<br />
ஆனால் தம் பிடிச்சு எத்தனை தடவை கொரிய நண்பர்கள் காதில் நான் 'தவில்' வாசிச்சாலும் அவர்கள் இந்தியாவை 'இந்தோ' என்று விளிப்பதை என்னால் மாற்றவே முடியவில்லை. கொரியர்களின் இந்த பழக்கமும் நம் இமயமலை மகான் உரைத்த மகோன்னத மந்திரச் சொற்களில் (அதாங்க.. "இந்த தும்மலு, விக்கலு, இருமலு இதெல்லாம் எப்போ வரும், எப்படி வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. வந்தாலும் நிறுத்த முடியாது, வரலன்னாலும் ஏன்னு கேக்க முடியாது") உள்ள தும்மல், விக்கல் இத்யாதிகளும் ஒரே வகையறாக்களை சார்ந்ததாக இருக்குமோ என்பது எனது ஐயப்பாடு.<br />
<br />
நண்பர் ரயான் இருக்கிறாரே, அவர் பார்ப்பதற்கு அப்பொழுது தான் அமுக்கி பிடித்த 'அரிசிக் கொழுக்கட்டை' மாதிரியே ப்ரெஷாக இருப்பார். சைஸ்'ல இல்லைங்க, ஷேப்'ல. அவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர் "அரிசிமூட்ட அப்புக்குட்டி". ஏனென்றால் அவர் முதுகு ஐம்பது கிலோ அரிசி மூட்டை மாதிரியே, பெரிய சமவெளி போன்று இருக்கும். இந்த பெயர் காரணத்தை ஒரு தடவை அவரிடம் கூறிய போது, அவர் "நான் ரெகுலரா ஜிம் போறதுனால தான் இப்படி பாடிய மெயின்டைன் பண்ண முடியுது" என்றார் படு சீரியசாக. நானும், அவரிடம் "எங்கள் ஊரிலும் உங்களை மாதிரி உசிலைமணி, குண்டு கல்யாணம், சின்னவனே, பெரியவனே" என்று நிறைய பாடி பில்டர்ஸ் இருக்கிறார்கள் என்று அவரை விட முகத்தை மட்டும் சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னேன். வழி நெடுக நம் 'அப்புக்குட்டி' நன்றாக, முனை தீட்டப்பட்டு, அதிகூரான தனது நாவன்மையால் என்னை வெட்டி வெட்டி சாய்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார். இவர் ஏன் என் கழுத்தின் மேல் இந்த குத்தாட்டம் போடுகிறார் என்று எனக்கு விளங்கவே இல்லை.<br />
<br />
நான் ஒரு 'டீடோடலர்' (நெசமாத்தான் நம்புங்க) என்பதையும், இந்திய கோழிகளையும், மீன்களையும் என் தாய் கைச் சமையலில் ரசித்து ருசித்ததை தவிர வேறு புலால் உணவுகளை இம்மியளவும் தீண்டாத 'தாவிரப் பிராணி' என்பதையும் என்னிடமிருந்து அறிந்து கொண்டார். தானும் அப்படிதான் என்று அழுத்தம் திருத்தமாக எனக்கு ஒரு செய்தியும் கொடுத்தார், அப்புக்குட்டி. மேலும், தான் கொரிய உணவுகளில் முற்றிலும் விருப்பமில்லாதவன் என்றும், மது பழக்கத்தையும் கைவிட்டு விட்டதாகவும் என்னிடம் நான் கேட்காமலே ஒரு தன்னிலை விளக்கத்தையும் தரத் தவறவில்லை பல வருடங்களாக இந்நாட்டில் பணிபுரியும் அவர்.<br />
<br />
"இந்தியா பிரிட்டனுடைய காலனி நாடாக இருந்தது இல்லையா, ஆனால், பிலிப்பின்ஸ் அமெரிக்காவின் காலனி நாடாக இருந்தது, அதனால் தான் எங்கள் பெயர்கள், வாழ்க்கைமுறை எல்லாம் வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருக்கிறது", அவர் கொத்திய கொடூர கொத்துகளில் இதுவும் ஒன்று. அவருக்கு தன் நாடு அடிமை படுத்தப்பட்டது தற்போதுள்ள ஒரு கனவு தேசத்தினால் என்பதில் அவ்வளவு பெருமை. நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, செருப்படியில் என்ன நல்ல செருப்படி, பிஞ்ச செருப்படி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSR5P97Tq0I/AAAAAAAAAQ4/9NoTApuGKS8/s1600/CASX7NRA.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://1.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSR5P97Tq0I/AAAAAAAAAQ4/9NoTApuGKS8/s200/CASX7NRA.jpg" width="145" /></a><a href="http://1.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSR5iY4lwOI/AAAAAAAAAQ8/ndJHBNPAcmY/s1600/CA8PYN0P.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="148" src="https://1.bp.blogspot.com/_rSdJThqD_hY/TSR5iY4lwOI/AAAAAAAAAQ8/ndJHBNPAcmY/s200/CA8PYN0P.jpg" width="200" /></a></div>
<br />
ரெஸ்டாரண்டை அடைந்தாகி விட்டது. ரெஸ்ட் ஹட் போன்றதொரு வசீகர தோற்றப் பொலிவுடனான அலங்காரம் என்னை பெரிதும் கவர்ந்தது. என்ன 'மெனு' என்று நம் அப்புக்குட்டியிடம் கேட்டேன். 'சோஜு', 'ஓடிகோகி' என்றார் கொரிய மொழியில், நான் என்னவோ அம்மொழியில் முனைவர் பட்டம் பெற்றவன் என்ற நினைவில். பின் சுதாரித்தவராய், 'கொரியன் ட்ரடிஷனல் பீர் அண்ட் டக் மீட்" என்று மொழி பெயர்த்தார். கொரிய மொழியில் 'கோகி' என்றால் இறைச்சி/கறி என்று பொருள் படும். இந்த 'கோகி' முன் நாம் எந்த பிராணியை சேர்க்கிறோமா அந்த பிராணியின் இறைச்சி என்று பொருள்படும். நம் ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று கூறுவதைப் போல தான். ஓடி (வாத்து), புல் (பன்றி), சோ (மாடு), தாக் (கோழி), கே (நாய்) என்ற வார்த்தைகளுக்கு பின் கோகி சேர்ந்து வரும் அவ்வளவு தான்.<br />
<br />
சரி, பார்ட்டிக்கு வருவோம். நம் அரிசி மூட்டையின் மொழிப்பெயர்ப்பை கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. "என்னது வாத்துக்கறியும், பீருமா..? அட கருமாந்திரம் புடிச்சவனுகளா...! இந்த சைவ ஐட்டமான சிக்கன்'லாம் கிடையாதா..என்று கேட்டதற்கு, "இந்த ரெஸ்டாரன்ட்'ல டக், பிரான் தான் ரொம்ப ஸ்பெஷல்" என்று கூறி மேலும் என் பிராணனை வாங்கியது அரிசிமூட்டை. இந்த சோஜு இருக்கிறதே, இது கொரியர்களின் பாரம்பரிய மது பானம், 20-45% ஆல்கஹல் செறிந்த பானம். <br />
<br />
நான் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருக்கும் போதே எங்கள் இருக்கையின் முன் இருக்கும் மேசையில் அகல, கரிய தோசைக்கல் போன்ற ஒன்றில், கொரிய பணிப்பெண் ஒருவர் பெரிய பாத்திரத்தில் தான் கொண்டு வந்த அந்த பச்சை வாத்து மாமிசத்தை அப்படியே குவியலாக கொட்டி விட்டு சென்றார். என்னுடைய இரு விழிகளும் வெளியே தெறித்து வந்து விழுந்து விட்டதை போன்றதொரு உணர்வு எனக்கு. அப்புறம் சில இலை தழை குவியல்களை கொண்டு வந்து அதன் மேலேயே கொட்டிவிட்டு, என் தொடைக்கு அருகில் தனது கையை கொண்டு வர நான் சடாரென்று என்னையுமறியாமல் அவரது கையை வெடுக்கென தட்டி விட்டேன். கொஞ்சம் பலமாகத்தான். அதற்கப்புறம் தான் மிகப்பெரிய கூத்தெல்லாம் நடந்தது...! ஏற்கனவே பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், அந்த மஹா கூத்தையெல்லாம் அடுத்த பதிவில் பகிர்கிறேன். <br />
<span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span><br />
<span class="Apple-style-span">(படம் தந்த கூகுள்'க்கு நன்றி...!! )</span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span><br />
<span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com5Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-50371652517191850572010-12-31T10:38:00.000-08:002010-12-31T19:35:54.847-08:00வாராய் நீ வாராய்...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TR6cigQeadI/AAAAAAAAAQs/muP3-k2QQX8/s1600/securedownload3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TR6cigQeadI/AAAAAAAAAQs/muP3-k2QQX8/s200/securedownload3.jpg" width="200" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ருசி மறவா நாவினாய்...<br />
துடி துறவா இதயமாய்...<br />
<br />
இமை விலகா துயில்களாய்...<br />
அணை விலகா காதலியாய்...<br />
<br />
மருந்தில்லா மணித்துளிகளாய்...<br />
<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வருந்திலா வருடல்களாய்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">கரைகளறுக்கும் வெள்ளமாய்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">கங்குகளுருக்கும் எண்ணமாய்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">துயர் துரத்தும் இன்பமாய்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">தமிழ் குன்றா நினைவுமாய்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நான் என் கதவு திறக்க காத்திருக்கும் பதுமையே...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வாராய் நீ வாராய்...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">கறைகள் களைந்து... </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">களிக்கச்செய்து போவாய் என் கணங்களை...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வாராய் நீ வாராய்...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><b><span class="Apple-style-span" style="color: #f3f3f3;"><br />
</span></b></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வருக வருக 2011...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நன்றி நன்றி 2010...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><i><b><span class="Apple-style-span" style="color: #351c75;"><br />
</span></b></i></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><i><b><span class="Apple-style-span" style="color: #351c75;"><br />
</span></b></i></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><i><b><span class="Apple-style-span" style="color: #351c75;">அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!</span></b></i></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><i><b><span class="Apple-style-span" style="color: #351c75;">என்றும் அன்புடனும் பாசத்துடனும்...</span></b></i></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><i><b><span class="Apple-style-span" style="color: #351c75;"></span></b></i><span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span></div><span class="Apple-style-span" style="color: red;"><b><br />
</b></span>Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-91716791942090466392010-12-30T06:06:00.000-08:002011-01-01T07:37:50.551-08:00கணங்களாய்.....<div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">இது எனது பதிவின் முதல் கவிதை முயற்சி..! </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">இந்தப்பதிவு அனைவரையும் போல நான் எனது எண்ணங்களின் உணர்ச்சி கொப்பளிப்புகளை தாங்கும் ஒரு பாத்திரமாகவே கருதி தொடங்கினேன். கவிதை முயற்சி பெரும்பாலானவர்களை போல எனது பள்ளி பருவத்திலிருந்தே தொடங்கியது தான். காலவோட்டத்தில், நானும், எனது முக்கியத்துவங்களும் சூழ்நிலைகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு நகர தொடங்கிய பின்னர், அது போன இடம் கூட தெரியவில்லை. சில ஆண்டுகள் கழித்து முயற்சித்த போது என்னால் அந்த பழைய பள்ளிக்கால அனுபவத்தை தொட கூட முடிய வில்லை என்றொரு உணர்வு. இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன். </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">கவிதையை ரசிப்பதென்பது ஒரு தனி அனுபவமே...! ஒரே தளத்தில், ஒரே திசையில், ஒரே வேகத்தில் பயணம் செய்யும் போது மட்டும் தான் சிறிதளவேனும் கவிதைகள் நமக்கு புரிதலை கொடுக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. புரிதல் என்பதை விட உணர்தல் என்பது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். அந்த ஒரே எண்ணத்தின் வடிவாய் இப்போது மறுபடியும் ஒரு முயற்சி...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">இந்த முயற்சிக்கு தூண்டுதல் நானே..! ஆனால் இது இவ்வளவு விரைவில் வெளியிட மறைமுக தூண்டுதல் எனக்கிருக்கும் மிக, மிக சிறிய, 'துக்ளியூண்டு' பதிவுலக நண்பர்களுள் ஒருவரான 'ஆனந்தி'. அவருக்கு நன்றி பகர்தலுடன் உங்களை அழைத்துச் செல்கிறேன் கீழே கவிதை வரிகளின் அருகே...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எழுதிவிட்டேன்.. அவஸ்த்தையா இல்லை அனுபவமா என்பதை உங்கள் மனதின் எதிரொலியாய் வந்து விழும் விரல் வடிக்கும் எழுத்துக்களில் கண்டு கொள்வேன்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><b><span class="Apple-style-span" style="font-size: small;"><u>கணங்களாய்....!</u></span></b></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எடுக்கின்றன கோடி பிறவிகள்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">என் கணங்கள் எனக்காகவே...!</div><div>துளிர்க்கின்ற எண்ணங்களை </div><div>பரிவுடன் தாங்கி...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எண்ணத்தின் அரிதாரங்கள் தான்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எத்தனை...எத்தனை...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">புதைந்து அழுகி, பின் <b><i>முளைவுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வெடித்து விலகி, பின் <b><i>கருவுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">மறித்து கருகி, பின் <b><i>உருவுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">துறந்து நீங்கி, பின் <b><i>உயிருற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வெறுத்து வதங்கி, பின் <b><i>மலர்வுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">வலிந்து குழம்பி, பின் <b><i>தெளிவுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">களைத்து வாடி, பின் <b><i>செறிவுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">கரைந்து உருகி, பின் <b><i>மெருகுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">ஓய்ந்து அடங்கி, பின் <b><i>கிளர்வுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">தனித்து ஒதுங்கி, பின் <b><i>களமுற்று</i></b>,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எண்ணத்தின் அவதாரங்கள் தான்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எத்தனை..எத்தனை...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">துளிர்க்கின்றன எண்ணங்கள்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">கணங்கள் ஊமைகளாகுமோ சொல்லுங்கள்...! </div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எங்கே தொலைந்து போனாய்..</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எனக் கேட்கும் சமூகமே...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">இதோ கேட்டுச்செல்,</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">என் சொற்களை..!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எங்கும் தொலைந்து போய் விடவில்லை...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">எதிலும் உறைந்து போய் விடவுமில்லை...!</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">மறைந்து உதிக்கிறேன்..</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">நான்...</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;">ஒவ்வொரு துளிர்ப்பிலும்...!</div><div>காலத்தின் துடிப்பாகிய...</div><div>கணங்களாய்...!</div><br />
<br />
<br />
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span>Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-7390169579158029762010-12-26T07:37:00.000-08:002010-12-26T17:39:02.374-08:00இன்ட்லி (ஆங்கிலம்) முகப்பில் எனது பதிவு...!!!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRdghlunHkI/AAAAAAAAAQg/yBlhc6oXXSc/s1600/CAS92R8T.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br />
</a><a href="http://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRdghlunHkI/AAAAAAAAAQg/yBlhc6oXXSc/s1600/CAS92R8T.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="74" src="http://3.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRdghlunHkI/AAAAAAAAAQg/yBlhc6oXXSc/s200/CAS92R8T.jpg" width="200" /></a></div><br />
<br />
எனது <span class="Apple-style-span" style="font-size: small; line-height: normal;"><span class="Apple-style-span" style="color: #ffd966; font-style: italic; font-weight: bold;">Wax Museum in Seoul- "Really Amazing..!"</span><span class="Apple-style-span" style="color: yellow; font-style: italic; font-weight: bold;"> </span><span class="Apple-style-span">என்ற </span><span class="Apple-style-span">ஆங்கிலப் பதிவு 'இன்ட்லி பதிவர்களால்' மிகப் பிரபலமானதாக வாக்கிடப்பட்டு, இன்ட்லி முகப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. </span></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small; line-height: normal;"><span class="Apple-style-span"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small; line-height: normal;"><span class="Apple-style-span">அனைத்து 'இன்ட்லி பதிவர்களுக்கும்' மற்றும் 'இன்ட்லிக்கும்' எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!</span></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small; line-height: normal;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small; line-height: normal;">இன்ட்லி முகப்பு URL</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="line-height: normal;"><span class="Apple-style-span" style="font-family: monospace; font-size: 14px; line-height: 16px;"><a href="http://indli.com/story/32876">http://indli.com/story/32876</a></span></span></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="line-height: normal;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small; line-height: normal;">என் ப்ளாக் முகவரி..</span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="line-height: normal;"><a href="http://microscopicalview.blogspot.com/">http://microscopicalview.blogspot.com/</a></span></span><br />
<span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="line-height: normal;"><br />
</span></span><br />
<br />
<br />
<br />
<span class="Apple-style-span" style="color: red;"><b>--விளையாடும் வெண்ணிலா....</b></span>Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-51868551634439409452010-12-24T08:17:00.000-08:002016-08-13T20:43:59.427-07:00குழாயடி குங்பு.....!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><i>ஜன்னல்</i></b>-அமர்ந்த இடத்திலிருந்து நான் உலகை கண்காணிக்க, ரசிக்க உதவும் என் இல்லத்தின் கண்கள்.<br />
<br />
தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரி, உற்றார், உறவினர் இவர்களுக்கு இணையாக என்னுடைய தனிமை, அமைதி, விருப்பம், வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி, சோகம், ஆறுதல், அழுகை, துரோகம், வேட்கை, சிந்தனை, இன்னும் பல எல்லா இன்ப துன்ப நிகழ்வுகளில் அருகிருந்து உடன் பயணித்தவைகள் எனது ஜன்னல்கள்.<br />
<br />
தேவையான போது புத்தனாய் போதனைகளும், தமிழ் தாகமெடுத்து வார்த்தைகளுக்கு அலை மோதும் போதெல்லாம் பாரதியாய் மொழி ஊற்றாயும், பணிச்சுமை அதிகரித்து அல்லாடும் போதெல்லாம் தலைக்கோதி இதமாய் வருடும் தென்றலாயும், சிந்தனை வேட்கைகள் வெளிவர போராடும் போதெல்லாம் எண்ணச் சிறகுகள் படபடக்கச் செய்யும் ஓர் உந்து சக்தியாயும் பல பரிமாணங்களில் 'ஜன்னல்கள்' என் உயிர் அங்கமாய் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.<br />
<br />
தாய், தந்தை பணி நிமித்தமாய் நாங்கள் மாறிய, மாற்றிய வீடுகள் பலவாக இருப்பினும், இடையிலேயே தொலைந்து, அழிந்து, காணாமல் போகும் மனித உறவுகள் போல் அல்லாமல் என்னுடைய '<b><i>ஜன்னல் பந்தங்கள்</i></b>' நினைவுகளாய், பாடங்களாய், அனுபவங்களாய் என்றுமே என்னை விட்டு நீங்கி வற்றிப் போகாமல் என்னுடனேயே பயணிக்கின்றன. இங்கே இனி வரும் பதிவுகளில் நான் எனது சிறு பிராயத்திலிருந்து இது வரை எனது ஜன்னல்களின் வழியே கண்டு, கேட்டு, உணர்ந்து, மகிழ்ந்த சில அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRTF8iXHwHI/AAAAAAAAAQM/sGXkKrFAPk4/s1600/images2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRTF8iXHwHI/AAAAAAAAAQM/sGXkKrFAPk4/s200/images2.jpg" width="195" /></a></div>
<br />
<b><i>என்னை கம்பிகளினூடே வெளியே அழைத்து சென்று உலகை எனக்கு பயிற்றுவித்தும், பழக்கப்படுத்தியும், உலகின் அசைவுகளின் சிறு சிறு காட்சித் துண்டங்களை என் இமைக்கருகே கொணர்ந்து என் விழிப்பசியாற்றிய ஜன்னல்களுக்கு இப்பதிவுகளை சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். </i></b><br />
<br />
அப்போது எனக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். நாங்கள் அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேறிய புதிது. பதினெட்டு குடும்பங்கள். உத்தியோகஸ்த்தர்கள். அனைவரும் அரசு ஊழியர்கள். குடித்தனம் இருப்பவர்களுக்கு அங்கே உள் வளாகத்திலேயே நல்ல குடிநீருக்கென்று 'அடிபம்ப்' ஒன்றை நிறுவி இருந்தது குடியிருப்பு நிர்வாகம். ஏனெனில், நீரேற்றம் செய்யப்பட்டு வீட்டிற்கே வந்து கொட்டும் தண்ணீர் கடல் நீருக்கு சமமானது. குடிப்பதை விடுங்கள்.., குளித்துவிட்டு வந்து தலையை துவட்டுவது என்னமோ முள் கம்பிகளில் துண்டை வைத்து உரசுவது போல் இருக்கும், அத்தனை மஹா சக்தி கொண்டது. அதில் வர, வர வென்று சத்தம் வேறு கேட்கும் துவட்டும் போது. துவட்டி விட்டு பார்த்தால் கணிசமான தலை முடி துண்டிற்கு இடம் மாறி இருக்கும். அவ்வளவு உப்பு சக்தியையும், தாதுக்களையும், கனிமங்களையும் தாங்கிய புனித நீரது.<br />
<br />
குடியிருப்போருக்கு இந்த அடிபம்பில் இருந்து தான் குடிநீர் எடுத்து கொடுக்கப்படும். கமலம்மா, சாந்தி என்று இரண்டு பெண்களும் அவரது பரிவாரங்களும் தான் அனைத்து வீட்டிற்கும் தண்ணீர் பிடித்து கொடுத்து வந்தார்கள். அந்த பம்ப் எங்கள் வீட்டு ஜன்னலுக்கு அருகிலேயே இருந்ததால், எனக்கும் என் சகோதரர்களும் மிகவும் பிடித்தமான எங்கள் தேக்கு நாற்காலியில் அமர்ந்து, ஹார்லிக்ஸ் குடித்துகொண்டே நான் தினமும் பார்க்க நேர்ந்த தினசரி காலை காட்சியின் கதாநாயகர்கள் இவர்களே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRTHQDS_FeI/AAAAAAAAAQQ/mcoFQAcglf4/s1600/images3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TRTHQDS_FeI/AAAAAAAAAQQ/mcoFQAcglf4/s200/images3.jpg" width="200" /></a></div>
<br />
காலை ஐந்து மணிக்கெல்லாம் அவர்களின் பணி தொடங்கி விடும். அதிகாலை சீக்கிரமே தங்களின் தினசரி வாழ்க்கையை தொடங்கும் வீடுகளுக்கு முதல் சென்று காலி குடங்களை எடுத்து வந்து, அதை வரிசைப்படி குழாயின் அடியில் அடுக்கி இடம்பிடிப்பதில் தொடங்கி, தண்ணீரை பிடித்து அதை மறுபடியும் அந்தந்த வீட்டிற்கு கொண்டு போய் வைப்பது வரையிலுமான பதினெட்டு வீட்டிற்குமான அவர்களின் பணி முடிய கிட்டத்தட்ட காலை ஒன்பது மணி ஆகிவிடும். இது மட்டும் அல்லாமல், பல வீட்டிற்கும், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, குழந்தைகளை பள்ளியில் விட்டு பின் மாலை அழைத்து வருவது என்று அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.<br />
<br />
நான் தயாராகி பள்ளிக்கு புறப்படும் போது தான் அவர்களின் சத்தம் குறைந்து அவ்விடம் மயான அமைதியாயிருக்கும். மழை, வெயில், பனி, தீபாவளி, பொங்கல் என எதுவும் அணைக்கட்டி தடுக்க முடியாத பாவ ஜீவன்கள் அவர்கள். "நாம் கொண்டாடும் அதே தீபாவளி அன்றும் அவர்கள் ஏன் எல்லா வீட்டிற்கும் வேலை செய்கிறார்கள்?", "இந்த மழையில் நான் உள்ளே அமர்ந்திருக்கும் போது, இவர்கள், ஒரு கோணி துணியை கவசமாக்கி ஏன் இப்படி சொட்ட சொட்ட நனைகிறார்கள்?" என்று அப்போதெல்லாம் நான் யோசித்ததே இல்லை. ஆனால் இப்போது யோசித்தால், சமூகம், அதன் கோர புத்தியால் பிரசவித்த ஏற்றத்தாழ்வின் தொடக்கமாயும், அதனாலுண்டான விளைவுகளின் மையமாயும் அவர்களை வகைப்படுத்தி வைத்திருந்ததால் தான் என்று புரிகிறது கேள்விகளுக்கு அவசியமில்லாமலேயே. <br />
<br />
சில நண்பர்கள் சொல்லி கேட்டதுண்டு, ஜப்பான் அணுச் சிதைவுக்குள்ளாகி பல குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்ட போது, நாட்டு மக்கள் அவர்கள் அனைவரையும் தத்தெடுத்து, தங்கள் பிள்ளைகளாய் வளர்த்து அந்த நாட்டை சுபிட்ச பூமியாக்கினார்கள் என்று. ஹும்ம்ம்...நாம் நம்மவரை அலட்சியப்படுத்தியே வாழப் பழகிவிட்டோம்.<br />
<br />
கமலம்மாவிற்கு உதவிக்காக, அவரின் மூன்று மகள்களும், சாந்திக்கு உதவியாக அவரின் இரு மகன்களும், அவரின் தாயாரும் இருந்தார்கள். இந்த இரு பரிவாரமும் எப்பொழுதும் கீரியும் பாம்பும் போலத் தான். அதிலும் சாந்தியின் தாயார் ரவிக்கையின்றி, காதில் பெரிய, பெரிய ஓட்டையுடன் பார்ப்பதற்கு மட்டுமல்லாமல், செய்கை, பேச்சு என எல்லாமே "மண் வாசனை" காந்திமதி மாதிரி தான் இருக்கும். எனக்கெல்லாம் அப்போது அந்த பாட்டியை பார்க்கவே பயமாக இருக்கும். அவர் எனது அருகில் வந்தாலே, நான் "மான் கராத்தே" தான்.<br />
<br />
தண்ணீர் பிடிக்கிற இடத்தில் அவர் தான் "தாதா". அவர் வைத்தது தான் சட்டம். யாராவது மீறி நடந்தால் வாயாலே வயலின் வாசித்து காதில் இரத்தம் வர வைத்து விடுவார். சூழ்நிலை கெட்டு, அவர் அப்படி ஒரு உச்ச நிலைக்கு வந்து விட்டால் அனைவரும், காது, மூக்கு, வாய் என்று அனைத்து துவாரங்களையும் அடைத்து அமைதி காத்து விடுவார்கள். "கெழவி மேல உழுந்து புடிங்கிற போறா, வாய மூடிட்டு எட்ட போடி நீ..!", என்று ஒவ்வொரு முறையும் கமலம்மா தான் தன் மகள்களை கட்டுக்குள் கொண்டு வருவார்.<br />
<br />
சில சமயங்களில் நிலைமை கை மீறிப் போய், பாட்டியார், 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி 'வடிவுக்கரசியை' முக்கியமான கட்டத்தில் ஒரு எத்து எத்துவாரே..., அது மாதிரி எல்லை மீறி எத்து எத்தேன்று எத்தியும் இருக்கிறார். அதிக எத்துக்கள் வாங்கியது கமலம்மாவின் நடு மகள் தான். பின்னாளில், அதே மகளைப் பார்த்து அந்த பாட்டியார், மிரண்டு, விழி பிதுங்கி ஓட்டமெடுத்தது ஒரு தனி கதை. அந்த சம்பவத்திற்கு பிறகு பாட்டியார் வாயால் சுளுக்கெடுப்பதை இவரிடத்தில் முற்றிலும் கைவிட்டே விட்டார்.<br />
<br />
கொஞ்ச காலத்திற்கு பிறகு குடியிருப்போர்களே தண்ணீர் பிடித்துக் கொள்ள முடிவெடுக்க, அந்த இரு பரிவாரமும் வேலைக்காக குடியிருப்பிற்கு வருவது முற்றிலும் குறைந்து, பின் நின்றே போனது. அவர்களின் வருகை முற்றிலும் நின்று போன நாட்கள் என் நினைவில் அறவே இல்லை. <br />
<br />
(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">--விளையாடும் வெண்ணிலா....</span></b></div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com6Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-37986957422566681382010-12-11T07:30:00.000-08:002010-12-12T02:16:26.532-08:00என் முதல் அலுவலகப் பயணம்..! (பகுதி-2)<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">கிட்டத்தட்ட 24 மணிநேர ரயில் பயணம், எப்படா கீழே இறங்குவோமென்று ஆகிவிட்டது. ரயில், நிலையத்தில் நிலை கொள்ளும் முன்னரே முதல் ஆளாய் பாய்ந்து இறங்க முயல, என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த 'தோல் பை தோழன்' அருகில் நின்ற உ.பி. மகளிரணியை லேசாக பதம் பார்த்து விட, நான் உரைத்த "சாரி" சமாதானத்தையும் ஏற்காமல் அந்த ஐம்பது வயதையொத்த 'கன்னிபெண்' என்னை ரொம்பவே புகழ்ந்தார். அவர் பேசியது ஹிந்தி என்பதை தவிர வேறு எதுவுமே புரியவில்லை எனக்கு, அதனால் அவர் புகழ்ச்சியை தாங்காமல் விரிய, விரிய சிரித்துக் கொண்டே இருந்தேன். அதற்குள் அங்கே அவரின் இரு ஆண் மெய்க்காப்பாளர்கள் வர நமக்கு கொஞ்சம் உதரலெடுக்க ஆரம்பித்தது. இருக்காதா பின்னே, ஒவ்வொருவரும் வேளைக்கு நோகாமல் இருபது, இருபத்தைந்து ரொட்டியை மல்லுகட்டும் சைசில் இருக்க, "அப்பு! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் " என்கிற ரீதியில் மறுபடியும் ஒரு 'சமாதான சாரியை' சோகமான தொனியில் சொன்னேன். இவர்களும் அந்த கன்னியின் வழியிலேயே எனது சமாதானத்தை விரும்பாமல், அவர்கள் பங்குக்கு புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளி விட்டு சென்றார்கள். சரி விடு! சமுதாயப்பணி என்று வந்துவிட்டால் இதை மாதிரி பல இன்னல்களை, சரிவுகளை சந்தித்து தானே ஆக வேண்டும் என்று என்னையே தேற்றிக்கொண்டு அவர்கள் முதலில் இறங்கி போகட்டுமென்று வழிவிட்டேன். போகும் போது அந்த 'கன்னிப்பெண்' கடைசியாக ஒரு பச்சை மிளகாய் பார்வையை வீச, நாம் "சுப்ரமணியபுரம்" ஜெய் மாதிரி தலையை ஆட்டி கொண்டே "கோல்கெட்" புன்னகையை வீசினோம். </span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">கம்பெனி கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்துச்செல்ல எனக்காக ரயில் நிலைய வாசலில் பெயர்ப் பலகையை பிடித்துக் கொண்டு வாகன ஓட்டுனர் காத்திருப்பார் என்று <span class="Apple-style-span" style="line-height: 18px;">மேனேஜர் கூறியதால் </span>நிலையத்தை விட்டு வெளியே வந்து தேடலானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெயர் பலகையும் கையுமாய் ஒருவரையும் காணோம். மீண்டும் ஒரு முறை ரயில் நிலைய வாசல் வரை சென்று நன்றாக தேடி விட்டு வந்தேன். ம்ம்ஹும்ம் கண்ணில் ஒருவரும் தென் படவே இல்லை; பயணிகளையும், அவர்களை பின் தொடரும் ஆட்டோக்காரர்களையும் தவிர. கொஞ்சம் நேரம் காத்திருப்போம் என்று மூட்டை முடிச்சுகளை கீழே இறக்கி வைத்துக்கொண்டு நின்றிகொண்டிருந்தேன்.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">நிலையத்தில் கூட்டம் கரையத் தொடங்கியது. என்னை இரு கண்கள் நோட்டமிட்டே இருப்பது போன்றதொரு உணர்வு எனக்கு. முரட்டு மீசை, தாடியுடன், என் வலது பக்கத்தில் ஒரு ஐந்தாறு அடி தூரத்திலிருந்து அதற்கு மேல் அழுக்கே ஆகா முடியாத ஒரு ஜிப்பா போன்ற உடையுடன் என்னை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன். நான் பார்த்தவுடன் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஏதோ இப்போது தான் கண் பார்வை கிடைத்து உலகத்தை பார்ப்போது போன்று ஒரு பாவனை செய்வதும், பார்க்காத போது குறுகுறுவென்று பார்ப்பதுமாகவே இருந்தான். "இதென்னடா வம்பா போச்சுன்னு" நான் அவனிருந்த திசைக்கே ஒரு கும்புடு போட்டுவிட்டு கொஞ்சம் முன்னே நகர்ந்து நின்றேன். ஆனால் இப்போது அவன் என்னை நோக்கி வர ஆரம்பித்தான். வந்தான். என்னை தாண்டி சென்றான். பின் ஓரிடத்தில் நின்று மறுபடியும் அதே 'குறுகுறு'. மீண்டும் அவன் ஒரு முறை என்னை கடந்து சென்று தான் முன் நின்ற பழைய இடத்தை அடைந்து 'குறுகுறு'வை தொடர்ந்தான். "நம் பெட்டி படுக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்னு நிக்கிறானா?" என்று யோசித்து, நான், ஏற்கனவே மிக அருகிலிருந்த எனது மூட்டை, முடிச்சுகளை மீண்டும் அருகில் நகர்த்துவதைப் போல் நகர்த்தி எனது எச்சரிக்கையுணர்வைக் காட்டினேன். இல்லை...., ஒரு வேளை இவன் "அவனா நீ பார்ட்டியா?, ஆனா நான் அவன் இல்லடா, போய் வேற எடம் பாரு" என்று நினைத்துக்கொண்டே என்னுடைய கைப்பேசியை பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுக்க முயல, பின்னால் யாரோ என்னை அழுத்தமாக உரசி விட்டு செல்வது போன்று இருந்தது. திரும்பிப் பார்த்தால் நம் 'குறுகுறு' பார்ட்டி தான் என்னை இடித்துவிட்டு ஓடி கொண்டிருந்தான். தடுமாறிய சிறு பதற்றத்தில் என்னை அறியாமல் என் கை பின்சென்று என் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று உறுதி செய்ய முயல, மின்சாரம் தாக்கியதைப் போல் ஓரதிர்ச்சி எனக்கு. பர்ஸ் இல்லை, நான் களவாடப்பட்டுவிட்டேன். </span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">என்னையும் மீறி அனிச்சையாய் திருடன்..., திருடன்... பிடிங்க..., பிடிங்க...! என்று நான் தமிழில் கீதமிசைக்க கேட்பாரில்லை அங்கே. எத்தனை முறை சோர்.. சோர்.. பக்கடோ...பக்கடோ...என்று 'பதினைந்து ரூபாய்' புத்தகத்தில் படித்து பதிவு செய்த ஒரு வாக்கியம் எனக்கு 'அல்வாவும், பக்கோடாவும்' கொடுத்துவிட்டு எங்கே போய் தொலைந்ததென்றே தெரியவில்லை. எனக்கு நன்கு தெரிந்த "ஏக் காவ்ன் மெய்ன் ஏக் கிஸ்ஸான் ரகு தாத்தா" என்ற 'பாக்யராஜ்'ன் இலக்கிய ஹிந்தி கூட மறந்து போக, என்ன செய்வதென்றே தெரியாமல், என்னுடைய மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு அவனை விரட்ட எத்தனித்த போது தான் அந்த அதிசயத்தை எனது இடது பக்கத்தில் பார்த்தேன். ஒரு வினாடியில் போன உயிர், மறு வினாடியில் உடலுடன் ஐக்கியமான அதிசயம். குப்பையில் கிடைத்த கோமேதகமாய் எனது பர்ஸ் கீழே. "கடவுள்னு ஒருத்தன் இருக்கான்யா" என்று ஆனந்தப்பட்டுக்கொண்டே அதை கையிலெடுத்து, எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்தேன். முருகன், பெற்றெடுத்த மவராசியும், மவராசனும், நான்கு விசிடிங் கார்ட்கள், இரு நூறு ரூபாய்ப் பணம், மற்றும் சில குப்பை கூளங்கள் என்று அனைத்துமே இருந்தன. ச்ச் ச்ச்ச்சு ஏமாந்திட்டியே செல்லம்..., என்று ''குறுகுறு' பிக்பாகெட் பார்ட்டியை நினைத்துக் சிரித்துக் கொண்டேன். இதை நண்பர் ஒருவரிடம் பின்னாளில் பகிர்ந்து கொண்ட போது அவர் சொன்னது "அவன் உங்க பர்ஸை அடிச்சிட்டு ஓடிருந்தாலும் ஏமாந்துதான் போயிருப்பான்". ஹும்ம்ம்... வயிற்றெரிச்சல் கேசுகள். </span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">பின்னர் கான்பூர் பேக்டரி 'HR' மேனேஜருக்கு போனை போட்டு காறி, காறி துப்பி விட்டு ஒரு ஆட்டோவை பிடித்துச் சென்றேன். ஆட்டோவில் மீட்டரும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. ஒரு கண்டத்தில் இருந்து இப்போது தான் தப்பி வந்ததினாலும்,களைப்பினாலும், எதை பற்றியும் கேட்காமல் ஏறி அமர்ந்தேன் அது ஒரு வில்லங்கத்தில் விடியுமென்று யோசிக்காமலேயே. நான் அடைய வேண்டிய 'கிளாசிக் அபார்ட்மன்ட்சை' வெறும் ஏழெட்டு நிமிடத்தில் அடைந்தது ஆட்டோ. இந்த மிக நீண்ட!!! ஆட்டோ பயணத்திற்கு அந்த ஆட்டோக்கார புண்ணியவான் கேட்ட இருநூறு ருபாய் கூலியை எதிர்த்து நான் ரோட்டிலயே என்னுடைய ஹிந்தி புலமையால் வாதிட, அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது நான் ஒரு ஹிந்தி தெரியாத மாக்கானென்று. அப்புறம் அந்த வழயில் தொப்பையை குறைக்க ஜாக்கிங் போய்கொண்டிருந்த ஒரு ஜென்டில்மேனை பஞ்சாயத்துக்கு வந்து தலைமையேற்று பைசல் பண்ணித்தருமாறு சர்வதேச மொழியின் துணையால் அழைப்புவிடுத்தேன். அவரும் அழைப்பையேற்று அந்த 'ஆட்டோ சங்கரை' ஒரு பிடி பிடியென்று பிடித்து, செருப்பாலடிக்காத குறையாய், எண்பது ரூபாய்க்கு அவனை படியச் செய்தார். "உங்களை மாதிரி ஆளுங்களாலதான்யா எல்லா ஆட்டோகாரங்களுக்கும் கெட்ட பேர்" என்று ஒரு பஞ்ச் கொடுத்து அடி வயித்திலிருந்து காறி, காறி துப்பிவிட்டு சென்றார். அந்த ஆட்டோக்கார அண்ணாச்சி 'இஞ்சி தின்ன மங்கி' மாதிரி விழித்ததை பார்ப்பதற்கு ரொம்பவே குஷியாயிருந்தது. கான்பூர் கண்ணியவானுக்கு ஒரு ராயல் சல்யுட் அடித்தேன். அந்த அபார்ட்மன்டிலேயே கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கும் மேலான ஜாகை எனது, இருந்தும் அவரை மறுபடியும் ஒரு முறை கூட சந்திக்க இயலாமல் போனது வருத்தமே....!</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">ஆக, பத்து கிலோமீட்டர் நம் செந்தமிழ் நாட்டின் எல்லையை கடந்து விட்டாலே என் தாய் தமிழும் ஆபத்துக்கு உதவிக்குகந்ததில்லை, அரைகுறையாக படித்த பதினைந்து ரூபாய் புத்தகமும் உதவிக்கு வரவில்லை. ஆகையால் முதலில் நாம் வளர்வோம் (மற்ற தேவையான மொழிகளையும் அரவணைத்து), நம் மொழி வளர்க்க. </span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Helvetica Neue', Arial, Helvetica, sans-serif; font-size: small;">(அப்பாடா...! மெசேஜுன்னு ஒரு பிட்ட போட்டாச்சு, இனி நிம்மதியா தூங்குவேன்....!)</span><br />
<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">--விளையாடும் வெண்ணிலா....</span></b>Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-18268560273153797022010-12-08T06:08:00.000-08:002011-03-05T05:09:53.263-08:00என் முதல் அலுவலகப் பயணம்..! (பகுதி-1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அது மும்பையில் புதிய பணியில் சேர்ந்த மிக தொடக்க காலம். முதல் இரு வாரங்கள் 'ஓரியென்டேஷன்' என்ற பெயரில் அனைத்து துறைகளுக்கும் சென்று நேரத்தை கொல்ல முடியாமல் கொன்று, மென்று, தின்று விழுங்கி அப்போதுதான் எனக்கு முதல் நாளில் ஒதுக்கப்பட்ட அதே இருக்கைக்கு திரும்பி இருந்தேன். புது இடம், புதிய மனிதர்கள், புது அணுகுமுறைகள், அந்நியமாய் தோன்றும் எம் பாரத நாட்டின் அலுவல் மொழி (வாழ்க திராவிட கழகங்கள்), அதிசயமாய் தெரிந்த கார்ப்பரேட் வாழ்க்கை, செக்கச்செவேலென்றிருந்த பெண்கள், சிக்கென்றிருந்த அவர்களின் உடை மற்றும் உடல் வாகு, அவர்களை குறிவைத்தே அசையும் இந்தியாவின் பரந்துபட்ட எல்லைகளிலிருந்தும் பறந்து வந்திருந்த ஆண்கள், மணிக்கொரு முறை கும்பல் கும்பலாக உரியடிக்கச்க் செல்வது போல்அவரவர் கைகளில் ஒரு அரை லிட்டர் கோப்பையுடன் காப்பி, டீ, சூப் என்று வித விதமாய் போட்டுத்தாக்கச் செல்வது என எல்லாமே ஒரு வித இனம்புரியாத உணர்வுகளை, அதிர்வுகளை என்னுள் செருகிகொண்டே இருந்தன. இதில் மிகப்பெரிய கூத்து என்னவென்றால், அங்கே போன புதிதில், என்னடா நாம "30 நாளில் ஹிந்தி கற்க" என்ற பதினைந்து ரூபாய் புத்தகத்தை வாங்கி படித்த ஹிந்தியும் இவங்க பேசுற ஹிந்தியும் இவ்வவளவு வித்தியாசமா இருக்கே, ஒன்னுமே புரிய மாட்டேங்குதேன்னு கொஞ்ச நாளாகவே குழப்பமாக இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது அவர்கள் பேசுவது ஹிந்தி அல்ல மராத்தி மொழியென்று. என்ன செய்வது, நமக்கு அப்போதிருந்த உலகறிவு அம்புட்டுதேன் சாமீ...!<br />
<br />
பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு 'வடாபாவ்' கேட்ட விசாரிப்புகளுக்கு இரண்டு வாரங்களாக மற்ற துறையினருக்கு அளித்த அதே பழைய ரெகார்டையே தேய்த்து முடித்தேன். 'ஓரியென்டேஷன்' முடிந்துவிட்டதை என் மூலம் தெரிந்து கொண்ட அவன் நான் இப்போது சும்மாதான் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை என் வாயாலேயே வரவழைத்தான். அதில் ஒரு பேரானந்தம் அவனுக்கு. ஆனால் அவன் ரொம்ப நேரமாக பிசியாகவே இருந்தான்; அவனுடைய பிஸ்கட் பாக்கெட்டுடன். அப்புறம் அறிவுரை வேறு "போய் மேனேஜரை பார்த்து ஏதாவதொரு ப்ராஜெக்ட்ல சேர்க்கசொல்லி கேளு, இங்கே கேக்காம ஒன்னுமே நடக்காது" என்று. என்னடா பாசக்கார பார்ட்டியா இருக்கேன்னு நமக்கும் கொஞ்சம் சந்தோஷம் தான். என்ன.., இந்தா! ஒரு பிஸ்கட் எடுத்துக்கோன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல பயபுள்ள, அதுதான் மனசுக்கு கொஞ்சம் சங்கடமாய் இருந்தது. இருந்தாலும் அவன் சொல் கேட்டு, அங்கேதான் 'ஆப்புக்கு' அஸ்திவாரமடிக்கப்படுகிறது என்று தெரியாமலே ஆவென்று பிளந்த வாயுடன் பாஸ்'ஐ அணுகினேன்.<br />
<br />
அப்படியா! அவ்வளவு ஆர்வமா மவராசா...! என்று கேட்காத குறையாக "நமக்கொரு அடிமை சிக்கிட்டாண்டா" என்கிற தோரணையில் ஒரு நமட்டுச் சிரிப்புடன், இதோ ஒரு பத்து நிமிடம் கழித்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார். மறுபடியும் இடத்திற்கே வந்து அமர்ந்தேன். சுர்ர்ர்ர்ர்ர்ர்.... ஒன்றுமில்லை, நம்ம கடின உழைப்பாளி 'வடாபாவ்' தான் சும்மாவே உட்கார்ந்திருந்த களைப்பு நீங்க இப்போது சூப்'ஐ அரை லிட்டர் கோப்பையில் தளும்ப, தளும்ப நிரப்பி அதில் நீந்திக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு பிறகு புறப்பட தயாரான போது, "எதாவது ப்ரொஜெக்ட்ல போட சொல்லி போர்ஸ் பண்ணி கேளு", மறுபடியும் உழைப்பாளியின் அறிவுரை.<br />
<br />
எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அமர்ந்தவுடன், சில பல அக்கறை செறிந்த வார்த்தைகளுடன் தொடங்கிய மேனேஜர், பின்னர், "உங்களுக்கு ஒரு பெரிய 'ஓரியென்டேஷன்' ப்ரோக்ராமே தயாராக வைத்திருக்கிறேன்" என்று காதில் உறுமி அடித்தார். போச்சுடா! மறுபடியுமா...! இப்பத்தானே சந்து சந்தா ராப்பிச்சைக்காரன் மாதிரி சுத்தி வந்தோம்..! சும்மா இருந்தவன இப்படி சொறி சொறின்னு சொறிஞ்சிவுட்டானே அந்த "வடாபாவ்". நான் ஓரியென்டஷன்'ஐ கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு சொல்லியதற்கு, "அது இன்-ஹவுஸ் ஓரியென்டேஷன், ஜஸ்ட் எ பார்மாலிட்டி, இது 'பேக்டரி ஓரியென்டேஷன்' உங்கள் டெக்னிகல் கேபப்ளிட்டி'ஐ என்ரிச் பண்ணுவதற்கு" நீட்டி முழக்கினார் தலைவர். பின்னர் "இதுல உங்களுக்கு தேவையான எல்லா விபரங்களும் இருக்கு" என்று ஒரு பைல்'ஐ நீட்டி, "நாளை மறு நாள் "புஷ்பக் எக்ஸ்பிரஸ்"ல டிக்கெட் புக் பண்ண சொல்லிட்டேன், உங்க டிக்கட்டை ஈவ்னிங் அட்மின்'ல வாங்கிக்கங்க" என்று முடித்தார். நான் புரியாமல் திருதிருவென்று விழிப்பதை பார்த்து பின் நீண்டதொரு விளக்கமும் கொடுத்தார். எல்லாம் புரிந்துவிட்டது. முதல் அலுவலகப் பயணம் கான்பூரை நோக்கி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடப்பாவிகளா..! தமிழ்நாட்டிலிருந்து வந்து முழுசா ரெண்டு வாரம் கூட ஆகலையே! அதுக்குள்ளயே, எங்கேயோ தண்ணி இல்லாத காட்டுக்கு மூட்டை முடிச்ச கட்ட சொல்றீங்களே, இது எங்கேயாவது அடுக்குமா? என்று எனக்குள்ளயே மிக தைரியமாக, சத்தம் போட்டு கேட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.<br />
<br />
மிக சோகத்துடன் எனது இருக்கைக்கு திரும்பினேன். இப்போது நம்ம "வடாபாவ்" கொஞ்சம் மாறியிருந்தான்; சூப்'பிலிருந்து சிப்ஸ் பாக்கெட்டிற்கு. அகன்ற, விரிந்த சிரிப்புடனான அவனுடைய வரவேற்பும், கிண்டல் பார்வையும் இவனுக்கு ஒரு வேளை நமக்கு நேர்ந்த அந்த மகா கொடுமை தெரிந்திருக்குமோ என்ற ஐயப்பாட்டை எனக்கு ஏற்படுத்தியது. உள்ளே என்ன, என்ன நடந்தது என்று நேரில், அருகில் அமர்ந்து பார்த்ததை போல அப்படியே புட்டு, புட்டு வைத்து "எனக்குத்தான் முன்னாடியே தெரியுமே" என்று கூறி என் ஐயப்பாட்டை நிஜமென்று உறுதியும் செய்தான். "அட நாசமா போறவனே..! உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன், என்னை ஏன்டா இப்படி மாட்டிவிட்ட?" என்று மிக அதட்டலாய் கேட்க தோன்றியது, ஆனால் கேட்காமல் ஒரு நெற்றிக்கண் பார்வை மட்டும் பார்த்தேன். அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் தன் கருமமே கண்ணாய் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் கையை விட்டு துழாவி மகிழ்ந்து கொண்டிருந்தான். "இவன் என்ன பெரிய இம்சையா இருப்பான் போல இருக்கே, இவனுக்கு ஏதாவது நல்லதா, நம்மள ரொம்ப நாள் நெனச்சிட்ருக்க மாதிரி ஏதாவது பண்ணனுமே" என்று ஓர் தீர்மானத்துக்கு வந்தேன். ஆனால் அந்த தீர்மானம் "மகளிர் மசோதா" மாதிரி நிறைவேராமலேயே போய்விட்டது.<br />
<br />
கடைசி வரை இந்தப் பயணம் தள்ளிப் போகாதா என்ற என் நப்பாசை நிராசையாகவே, பொல, பொலவென்று புலர்ந்த ஒரு மந்தகாச காலையில் கான்பூரை அடைந்தேன். எல்லா இந்திய நகரங்களின் ரயில் நிலையத்தின் அதே மிகச்சிறந்த தோற்றப் பொலிவுடனேயும், நறுமணத்துடனேயும் எனது கண்களை சுருங்கச்செய்தும், முழுமையாக மூக்கை அடைக்கச் செய்தும் வரவேற்றது கான்பூர். வெறும் பத்து நாளில் பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிய புத்தகத்திலிருந்து பெருக்கிய ஹிந்தி அறிவு ஒன்றுக்குமே உதவாது என்பதை முதலில் உணர்த்திய சம்பவம் அங்கேதான் நடந்தது. <br />
அதை அடுத்த பகுதியில் பதிகிறேன்.<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">--விளையாடும் வெண்ணிலா....</span></b></div>Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-62348546259696632432010-12-05T00:50:00.000-08:002016-08-13T21:08:26.092-07:00தலைகுனிவு...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;">இதமானதொரு காலை பொழுது. 'Itaewon' செல்வதற்காக காத்திருந்தேன் 'Dongdaemun' சப்வே ரயில் நிலையத்தில். இங்கும் அங்குமாய், குறுக்கும் நெடுக்குமாய், இடதும் வலதுமாய், அணைப்பும் விலகலுமாய், தோழமையும் அந்நியமுமாய், நிசப்தமும் சப்தமுமாய், இளமையும் முதுமையுமாய் என மக்கள் கூட்டம் மொய்த்து கொண்டிருந்த பரபரப்பானதொரு ஞாயிறு. ஆம், இங்கே வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது தான். வார இறுதி நாட்கள் நம்மை போல சியோல்(Seoul) வாழ் கொரியர்களுக்கும் பேரின்பமானதே, ஆனால் நம்மைபோல் வீட்டில் ஓய்வாக செலவிட அல்ல, குடும்பத்துடன் வெளியே சென்று பொழுதை இனிமையாய் கழிக்க. </span><br />
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;">பக்கத்தில் எனதருகே நின்றிருந்த கொரிய இளஞ்ஜோடி தன்னை மறந்து காதல் இன்பத்தில் லயித்திருந்தது அவர்களின் அதீத அணைப்பிலும், பரஸ்பர முத்தங்களிலும் பளிச்சென்று தெரிந்தது. காதல் அவர்களை தம்நிலை மட்டும் மறக்க செய்யவில்லை, அவர்களின் அருகிலயே மூத்த குடிமக்களும், சிறு குழந்தைகளும் நிற்கிறார்கள், அவர்கள் முன் இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்ற எண்ணத்தையும் தான் மறக்கச் செய்திருந்தது. மேற்கத்திய அமெரிக்க கலாசாரத்தை முழுமையாக பருக நினைக்கும் கொரிய இளம் சமுதாயமும், பொருளாதார வளர்ச்சியை மேற்கின் தாக்கத்தினாலேயே வெளிப்படுத்தத் முடியும் என்னும் ஆள்வோர் எண்ணத்தினாலும் கொரியர்கள் தங்களின் மேலான கலாச்சார அடையாளங்களை வெகு விரைவில் இழந்து வருகிறார்கள் என்ற கூற்று பல தருணங்களில் உண்மை என்றே தோன்றுகிறது. கொரியர்கள் அசுர பொருளாதார வளர்ச்சிக்கு கொடுத்த விலை தங்கள் கலாச்சாரம் என்பதை நினைக்கும்போது, இந்தியாவின் தற்போதைய வளர்ச்சியும், நிலையும் கூட கலாச்சார தடம்புரள்வை தவிர்க்க இயலாது என்றே நமக்கு தோன்றுகிறது. ஒரே ஆறுதல், அது அத்தனை விரைவாகவும், ஆழமாகவும், முழு வீச்சுடனும் இருக்காது என்று நாம் கொண்டிருக்கும் விருப்பமும், நம்பிக்கையும் தான். </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span><br />
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;">இத்தனை பரபரப்பான மனிதர்களுக்கு நடுவே, எனது பார்வையும், கவனமும் அங்கே எனது வலது புறத்தில் இருக்கும் படிக்கட்டுகளில், தலையை குனிந்த படியே அமர்ந்திருந்த ஒரு மனிதரின் மேல் நங்கூரமிட்டது. நேர்த்தியான உடை, முடியை மூடி மறைத்த தொப்பி, காலணி என்று அனைத்திலும் ஒரு கொரியரின் அடையாளங்களாய் அம்மனிதர். வயது ஏறக்குரைய 50 களின் இறுதியில் இருக்கலாம்; ஒரு அனுமானமே, ஏனெனில் கொரியர்களை நேரில் பார்த்து வயதை சரியாக கூற முயல்வதே கடினமான ஒன்று, அதுவும் ஒருவரின் முகத்தை பார்க்காமல், வெறும் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து மட்டும் கணித்து கூறுவது முற்றிலும் சிரமமே. வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் அவர்களை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும் காரணிகளாகும். அதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் (Life Expectancy) மக்களின் பட்டியலில் கொரியர்கள் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. </span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPtRmSkiMTI/AAAAAAAAAOU/ZSsOXBpJ_xY/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span class="Apple-style-span" style="font-size: small;"><img border="0" height="200" src="https://1.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPtRmSkiMTI/AAAAAAAAAOU/ZSsOXBpJ_xY/s200/images.jpg" width="196" /></span></a></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">அங்கே நின்றிருந்த யாரும் அவரை கவனித்த மாதிரி தெரியவில்லை, அவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை. காலையிலேயே குடித்துவிட்டு வந்து அமர்ந்திருப்பாரோ?, இல்லை, முதுமையின் வலி தாளாமல் அமர்ந்த நிலையிலேயே தூங்கி விட்டாரோ? அல்லது </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">ஒரு வேளை மயக்கமடைந்து விழுந்து விட்டாரோ? </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">என் மனதில் கேள்வி மேல் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. மிக மெல்லிய உடலசைவுகளே அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை உறுதிபடுத்தி கொண்டிருந்தது. பின் எனது கவனம் ரயிலை நோக்கித் திரும்பியது. </span></span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;">சில நிமிடங்களுக்கு பிறகு அவரின் ஞாபகம் வந்து அவரை நோக்கினேன். அட, அவர் தூக்கத்திலோ, மயக்கத்திலோ இல்லை. அருகில் இருந்த தனது கைப்பையை இழுத்து எதையோ எடுத்துவிட்டு மீண்டும் அதை தமதருகிலே வைத்துக்கொண்டார்; ஆனாலும், தலை குனிந்தே இருந்தது. இதற்கிடையே நான் காத்திருந்த ரயில் வரவே நான் ஏறத் தயாரானேன். கடைசியாக, எதுவோ என்னை அவரை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது. பார்த்தேன், கூட்டம் ரயிலை நோக்கி சூழ்ந்திருந்ததால் அவர் இப்போது மிகத்தெளிவாய் தெரிந்தார் (தலை குனிந்தே). ஒரு ரயில் பயணி அவர் முன் நின்று தன் பையிலிருந்து எதையோ எடுத்தார். நீலநிற கொரிய பணம் '1000 Won'. (கொரியாவின் பணமதிப்பு நிறங்களில் வேறுபட்டது). அந்தப்பயணி அப்பெரியவரை நோக்கி குனிந்த போதுதான் முன்னே ஒரு தட்டு இருப்பதை நான் பார்த்தேன், அதிர்ந்தேன். அவர் ஒரு 'பிச்சைக்காரர்'. கொரியாவில், சியோலில் நான் பார்த்த முதல்'பிச்சைக்காரர்'. அந்தப்பயணி பணத்தை அவரின் பிச்சை பாத்திரத்தில் போட்ட போதும், பின்பு நகர்ந்த போதும் கூட அவரின் தலை குனிந்தே இருந்தது. </span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">உடன் வந்த நண்பரும் இதை கவனித்தே வந்தார். பின் நாங்கள் தொடர்ந்த பயணத்தில், அந்தபெரியவரின் குனிந்த தலையும், அவருடைய அமர்ந்த நிலையும் என்னை அமைதியாக இருக்க விடவேயில்லை. பிச்சையெடுப்பதை எந்த அளவுக்கு கேவலமாக, அவமானமாக கருதியிருந்தால் வெட்கி தலை குனிந்தே அமர்ந்திருப்பார் அவர். <b><i>"தன்னிலை வருந்தத்தக்கதே, அதன் வருத்தத்தையும் மீறியது தன் மனம் தன்னை கேட்கும் கேள்விகளும், செய்யும் கேலிகளும் தான்"</i></b> என்று அவர் சொல்வதாகவே </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இருந்தது எனக்கு அவரின் தலைகுனிவு. என் இந்தியாவில் 'பிச்சை' என்பது ஒரு பெருங்கூட்டத்தின் தினசரி தொழிலாக இருப்பது என் மனக்கண்ணில் நிழலாய்......</span></span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; font-size: small;"><br />
</span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-size: small;">(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)</span></div>
<div style="margin: 0px;">
<b><span class="Apple-style-span" style="color: red;"><span class="Apple-style-span" style="font-size: small;">--விளையாடும் வெண்ணிலா...</span>.</span></b></div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com14Seoul, South Korea37.566535 126.9779691999999637.1637645 126.33252219999996 37.969305500000004 127.62341619999997tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-6205603911439873302010-11-27T21:37:00.000-08:002016-08-13T21:07:55.506-07:00எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-2)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><u><br />
</u></b><br />
<b><u><span class="Apple-style-span" style="font-size: large;">வேண்டும்! மீண்டும் ஒரு புரட்சி....!</span></u></b><br />
<div style="font-size: 14px;">
</div>
<div style="font-size: 14px;">
<div style="line-height: 1.8; margin: 0px;">
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">உலகின் வேறெந்த மூலையிலும் நடக்காத அக்கிரமங்கள் ஜனநாயகம் என்னும் பெயரில் இங்கே அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் நமது தேசம் இன்னும் ஜாதி, மதம், மொழி, மாநிலம், நதிநீர் என்று பல்வேறு பிரிவினையை தூண்டும் காரணிகளுக்கு</span></div>
</div>
</div>
<div>
<div style="text-align: left;">
<div style="line-height: 1.8; margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: normal;"><span class="Apple-style-span" style="line-height: 1.8;">முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளின் அலங்காரப்பேச்சிற்கும், அற்ப இலவசங்களுக்கும் அடிமைகளாய் வாழ்வதையே சிரமேற்கொண்டு செய்து வருகிறது. போர்க்குணம் இல்லாத ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட ஒரு மோசமான தன்மையும், ஊர் பற்றி எறியும்போது, 'நல்லவேளை என் வீட்டிற்கெந்த கேடுமில்லை' என்று நினைக்கும் சுயநலத்தன்மைக்கும், கடும் தண்டனை நம்மைப்போல பொது ஜனத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், நம் பாக்கெட்டிலிருந்து 100 ருபாய் திருடிய ஜேப்படி திருடனை கண்டிக்கும் போக்கில் கூட இந்த விஷயங்களை கருதாத இந்தியாவின் தற்போதைய அசட்டுத்தனத்தை என்னவென்றுறைப்பது. </span></span></div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: normal;"><span class="Apple-style-span" style="line-height: 1.8;"><br />
</span></span></div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: normal;"><span class="Apple-style-span" style="line-height: 1.8;">இந்நாட்டில் எல்லா வளங்களும், நலன்களுமிருந்தும் படித்த எம்மிளைஞர்கள் (தொழிலாளர்களாய்) நாட்டை விட்டும், குடும்பத்தை, சொந்தபந்தங்களை எல்லாம் விட்டும் பணம் சம்பாதிப்பதற்காக இன்றும் வெளிநாட்டிற்கு சென்று (என்னதான் உயரிய வாழ்க்கைமுறையை அனுபவித்தாலும்) இரண்டாந்தர குடிமக்களாக, நவீன உலகின் அனாதைகளாக அலைந்து கொண்டிருப்பதெல்லாம் இவர்களைப்போல ஆக்கச்சிந்தனையில்லாத </span></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">அரசியல்வாதிகளின் கைகளினால் </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">எம்நாடு சீரழிக்கப்படுவதினால்தான். இவர்கள் தாங்கள் மனிதர்களாக கருதப்படுவதற்கான எஞ்சியிருந்த கடைசி காரணத்தையும் இழந்துவிட்டார்கள். </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">பிரதமர் 'மன்மோகன் சிங்' ஒருமுறை கூறுகிறார், "யார் மந்திரி ஆகலாம் யார் ஆகா கூடாது என்று தீர்மானிக்க ஒரு சட்டம் வர வேண்டும்". இதுதான் இந்தியாவின் மோசமான தலையெழுத்தும், விதியும் ஆகும். யார் செய்ய வேண்டுமோ அவர்கள் பல காலங்களாக சொல்வதைத்தவிர வேறு எதையுமே செய்வதில்லை. </span><br />
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;"><br />
</span></div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPIv6i6byuI/AAAAAAAAAMM/6slAYdTG_Jo/s1600/REVOLT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="245" src="https://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPIv6i6byuI/AAAAAAAAAMM/6slAYdTG_Jo/s320/REVOLT.jpg" width="320" /></a></div>
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;"><br />
</span></div>
<div style="margin: 0px;">
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;"></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">இந்திய அரசியலமிப்பின் சில மிக இளகிய கோட்பாடுகளையும், அர்த்தமற்ற சில மரபுகளையும் செவிட்டிலரைந்தார்போல் மிக வன்மையாக உணர்த்திச்சென்ற படிப்பினைகளை பிட்டத்திர்கடியில் போட்டமர்ந்து, அதன் அவசியத்தை மறந்து ஒரு வித மயக்க நிலையிலேயே நாம் லயித்திருப்பதன் விளைவுகளே இந்த ஊழல் சங்கிலிதொடருக்கான மூலமாகும். </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">தாய், தந்தை, மொழி, நிறம் என்று இன்னும் பலவற்றையும் நாம் நமது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கில்லை. ஆனால் நம்மையும் நம் நாட்டையும் வழி நடத்த போகும் நம்முடைய பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் பெரிய கடமையும் பெருமையும் உரிமையாக நம் கைகளில் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தி இந்த மாதிரி கொள்ளை கும்பல்களிடமிருந்து நாட்டிற்கு மறு விடுதலை வாங்கித்தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஆனால், இன்று </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span" style="line-height: 28px;">பல படித்த இந்திய 'மேதைகள்' வாக்களிக்கும்உரிமையை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அவர்கள் எண்ணமெல்லாம் தாங்கள் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்க கொடுக்கப்படும் வாய்ப்பே கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் இடையேதானே, அதற்கு வாக்களிக்காமலேயே இருந்துவிடுவது எவ்வளவோ மேல் என்று. </span><span class="Apple-style-span" style="line-height: 28px;">படிக்காத பாமரனோ ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு தனது தார்மீக உரிமைக்கு அந்த </span></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">ஐந்து,</span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">பத்து ரூபாய்க்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பதுவுமில்லை. இவர்களின் ஆழ்மனதில் படிந்திருக்கும் எண்ணங்கள் களையப்பட வேண்டுமெனில் அவை தேர்தல் விதிமுறைகள், அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு முறைகளில் நாம் பழமையை உறுதியாக பற்றிகொண்டிருப்பதை விடுத்து, தற்கால நடைமுறைக்கு ஏற்ற வகையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து திருத்துவதன் மூலமே சாத்தியமாகும். </span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இந்திய அரசியலமைப்பு சட்டங்களின் பல புனிதத்தன்மையான கொள்கைகளை யாரும் இங்கே குறை சொல்ல வரவில்லை. அந்த கொள்கைகளும் கோட்பாடுகளும் ஓரளவிற்காகவாவது எதற்காகவும், யாருக்காகவும் உருவாக்கப்பட்டதோ அவர்களை சென்றடைய வேண்டுமென்பதே எமது ஏக்கமாகும். மேலும், யார் அதை பொறுப்புடன் கடைப்பிடித்து அதனுடைய உண்மைதன்மையையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்ட வேண்டுமோ அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதிலேயும் அவர்களை தேர்ந்தெடுக்க இருக்கின்ற முறைகளிலேயும் சீர்திருத்தங்கள் மிக ஆழமாகவும் பலமிக்கதாகவும் உருவாக்கப்படவேண்டும் என்பதே இங்கு வாதம். அந்த சீர்திருத்தங்கள் </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">மக்களின் மனதில் அரசியலின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பகத்தன்மையை அதிகரிக்கச்செய்யும் விதத்தில் </span></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">பொது வாழ்க்கையில் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும்.</span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">அவைப்போன்ற சீர்த்திருத்தங்கள் மாத்திரமே சுரண்டப்பட்டு சுரண்டப்பட்டு, ஏமாற்றங்களே எஞ்சி நிற்க்கும், ஓய்ந்து சோர்ந்துபோன இந்தியாவையும், இந்திய மக்களையும் இந்த கண்ணியமற்ற அரசியல் தலைவர்களிடமிருந்தும், அதிகரிகளிடமிருந்தும் காப்பாற்றும். அந்த நல்ல சீர்திருத்தங்கள் மலர வேண்டுமானால் அது ஒரு வீரியமிக்க படையின் தன்னலமற்ற, தளர்ச்சியற்ற தாகத்தினாலுண்டான ஒரு புரட்சியாலேயே ஏற்படுமென்பது திண்ணியம். வீதிக்கு வந்துதான் அதற்கு வித்திட வேண்டுமென்பதுமில்லை. கட்சி, மதம், மொழி, இனம் என்று எந்த பாகுபாடின்றி யார் இந்த மாற்றங்களை, சீர்திருத்தங்களை நமக்கு உறுதி செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நமது ஆதரவும், வாக்கும் என்று நாம் ஒரு கொள்கையுடன் நமது அரசியல்வாதிகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த தருணம் நாம் அவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தருணமாகும். </span></div>
</div>
</div>
</div>
</div>
<div style="font-size: 14px; line-height: 1.8; margin: 0px;">
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></div>
</div>
</div>
<div style="font-size: 14px; line-height: 25px; margin: 0px;">
<div style="text-align: left;">
<div>
<div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு கொண்ட இருக்கும் நாம் ஒரு முறை ஒருங்கிணைந்து வீறு கொண்டு எழுந்ததினாலேயே 1947 ல் ஒரு மாபெரும் புரட்சியின் முடிவாய் விடுதலையடைந்தோம்</span></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">. அதன் பின் எமது தேசம் இதுவரை ஒரு தேசத்தின் ஓட்டு மொத்த எழுச்சியை பல தருணங்களில் பதிய தவறியதாலேயே இன்று நமக்குள்ளேயே ஒரு கூட்டம் நம்மை அடிமைகளாக்கி ஆண்டு வருகிறது. இதோ எனது இணைய நண்பர் ஒருவரின் ஒப்பற்ற வரிகளை உற்று கவனிப்போம். ஆம்.. அதற்க்கான தருணம் வந்துவிட்டது. </span></span></div>
</div>
<div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span></div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><i><b>புறப்படு...! </b></i></span></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><i><b>புரட்சியை கையிலெடு...!</b></i></span></div>
</div>
</div>
<div style="line-height: 1.8;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><i><b>உன்னாலே ஒரு மாற்றம் உண்டாகட்டும்...!</b></i></span></span></div>
</div>
<div style="line-height: 1.8;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><i><b>இனி வரும் உன் இந்தியச்சந்ததிக்காக ...!</b></i></span></span></div>
</div>
</div>
</div>
<div style="font-size: 14px; line-height: 1.8; margin: 0px;">
<div style="text-align: left;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span></div>
</div>
</div>
<div style="font-size: 14px; line-height: 1.8;">
<div style="text-align: left;">
<div>
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span"></span></span><br /></div>
<div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">நண்பர்களே....! </span></span></span></div>
</div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இதோ இந்த எனது கன்னிப்பதிவை கருவாக்கி வெளியிடும் வெறும் இரண்டு நாள் இடைவெளிக்குள்ளாகவே இந்தியாவில் இன்னும் ஒரு அதிர்ச்சி தரும் ஊழல் குற்றச்சாட்டு; அதுவும், தேசத்தின் ஏழை, எளிய, மத்தியதர மக்களின் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ளதும், நாடிதுடிப்பென்று கருதப்படுவதுமான "Life Insurance Corporation of India" விலிருந்து. </span></span></span></div>
</div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span></span></div>
</div>
<div style="margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">எம்முண்டாசு கவி பாடிச்சென்ற வரிகள் ஈட்டியாய் நம் மனதில் </span></span></span></div>
</div>
<div style="line-height: 1.8; margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><b><i><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">நெஞ்சு பொறுக்குதில்லையே..!</span></i></b></span></span></div>
</div>
</div>
<div style="line-height: 1.8;">
<div style="margin: 0px;">
<div style="margin: 0px;">
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><b><i><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்...!</span></i></b></span></span></div>
</div>
<div>
</div>
</div>
</div>
</div>
</div>
<br />
<div style="font-size: 14px;">
<br /></div>
<div style="font-size: 14px;">
<br />
<br />
(படம் தந்த கூகுள்'க்கு நன்றி) </div>
<div>
<span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"><b><i><span class="Apple-style-span" style="color: yellow;">--</span><span class="Apple-style-span" style="color: red;">விளையாடும் வெண்ணிலா....</span></i></b></span></div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com7New Delhi, India28.6139391 77.20902120000005228.3907261 76.886297700000057 28.8371521 77.531744700000047tag:blogger.com,1999:blog-3937860291720385473.post-26571763047219454812010-11-25T06:38:00.000-08:002016-08-13T21:07:12.565-07:00எங்கே போகிறது எனது தேசம்......!!! (பகுதி-1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div style="text-align: justify;">
<div>
<div>
<div style="text-align: left;">
<div style="font-size: 14px; line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="line-height: 14px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span></span></span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="line-height: 14px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: large;"><b><u>உலகம் சிரிக்கும் ஜனநாயக கூத்துகள்</u></b></span><span class="Apple-style-span" style="font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px;"> </span></span></span></span></span></span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="line-height: 14px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: medium;"><span class="Apple-style-span" style="font-size: 14px;"><br />
</span></span></span></span></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="line-height: 14px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">சங்கிலித்தொடராய் ஊழல் குற்றச்சாட்டுகள். </span></span></span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">வெகு குறுகிய காலத்தில் இந்தியாவின் அவலங்களையும் அசிங்கங்களையும் உலகுக்கு போட்டி போட்டுக்கொண்டு அரங்கேற்றி காட்டுகிறார்கள் நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வெட்கமின்றி. </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="line-height: 18px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">2G அலைக்கற்றை ஒதுக்கிய முறையில், காமன்வெல்த் </span></span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"> போட்டிக்கான ஏற்பாடுகளில், 'ஆதர்ஷ் குடியிருப்பு' நிலத்தில் தொடங்கி ஒதுக்கீடுகள் வரை, கர்நாடக முதல்மந்திரியின் மீது அரசின் நிலத்தை மோசடி செய்ததாக, நாட்டின் உயரிய பொதுத்துறை நிறுவனமான 'டாட்டா குழுமத் தலைவர்' வெளியிட்ட முன்னாள் மத்திய காபினெட் அமைச்சரின் மீதான லஞ்ச குற்றச்சாட்டு, தலைநகர் MCDயின் அலட்சியத்தினால் அறுபத்து மூன்று அப்பாவி உயிர்கள் பலி என்று </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">வரிசையாக நெஞ்சடைக்கும் கொடூரங்கள். அதனை தொடர்ந்து அரங்கேறும் பதவி பறிப்புகள், ராஜினாமாக்கள், பாராளுமன்றம் ஸ்தம்பிப்பு, பிரதமரின் மௌனம் மற்றும் செயலின்மை, அதனை கண்டிக்கும் தோரணையில் உச்ச நீதிமன்றம் என்று வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் ஒரு பக்கம், இது எதுவுமே தமக்கு சம்பந்தம் இல்லாத வேற்றுகிரகத்து விஷயங்கள் என்ற தோரணையில், பாவப்பட்ட தன் இந்த நிலைக்கு தான்தான் முழுமுதற் காரணம் என்று என்றோ அறிந்திருந்தும் தன்னிலையை மாற்றியமைக்கும் முயற்சிகளில் கிஞ்சித்தும் ஆர்வம் காட்டாத ஜாதி, மதம், மொழி என்ற வட்டங்களுக்குள் சிக்கி அதன் எதிரொலியாகவே வாழ பழகி கொண்ட பொதுஜனம் மறு பக்கம். நாட்டையே வழி நடத்தும் ஒரு பிரதமமந்திரியின் அசாதாரணமான அமைதியும், அநீதிகளை ஏற்று விழுங்கி வாழ பழகிவிட்ட மக்களின் அதீத ஜீரணா சக்தியும், அலட்சியப்போக்கும், பொறுப்பின்மையும் இந்த நாட்டை எங்கே இழுத்து சென்று கொண்டிருக்கின்றன என்ற அபாய கேள்வியை நமக்குள் விதைக்கின்றன. </span></span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPI0HmBniBI/AAAAAAAAAMQ/iC0H69l07IQ/s1600/SCAMS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://2.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPI0HmBniBI/AAAAAAAAAMQ/iC0H69l07IQ/s200/SCAMS.jpg" width="200" /></a></div>
<span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">'இந்திய ஒலிம்பிக் கமிட்டி' யின் நிரந்தர தலைவர் போன்று பல காலம் அதனுடைய பதவி சுகத்தினை, அதிகாரத்தை முழுவதுமாக அனுபவித்துகொண்டிருக்கும் "சுரேஷ் கல்மாடி", </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">உலகத்தின் பார்வை தேசத்தின் மீது ஆழ்ந்து பதிதிருந்த இந்த காலத்தை மிக நல்ல முறையில் பயன்படுத்தி இந்த மாதிரி சர்வதேச போட்டிகளையும், நிகழ்வுகளையும் </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">வெற்றியுடன் தலைமையேற்று நடத்தி காட்டுவதற்குண்டான வல்லமை பெற்ற நாடென்று நிரூபித்து வெற்றி நடை போட வேண்டிய தருணத்தை இழந்தது மாத்திரமல்லாமல் நாட்டிற்கு </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">தனது கையாலாகத தனத்தாலும், பொறுப்பின்மையாலும் </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">உலகின் மத்தியில் பெரிய களங்கத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார். இதில் சொல்லொணா மனக்குமுறல் யாதெனில், 40௦ சதவிகிதத்திற்கும் மேலான வறுமை கோட்டுக்கு கீழே உழலும் மக்களை கொண்ட ௦ஏழை நாடென்று உலகால் அடைக்குறியிலிடபடுகிற இந்தியா, சுமார் 30000 கோடி ருபாய் </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">(ஊடகங்களின் செய்தி) </span></span><span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">செலவு செய்து இந்த களங்கத்தையும் அவப்பேரையும் பெற்றுள்ளது தான். </span></span></span></div>
</div>
</div>
<div style="font-size: 14px;">
<div style="text-align: left;">
<div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">அதுவும் உலகமஹா ஊழல் என்ற அடைமொழியை தாங்கிகொண்டிருக்கும் இந்த '2G அலைக்கற்றை" ஊழல் இந்தியாவின் ஜனநாயக அரசியலின் வெட்கக்கேடான தற்கால உண்மை நிலையை கூறு போட்டு காட்டிவிட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழே உழன்று கொண்டிருக்கும் ஒரு சாமானிய இந்தியன், அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டிருப்பதாக "CAG" சமர்பித்த அறிக்கையின் அர்த்தங்களும், அது குறிப்பிட்டிருக்கும் தொகையான "ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாயின்" மதிப்பையும், அதன் இழப்பின் வீரியத்தையும் அறிய இன்னும் பல வருடங்கள் பிடிக்கலாம்; ஏன், அவனறிவுக்கு எப்பவுமே எட்டாமல் கூட போகலாம். அன்றாடம் தனது பசி நெருப்பை அணைக்க வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டிருக்கும் அவனுக்கு இதன் மூகாந்திரமும், முடிவுரை எழுதப்படாமலேயே காணாமல் போகப்போகும் ஒரு வரலாற்று கொடூரமும் அவனுடைய சில நூறு ரூபாய்க்கான போராட்ட வாழ்க்கைக்கு முன் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களே. </span></span></div>
<div style="line-height: 1.8;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPI1f5ifXfI/AAAAAAAAAMU/8pv4BEeFj7Y/s1600/2G.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="166" src="https://4.bp.blogspot.com/_rSdJThqD_hY/TPI1f5ifXfI/AAAAAAAAAMU/8pv4BEeFj7Y/s200/2G.jpg" width="200" /></a></div>
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">ஊழலுக்கு மூல காரணமாக குற்றம்சாட்டப்படுகிற அ. ராசா கூறுகிறார், "எனக்கு முந்தைய ஆட்சியில் என்ன முறை கடைபிடிக்கப்பட்டு அலைகற்றை ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதோ அதே முறையைத்தான் நானும் பின்பற்றினேன்" என்று. இவரின் பாட்டனும், முப்பாட்டனும் கோவணத்தை தவிர வேறு ஒன்றையும் அணிந்திருப்பரில்லையே. இவரும் அதே பழைய உடைகளில் வலம் வர வேண்டியது தானே..! இதைசொல்ல ஒரு மந்திரி (இப்போது முன்னாள்). யாரை ஏமாற்ற இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் இந்த கபடதாரி. இவரின் கட்சித்தலைவர் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் "தலைமை கணக்காயர்" கட்டுக்கட்டாக பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கைகளை தனக்கே உரிய பாணியில் கிண்டலுடன் "இந்தத்துறை இதுவரை எல்லா பிரதமர்களுக்கும், முதல்வர்களுக்கும் எதிராகவே அறிக்கைகள் வழங்கியிருக்கிறது" என்கிறார். அதில் என்ன ஆச்சரியம் முதல்வரே..! இதுவரை வந்தவர்கள், ஆண்டவர்கள், ஆளுகிறவர்கள் மிகச்சிலரை தவிர யாவருமே சுரண்டுவதில் கில்லாடிகள் என்றுதான் மக்களுக்கே தெரியுமே..! இவ்வளவு நடந்த பிறகும், நாட்டின் பணம் இவ்வளவு நஷ்டமடைந்த பிறகும், இவர் கொஞ்சம் கூட நாட்டின் மீது அக்கறையின்றி பேசுவதை கண்டு எம் நெஞ்சு துடிக்கிறது. ஒரு அன்பர் தமது வலையில் இப்படி பதிகிறார், </span></div>
<div>
<div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span></div>
</div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">"<i>அவரிடமிருந்து நேர்மையும், கண்ணியத்தையும், நாட்டுப்பற்றையும் இந்த வயதில் கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் இவை என்றுமே அவரிடம் இருந்ததில்லை என்பது மேலும் உறுதியாகிறது. இனிமேலும் இவற்றை நாம் இவரிடம் எதிர்பார்க்க முடியாது</i>"</span></span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;"><br />
</span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px;">'விஸ்வாமித்திரர்' என்கிற பெயரில் அவர் "2G ஸ்பெக்டரும் " பற்றி இட்டுள்ள இடுகைப்பதிவுகளில் மிகவும் அதிர்ச்சியளிக்ககூடிய, பல நம்ப முடியாத விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஊடக உலகத்தின் மிகப்பிரபலமான "பர்க்ஹா தத்", "வீர் சிங்க்வி" போன்றவர்களையும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி அவர் கூறும் கூற்றுக்கள் நம்மை பீதியில் உறைய வைக்கின்றன. ஒருவேளை அவை நம்பகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளாக இருக்கும்பட்சத்திலும், என்னதான் நாம் நமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அடிக்கும் கூத்துக்களிலிருந்தும், வெட்கக்கேடான செயல்களிலிருந்தும் எந்த அசிங்கமான எல்லைக்கு வேண்டுமானாலும் போக எத்தனித்தவர்கள் என்று தெரிந்திருந்தாலும், திரு.விஸ்வாமித்திரரின் பதிவுகளை, இவர்கள் நமது கற்பனா சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு எல்லைக்கோட்டையும் தொடக்கூடுமென்ற ஒரு முன்னுரையை நமக்கு கோடிட்டு காட்டும் எச்சரிக்கை மணியோசையாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதோ அந்த பதிவுகளை நோக்க இந்த இணைப்பை சுட்டவும்..</span></div>
</div>
</div>
</div>
<div style="line-height: 1.8; text-align: left;">
<div>
<span class="Apple-style-span" style="line-height: 18px;"><a href="http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span" style="background-color: #351c75;"><span class="Apple-style-span" style="color: yellow;">http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/</span></span></span></a></span></div>
</div>
</div>
<div style="font-size: 14px;">
<div style="margin: 0px 0px 15px; padding: 0px; text-align: left;">
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இதன் ஆசிரியர், "CWG மற்றும் ஆதர்ஷ்" ஊழல்களைப்பற்றி ஒன்றுமே எழுதாததும் மற்றும் "உதய சூரியன்" குடும்பத்தை அக்கு வேறு ஆணி வேரோக பிரித்து மேயந்திருப்பதும், நமக்கு முறையே ஆச்சரியத்தையும், சில நேரடி சிந்தனைத் தயக்கங்களையும் ஏற்படுத்துவதென்னவோ உண்மை. </span></div>
</div>
</div>
<div style="font-size: 14px;">
<div style="line-height: 1.8;">
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இந்த இரண்டு ஊழல்களும், உலகத்தின் கேலிப்பார்வையை இந்தியாவின் மீது மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் கசிய விட்டு வேடிக்கை பார்த்திருந்தாலும் இந்த 'ஆதர்ஷ் நிலம் மற்றும் அதன் அடுக்குமாடி குடியிருப்பின் ஒதுக்கீட்டில்' அந்த மாநிலத்தின் ஆளும் முதல்வரும், இரண்டு முன்னாள் முதல்வர்களும், முன்னாள் இராணுவ ஜெனரலும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது நமது இதயத்தில் இருந்த </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் நம்மிடமிருந்து பறித்துச்செல்கிறது. இவை அடங்கும் முன்பே கர்நாடக முதல்வர் ஒரு நில மோசடியில் சிக்கி நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">'ஹாங்காங்'ஐ சேர்ந்த "Political & Economic Risk" எனும் கன்சல்டன்சி 2007ல் ஒரு அறிக்கையில் "இந்தியாவின் நிர்வாக கட்டுப்பாடுகள் ஆசியாவிலேயே மிகவும் குறைவான ஆற்றல் கொண்டது, நாட்டின் அரசு அலுவலர்களுடன் பணி புரிவது மிக மிக கடினம்" என்று வெளியிட்டிருக்கிறது. இதுவே </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இவர்கள் நாட்டிற்கு உலகளவில் எந்த மாதிரி பெயரை பெற்றுத்தருகிறார்கள் என்பதற்கு பல கோடி உதாரணங்களில் ஒன்றாகும். </span><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">இவர்களை போல நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் துளியும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கழுவிலேற்றி பொது மக்களின் முன்னிலையில் நிறுத்தி அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். </span></div>
</div>
<div style="line-height: 1.8;">
<div style="text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></div>
</div>
</div>
<div style="font-size: 14px; line-height: 1.8;">
<div style="text-align: left;">
<div>
<span class="Apple-style-span"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"> </span></span></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="line-height: 28px;"><span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;">(படம் தந்த கூகுள்'க்கு நன்றி)</span></span><br />
<b><i><span class="Apple-style-span" style="color: red;">--விளையாடும் வெண்ணிலா....</span></i></b></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "helvetica neue" , "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"></span></span><br /></div>
<div style="line-height: 1.8;">
<span class="Apple-style-span" style="font-family: "arial" , "helvetica" , sans-serif;"><span class="Apple-style-span" style="line-height: 28px;"><br />
</span></span></div>
<div nc="128" style="-ms-overflow-x: hidden; -ms-overflow-y: hidden; background-color: transparent; font-size: 14px; line-height: 1.8; text-align: left; text-decoration: none;">
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Sathish Kumarhttp://www.blogger.com/profile/05061667770880406638noreply@blogger.com0New Delhi, India28.6139391 77.20902120000005228.3907261 76.886297700000057 28.8371521 77.531744700000047